செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Saturday 18 September 2021

வகுப்பு 9. இணைப்பு பயிற்சி -1

இணைப்பு பயிற்சி 1.

(பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்)

 மதிப்பீட்டுச் செயல்பாடு


கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

               உலகின் மிகவும் பழமையானகைவினைக் கலைகளுள் ஒன்று
மண்பாண்டக்கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. நாகை மாவட்டம்
செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மட்கலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.

              இவையனைத்தும் தமிழருக்கும் மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும். குடம், தோண்டி. கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி ஆகிய அனைத்தும் களிமண்ணால் செய்யப்படும் சில
பொருள்களாகும். குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இத்தகைய களிமண் கிடைக்கும்.

      பானை செய்தலைப் பானை வனைதல் என்று சொல்வது மரபு. மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும். மேலும், உடல்நலத்திற்கும்நல்லது. மண் பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். இப்போது மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது.ஆனால், இன்றும்திருவிழாக்களிலும் சமயச்சடங்குகளிலும் மண்பானைகள் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

வினாக்கள்

1.உரைப்பகுதியில் பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது எது?
     
            மண்பாண்டக்கலை

2 ) களிமண்ணால் செய்யப்படும் இசைக் கருவி எது என்பதைத் தெரிவு செய்க.

அ. மத்தளம்
ஆ. கடம்
இ. நாதஸ்வரம்
ஈ. வீணை

விடை : ஆ ) கடம் 

3. வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
 
குடம் 
* தோண்டி 
* கலயம்
* கடம்
* மூடி
* உழக்கு
* அகல்
* உண்டியல்
* அடுப்பு 
* தொட்டி

4. உடல் நலத்திற்கு மண்பாண்டங்கள் எவ்வகையில் உதவுகின்றன?

   *  மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.

  * உடல் நலத்திற்கும் நல்லது.
 
  * மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

5. பாண்டம் செய்யப் பயன்படும் மண் எங்கிருந்து கிடைக்கிறது?

* குளங்கள்
* ஆற்றங்கரைகள் 
* வயல்வெளிகள்

6. பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
 
           மண்பாண்டக்கலை

No comments:

Post a Comment