செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10 .இணைப்பு பயிற்சி 15.

     இணைப்பு பயிற்சி 15

(செய்யுள் நயம் பாராட்டுதல்)

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்


1. திருமந்திரப் பாடலைப் படித்துச் செய்யுள் நயம் பாராட்டுக.

"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".

                                                   -   திருமூலர்
திரண்ட கருத்து 

              கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைத் தந்தால் அது நடமாடும் கோயிலாக விளங்கும் உலக உயிர்களைப் போய்ச் சேராது. ஆனால் ,நடமாடும் கோயிலாக விளங்கும் உலக உயிர்களுக்கு ஒரு பொருளைத் தந்தால் அது கோயிலில் வீற்றிருக்கும் இறைவனைப் போய்ச்சேரும்.

மையக்கருத்து 

        கோயிலில் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். மனித உயிர்களுக்குச் செய்யும் சேவை  இறைவனுக்குச் செய்யும் சேவையாகும்.

தொடை நயம் 

" தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்."

       தொடை என்பதற்குத் தொடுத்தல் என்பது பொருள். பாடலின் அடிகளிலோ , சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது தொடை ஆகும்.

மோனை 

   " குயவனின் கைவண்ணம் பானையிலே 
கவிஞனின் கைவண்ணம் மோனையிலே " 

            பாடலில் அடிதோறும் , சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.

படமாடக் கோயில் பகவற்கு 
நடமாடக் கோயில் நம்பர்க்கு 
நடமாடக் கோயில் நம்பர்க்கு 
படமாடக் கோயில் பகவற்கு 

          முதல் சீரின் முதல் எழுத்தும் மூன்றாம் சீரின் முதலெழுத்தும் ஒன்றிப் ' பொழிப்பு மோனை ' பெற்று வந்துள்ளது.

நடமாட 
நடமாட 

முதற்சீரின் முதல் எழுத்து ஒன்றி ' அடிமோனை ' பெற்று வந்துள்ளது.

எதுகை 

" பாடலுக்கு எது கைகொடுக்கா விட்டாலும் எதுகை கைகொடுக்கும் "

      பாடலில் அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை ஆகும்.

படமாட
நடமாட
நடமாட
படமாட 

       இப்பாடலில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி , ' அடி எதுகை ' பெற்று வந்துள்ளது.

இயைபு 

" செய்யுளிலே இயைபு படிப்போர்க்கு வியப்பு " 

         செய்யுளின் அடி , சீர்களில் இறுதி எழுத்தோ , அசையோ , சீரோ ஒன்றி வருவது இயைபு எனப்படும்.

இப்பாடலில் ஈயில் , ஈயில் என அமைந்து இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணி 

" கழுத்துக்கு மணி செய்யுளுக்கு அணி " 

         சொல்லாலும் பொருளாலும் அழகுபட அமைப்பது அணியாகும். இப்பாடலில் உள்ளதை உள்ளபடிக் கூறும் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

       மேற்கண்ட நயங்கள் பாடலைப் படிப்போர்க்கு மகிழ்வும் கருத்துப் புரிதலுக்கும் துணை செய்கின்றன.

***************     **********   **************************************************************


2. "ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்".

                                  -  கலிங்கத்துப்பரணி

இவ்வடிகளில் பயின்று வரும் நயம் எது?

       இவ்வடிகளில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

****************    *************************************************************************

3. "பழ மணல் மாற்றுமின்
புது மணல் பரப்புமின்".

                                              - மணிமேகலை

இவ்வடிகளில் பயின்றுவரும் நயங்களை எடுத்துக்காட்டுடன் எடுத்து எழுதுக.


பழ  - புது     - மோனை நயம் 

மாற்றுமின்  - பரப்புமின்   --- இயைபு நயம்

No comments:

Post a Comment