செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 11 August 2021

வகுப்பு 8- நோயும் மருந்தும் ( வினா- விடைகள் )

 Question 1.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
ஐம்பெருங்காப்பியங்கள் :
(i) சிலப்பதிகாரம்
(ii) மணிமேகலை
(iii) வளையாபதி
(iv) குண்ட லகேசி
(v) சீவகசிந்தாமணி

ஐஞ்சிறுகாப்பியங்கள் :
(i) உதயண குமார காவியம்
(ii) நாக குமார காவியம்
(iii) யாசோதர காவியம்
(iv) சூளாமணி
(v) நீலகேசி.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உடல்நலம் என்பது …………….. இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
Answer:
இ) பிணி

Question 2.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……….
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நன்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
Answer:
இ) இவை + உண்டார்


Question 4.
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) தாம் இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
Answer:
இ) தாமினி

குறுவினா

Question 1.
நோயின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்.
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

Question 2.
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:
பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகள் :
(i) நல்லறிவு
(ii) நற்காட்சி
(iii) நல்லொழுக்கம்.

சிறுவினா

Question 1.
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

நோயைத் தீர்க்கும் வழிகள் : அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையாகும். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.


சிந்தனை வினா

Question 1.
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
Answer:
(i) கருணையுடன் வாழ்தல்.
(ii) இரக்கத்துடன் இருத்தல்.
(iii) துணிச்சலுடன் செயல்படுதல்.
(iv) நல்ல செயல்களைச் செய்தல்.
(v) கோபத்தை தவிர்த்தல்.
(vi) பிறர் துயர் களைதல்.
(vii) பிறர் துயர் பேணுதல்.
(viii) அறச் செயல்களை செய்தல்.
(ix) பிறர் குற்றத்தை மன்னித்தல்
(x) இனிமையாகப் பேசுதல்
(xi) உண்மையை மட்டும் பேசுதல்.
(xii) விழிப்புணர்வுடன் இருத்தல்.

No comments:

Post a Comment