செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 3 September 2021

கொரோனா வைரஸ் தொற்று- விழிப்புணர்வு - வினா- விடைகள் 2 வது பகுதி

1➤ கொரோனா அடைகாக்கும் காலம் என்பது எத்தனை நாள்

=> 14 நாட்கள்

2➤ நோய் பாதிப்படைந்த பகுதியில் இருந்து வருவோரை எத்தனை நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்

=> 14

3➤ முகக்கவசத்தினை கழட்டும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?

=> 1. முகக்கவசத்தின் முன் பகுதியினை தொடுதல் கூடாது.2. முகக்கவசத்தினை கழட்டுவதற்கு முன்பும் பின்பும் சோப்பு நீர் அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவிவிட வேண்டும்

4➤ கோவிட் 19 காற்றின் மூலம் பரவுமா?

=> நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நோய் பாதித்தவர் தும்மும் போதும் இருமும் போதும் வெளிவரும் நீர்திவாலைகள் மூலமாக பரவுகின்றன.

5➤ நோய் தொற்று பாதித்தவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

=> 1. குடும்ப உறுப்பினர் மற்றும் பிற நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 2. பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆடைகளை பிறர் பயன்படுத்தக்கூடாது.3. அருகில் உள்ள சுகாதார நிலையத்தினை உடனடியாக தொடர்பு கொண்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்

6➤ நோய் பாதித்தவர்களில் அதிகம் எத்தகைய வயதுடையோரை நோய் கடுமையாக பாதிக்கிறது?

=> 1.வயது முதிர்ந்தவர்கள் 2. இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3.நுரையீரல் நோய், கேன்சர், பாதித்தவர்களை நோய் கடுமையாக தாக்குகிறது

7➤ நோய்க்கிருமிகள் பொருட்களின் மீது எத்தனை மணி நேரம் உயிரோடு இருக்கும்

=> .உறுதி செய்யப்படவில்லை. ஆயினும் சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை உயிரோடு இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டடவர்கள் பயன்படுத்திய பொருட்களை சானிடைசர் மற்றும் கிருமி நாசினி கொண்ட சுத்தப்படுத்தியபின் பயன்படுத்துவது சிறந்தது.

8➤ கோவிட் 19 - பற்றி முறையான அறிவிப்பு உலக பன்னாட்டு அமைப்பால் முதன் முதலில் அறிவிக்கப்பட்ட ஆண்டு

=> 2019 டிசம்பர் 31

9➤ இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு வகை தடுப்பூசிகள் யாவை?

=> 1.கோவேக்சின் 2.கோவிஷீல்டு

10➤ உலக கை கழுவும் தினம் என்று கொண்டாடப்படுகிறது

=> அக்டோபர் 15

11➤ கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக செயல்படுவது என்று மனித உடலில் குறிக்கப்படும் பகுதி எது?

=> தொண்டை மற்றும் மூச்சுக்குழாய்

12➤ நோய் கண்டவர்கள் தினமும் செய்ய வேண்டியவை யாவை?

=> 1.கைகளை நன்றாக கழுவுதல் 2. முகக் கவசம் அணிய வேண்டும். 3. தொண்டை பகுதியில் உப்பு நீரால் கொப்பளிக்க வேண்டும்

No comments:

Post a Comment