செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 11 August 2021

வகுப்பு 10- கம்பராமாயணம் -(கவிதைப்பேழை ) வினா- விடைகள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
Answer:
ஈ) அங்கு வறுமை இல்லாததால்


குறுவினா

Question 1.
உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
Answer:

  • ‘கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய்’ என்று சொல்லி எழுப்பினார்கள்.
  • வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.


பலவுள் தெரிக

Question 1.
பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?
அ) சரயு ஆறு
ஆ) கங்கை ஆறு
இ) நர்மதை ஆறு
ஈ) யமுனை ஆறு
Answer:
அ) சரயு ஆறு


Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
அ) செண்பகம்
ஆ) கமுகு
இ) குருக்கத்தி
ஈ) கொன்றை
Answer:
இ) குருக்கத்தி

Question 3.
கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?
அ) இராமகாதை
ஆ) இராமாயணம்
இ) கம்பராமாயணம்
ஈ) இராமாவதாரம்
Answer:
ஈ) இராமாவதாரம்

Question 4.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
Answer:
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்


Question 5.
‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் …………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்
Answer:
அ) பாரதியார்

Question 6.
கம்பர் பிறந்த ஊர் …………….
அ) திருவழுந்தூர்
ஆ) திருக்கடையூர்
இ) திருவாரூர்
ஈ) திருவெண்காடு
Answer:
அ) திருவழுந்தூர்

Question 7.
கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்…………….
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
அ) ஆறு


Question 8.
கம்பர் பிறந்த நாடு …………….
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) சேரநாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சோழ நாடு

Question 9.
சடையப்ப வள்ளலின் ஊர் …………….
அ) தென்காசி
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருநெல்வேலி
ஈ) திருவழுந்தூர்
Answer:
ஆ) திருவெண்ணெய் நல்லூர்

Question 10.
‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று புகழப்பட்டவர் …………….
அ) புகழேந்தி
ஆ) செயங்கொண்டார்
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
இ) கம்பர்


Question 11.
கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) சரசுவதி அந்தாதி
ஆ) பதிற்றுப் பந்தாதி
இ) திருக்கை வழக்கம்
ஈ) ஏரெழுபது
Answer:
ஆ) பதிற்றுப் பந்தாதி

Question 12.
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் …………….
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்

Question 13.
உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
Answer:
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்


Question 14.
‘தாதுகு சோலைதோறுஞ்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்]

Question 15.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது …………….
அ) சரயு
ஆ) யமுனை
இ) பிரம்மபுத்திரா
ஈ) கங்கை
Answer:
அ) சரயு

Question 16.
“தண்டலை மயில்களாட” – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்…………….
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்


Question 17.
‘வண்மையில்லை’ என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது…………….
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
இ) அல்வழி நல்வழி அறிதல்
ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
Answer:
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை

Question 18.
‘ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவா ரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள் யாவை?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Question 19.
பொருத்திக் காட்டுக.
i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
அ) 1, 2, 3, 4
இ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 1, 2, 3, 4


குறுவினா

Question 1.
கம்பரின் பெருமையைச் சுட்டும் தொடர்கள் யாவை?
Answer:

  • கல்வியில் பெரியவர் கம்பர்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்.

Question 2.
கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  • சரசுவதி அந்தாதி
  • ஏரெழுபது
  • சடகோபர் அந்தாதி
  • சிலை எழுபது
  • திருக்கை வழக்கம்

Question 3.
கம்பராமாயணம் குறிப்பு வரைக.
Answer:

  • இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
  • கம்பர் தம் எழுதிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
  • ஆறு காண்டங்களை உடையது.
  • சந்தநயம் மிக்கது.

Question 4.
சரயு ஆறு எவ்விடங்களிலெல்லாம் பரவிப் பாய்ந்ததாக கம்பர் குறிப்பிட்டுள்ளார்?
Answer:

  • மகரந்தம் சிந்துகின்ற சோலைகள்
  • புதுமணல் தடாகங்கள்
  • அரும்புகள் மலரும் பொய்கைகள்
  • நெல்வயல்கள்


Question 5.
கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை? ஏன்?
Answer:

  • வறுமை இல்லாததால் அங்கே கொடை இல்லை.
  • நேருக்கு நேர் போர் புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை.
  • பொய்மொழி இல்லாததால் மெய்மை தனித்து விளங்கவில்லை.
  • கேள்விச் செல்வம் மிகுந்திருப்பதால் அறியாமை இல்லை.

Question 6.
இராமனின் வடிவை எவற்றிற்கெல்லாம் உவமையாக்கியுள்ளார் கம்பர்?
Answer:

  • மை
  • நீலக்கடல்
  • பச்சை நிற மரகதம்
  • கார்மேகம்

Question 7.
கங்கை காண் படலத்தில் வேடனின் கூற்றை எழுதுக.
Answer:

  • யானைகள் கொண்ட சேனையைக் கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில் வீரனல்ல நான்.
  • இராமனுடைய தோழமையை எண்ணாமல் ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை அவர்கள் தனியே கடந்து போக விடலாமா?
  • அவ்வாறு செய்தால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழிசொல்ல மாட்டார்களா? என்று கூறினான்.

No comments:

Post a Comment