செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 9 August 2021

வகுப்பு 9- இலக்கணம்- பகுபத உறுப்பிலக்கணம்-- ( சுயமதிப்பீட்டு வினாக்கள்) ( தானே கற்றல் முறையில்)

1➤ பதம் எத்தனை வகைப்படும்
=> இருவகைப்படும்
,
2➤ பகுபத உறுப்புக்களில் ஏற்படும் மாற்றம் ---------
=> விகாரம்
,
3➤ பகுபத உறுப்புக்கள் எத்தனை வகைப்படும்
=> 6
,
4➤ பதம் எத்தனை வகைப்படும் அவை யாவை?
=> இரு வகைப்படும் . அவை 1.பகு பதம் , 2. பகா பதம்
,
5➤ பிரிக்ககூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----------- எனப்படும்
=> பகுபதம்
,
6➤ சொல்லின் முதலில் நிற்பது-------------
=> பகுதி
,
7➤ சொல்லின் இறுதியில் நிற்பது
=> விகுதி
,
8➤ அன், ஆன் என்பது எவ்வகை பால் விகுதி?
=> ஆண்பால் விகுதி
,
9➤ அள், ஆள் - என்பது எவ்வகை பால் விகுதி
=> பெண்பால் விகுதி
,
10➤ வியங்கோள் வினை முற்று விகுதிகள் யாவை?
=> க,இய,இயர்
,
11➤ இறந்த கால இடைநிலைகள் யாவை?
=> த்,ட்,ற்,இன்
,
12➤ கிறு, கின்று , ஆநின்று -- எக் கால இடைநிலைகள்
=> நிகழ்கால இடைநிலைகள்
,
13➤ சாரியை இடத்தில் ”த்” வந்தால் - அது
=> எழுத்துப்பேறு - எனப்படும்
,
14➤ பகுதி , விகுதிக்கு நடவில் காலத்தினை உணர்தாமல் வரும் மெய்யெழுத்து ----------- எனப்படும்
=> எழுத்துப்பேறு எனப்படும்.
,
15➤ அன்,ஆன,இன், அல்,அற்று என்பது --------- எனப்படும்.
=> சாரியை

No comments:

Post a Comment