செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 13. படித்துப் பொருளுணர்தல்

 இணைப்பு பயிற்சி 13. 

(படித்துப் பொருளுணர்தல்)

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்


பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிப்போம்.

         மனித வாழ்வில் மரங்கள்

         மரங்கள், மனித உயிர் வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஊசிகள். ஒரு
மனிதனின்தேவைக்கான நீர்,காற்று, உணவு, உடை, உறைவிடம் ஆகிய அனைத்தையும் தருவன மரங்களே. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, காவிரி போன்ற நதிப்பெண்கள் நடனமிடுவதற்கு முகிற்கலைஞனின் சுருதி, கட்டாயம் தேவைப்படுகிறது.அந்த முகிற்கலைஞனின் சுருதிக்கு முத்தாய்ப்பாக விளங்குபவை மலைகளும், மலைகளில்
வாழும் மரங்களுமே. பழங்காலத் தமிழர், மரங்களைத் 'தரு' என்று மறுபெயரிட்டு
அழைத்தனர். மரங்கள் நிழல் தருவதோடு, விலங்குகள் உண்ணுவதற்கும் விவசாயம்
மேம்படுவதற்கும் தழைகளைத் தருகின்றன. வீடு செழிக்கவும் நாடு செழிக்கவும் மரங்கள் காரணமாகின்றன. மழையையும் குளிர்காற்றையும் மக்கள் உடல்நலம் பேணும் மருந்துகளையும் விறகுகளையும் மரங்கள் தருகின்றன. காற்று, மழை, வெயில், பனி
ஆகியவற்றைச் தாங்கிக்கொண்டு நம்மைக் காப்பாற்றும் இத்தருக்கள் இலை, பூ, காய், பழம்,வேர்,மரவுரி, கிளை,வாசனையுள்ள பிசின், பொடி, தளிர் போன்றவற்றைவரையின்றி
வழங்கி மனித வாழ்வில் மகத்தான இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, எல்லா
உயிர்களுக்கும் உயிர் மரங்களே! என்று உறுதியாகக் கூறலாம்.

- சுற்றுச்சூழல் சிந்தனைகள் நூலிலிருந்து....

1. மரங்களால் மனிதன் பெறும் அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிடுக.
 நீர் , காற்று , உணவு , உடை , உறைவிடம் , மருந்து முதலியவை மரங்களால் மனிதன் பெறும் அடிப்படைத் தேவைகள் ஆகும்.

2. பத்தியில் இடம்பெற்றுள்ள உருவகத்தொடர் அல்லாததைக் கண்டறிக

அ)முகிற்கலைஞன் ஆ) நதிப்பெண் 

இ) உயிர்மரங்கள் ஈ) மரவுரி

விடை :  ஈ ) மரவுரி 

3. மரம் நமக்கு வழங்குவன யாவை?

                நீர் , காற்று , உணவு , உடை , உறைவிடம் முதலியவற்றை மரம் நமக்கு வழங்குகிறது.

4. எல்லா உயிர்களுக்கும் உயிராக மரங்கள் விளங்குகின்றன- எவ்வாறு?

              மரங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் , காற்று , உணவு , உடை , உறைவிடம் வழங்கி உயிராக விளங்குகின்றன.

5. பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து உரையாடலை நீட்டித்து எழுதுக.

மலர்விழி : சுற்றுச்சூழலுக்கு மரங்கள்
பெரிதும் துணைபுரிகின்றன என்று
கூறுகிறார்களே வெண்பா! அதனைக் குறித்து நீ ஏதும் அறிவாயா?

வெண்பா : புவி வெப்பமடைதல்,
பருவநிலை மாற்றம், விளைநிலங்கள் அழிதல், நகரமாதல் போன்ற செயல்களே சுற்றுச்சூழல் அழிவிற்குக் காரணம்
என அறிவேன். ஆகவே  மரங்களை 
நட்டுப் பசுமை நிறைந்த நிலமாகச் சுற்றுப்புறத்தை மாற்றுவது நமது கடமையாகும்.
மலர்விழி : புவி வெப்பமடைதல் என்றால் என்ன ? மரங்களை வளர்ப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு வெண்பா ?

வெண்பா :  பூமியின் மேற்புர வெப்பநிலை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது பூமியில் வாழும் உயிரினங்களுக்குப் பேராபத்தாக முடியும். இதைத்தடுக்கும் ஆற்றல் மரங்களுக்கே உண்டு. ஆகவே மரம் வளர்க்க வேண்டும்.



























No comments:

Post a Comment