செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Saturday 11 September 2021

வகுப்பு 8- தமிழ் - நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

 மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை …………………
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
Answer:
இ) பனையோலைகள்

Question 2.
பானை ……………….. ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
Answer:
ஆ) வனைதல்

Question 3.
‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
Answer:
ஈ) மட்டும் + அல்ல

Question 4.
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிர்க்க ட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
Answer:
அ) கயிற்றுக்கட்டில்

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. முழுவதும் – தொழிலாளி நாள் முழுவதும் உழைப்பார்.

2. மட்டுமல்லாமல் – புயல் காற்று வீசியதில் செடிகொடிகள் மட்டுமல்லாமல் மரங்களும் வீழ்ந்தன.

3. அழகுக்காக – முகத்தின் அழகுக்காக இயற்கைக் களிம்புகளை மட்டும் பயன்படுத்தலாம்.

4. முன்பெல்லாம் – மாணவர்களுக்கு முன்பெல்லாம் ஓடியாடி விளையாடுவதற்கு நேரம் இருந்தது.

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
Answer:
கைவினைக் கலைகள் :
(i) மண்பாண்டங்கள் செய்தல்.
(ii) மூங்கில் கொண்டு பொருள்கள் செய்தல்.
(iii) பனையோலையில் பொருள்கள் செய்தல்.
(iv) பிரம்பினால் பொருள்கள் செய்தல்.
(v) மண் பொம்மைகள் செய்தல்.
(vi) – மரபொம்மைகள் செய்தல்.
(vii) காகிதப் பொம்மைகள் செய்தல்.
(viii) தஞ்சாவூர்த்தட்டு செய்தல்.
(ix) சந்தன மாலையும், ஏலக்காய் மாலையும் செய்தல்.
(x) மாட்டுக்கொம்பு, சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 2.
மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 2

Question 3.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
Answer:
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் :
(i) குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை
(ii) பொம்மைகள்
(iii) பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான்
(iv) பெரிய கூடை
(v) சுளகு
(vi) விசிறி
(vii) தொப்பி
(vii) ஓலைப்பாய்

சிறுவினா

Question 1.
பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
Answer:
(i) முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவர்.
(ii) சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி – வளைப்பர்.
(iii) அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும்.
(iv) பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும்.
(v) பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவர்.

Question 2.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
Answer:
(i) மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment