செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Saturday 18 September 2021

வகுப்பு 9. இணைப்பு பயிற்சி 4

  இணைப்பு பயிற்சி 4.

(உரையாடலை அமைத்தல்)

மதிப்பீட்டுச் செயல்பாடு


உரையாடலை நிறைவுசெய்க.

(சூழல்: வகுப்பறை- தமிழ்ப் பாடவேளை)

மாணவர்கள் : வணக்கம் அம்மா!

ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! மித்திரன் கையில் ஏதோ வைத்துள்ளாய்.
என்ன அது?

மித்திரன்  : அம்மா! இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இன்று எனக்குப் பிறந்தநாள்.

ஆசிரியர்  : அப்படியா! மகிழ்ச்சி! அனைவரும் மித்திரனுக்கு கைதட்டிப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள்.

மாணவர்கள் : பிறந்தநாள் வாழ்த்துகள் மித்திரன்!

மித்திரன்  : நன்றி அம்மா!நன்றி நண்பர்களே!

ஆசிரியர்  : வாழ்த்துகள் மித்திரன்! இந்தப் பிறந்தநாளில் ஏதேனும் சிறப்பு உண்டா?
மித்திரன்  : நான் இன்றுமுதல் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப் போகிறேன், அம்மா!

ஆசிரியர்  : அப்படியா!அது என்ன உறுதிமொழி?

மித்திரன் :  என் பிறந்த நாளில் இனி ஆண்டுதோறும் ஐந்து மரக்கன்றுகள் நடுவேன் அம்மா

ஆசிரியர் :  அப்படியா மிக்க மகிழ்ச்சி. நல்ல உறுதிமொழி.

மித்திரன் :  மிக்க நன்றி அம்மா


5. உரையாடலை நிறைவுசெய்க.

கலைமகள் :  வணக்கம் அத்தை!

மங்களம்  : வணக்கம் கலை! உள்ளே வா. உட்கார். என்ன வேண்டும்?

கலைமகள் : எங்கள் பள்ளியில் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சில
செயல்பாடுகள் வழங்கி உள்ளார்கள். அவற்றுள் எனக்குக் கொடுக்கப்பட்ட செயல்பாடு- தகவல்கள் சேகரித்தல் அத்தை!

மங்களம் :  அப்படியா, நல்லது. என்ன தகவல் வேண்டும்? கேள். சொல்கிறேன்.

கலைமகள் :  அத்தை, உங்கள் குடும்பத்தைச் சார்ந்து நான் கேட்கும் விவரங்களை நீங்கள் எனக்குச் சொல்வீர்களா?

மங்களம் :  ம்.. உறுதியாக, கேள் கலை!

கலைமகள் : உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பெரியவர்கள் உள்ளனர் ?

மங்களம் : 5 பெரியவர்கள் உள்ளனர்.

கலைமகள் : யாரெல்லாம் கொரனா தடுப்பூசி போட்டுள்ளீர்கள் ?

மங்களம் :  அனைவருமே போட்டுள்ளோம்.

கலைமகள் :  அப்படியா அத்தை ? விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள். வாழ்த்துகள் அத்தை.

மங்களம் :  நன்றி கலைமகள்

No comments:

Post a Comment