செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10. இணைப்பு பயிற்சி .7

 இணைப்பு பயிற்சி .7

(செய்யுள் அடிகளின் கருத்தை அறிதல்)

1. பாரதியார் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.


வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

                                                -- பாரதியார்

1. இப்பாடலின் மையக்கருத்தை எழுதுக.

                 தொன்மையும் வளமும் கொண்ட புகழ்மிக்க மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி சிறந்தால் வையம் சிறக்கும்.தமிழ் வாழட்டும். தமிழகம் ஓங்கட்டும்.

2. "வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!" - --- இவ்வடிகளின் பொருளைத் தேர்க.

அ) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!

ஆ) ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும்
வளமான தமிழ்மொழி வாழ்க!

இ ) எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும்
வாழ்க!

விடை :  

ஆ) ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும்
வளமான தமிழ்மொழி வாழ்க!

3. பொருளோடு பொருத்துக

சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்

வையகம்  -  உலகம்

இசைகொண்டு   -   புகழ் கொண்டு 

வண்மொழி    -  வளமிக்க மொழி 

No comments:

Post a Comment