செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 24 August 2021

வகுப்பு - 9 கவிதைப்பேழை- மணிமேகலை- வினா - விடைகள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள்
ஆ) வடசொற்கள்
இ) உரிச்சொற்கள்
ஈ) தொகைச்சொற்கள்
Answer:
ஈ) தொகைச்சொற்கள்

குறுவினா

Question 1.
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர்.

பொருள் : விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

விளக்கம் : மணிமேகலைக் காப்பியத்தில் முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன் அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான்.


Question 2.
பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
Asnwer:
பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சு வழக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

“மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்”
பகைப் புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் எனச் சிலப்பதிகாரத்திலும்,
“பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” என மணிமேகலையிலும்
“பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;
எட்டினோடு இரண்டும் அறியனையே” என்று திருவாசகத்திலும்
“பன்னரும் கலை தெரி பட்டிமண்டபம்” எனக் கம்பராமாயணத்திலும்
இச்சொல் பயின்றுவருதலை அறியலாம்.

சிறுவினா

Question 1.
உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.2 மணிமேகலை - 1


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்………………………………
அ) சீவகசிந்தாமணி
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) வளையாபதி
Asnwer:
இ) மணிமேகலை

Question 2.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) வசி – மழை
ஆ) கோட்டி – மன்றம்
இ) தாமம் – மாலை
ஈ) செற்றம் – இன்பம்
Asnwer:
ஈ) செற்றம் – இன்பம்


Question 3.
பொருந்தாதனைத் தேர்ந்தெடு. அ) தூதர்
ஆ) சாரணர்
இ) படைத்தலைவர்
ஈ) புலவர்
Asnwer:
ஈ) புலவர்

Question 4.
பின்வரும் கருத்துகளில் மணிமேகலை நூல் கூறும் கருத்து ……….
அ) அன்பே சிவம்
ஆ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
இ) பசியும் நோயும் பகையும் நீங்குக
ஈ) யாதும் ஊரே யாவரும் கேளிர்
Asnwer:
இ) பசியும் நோயும் பகையும் நீங்குக

நிரப்புக

5. இந்திரவிழாவைக் குறிப்பிடும் காதை
Asnwer:
விழாவறைகாதை

6. மணிமேகலையின் காதைகள்
Asnwer:
30


7. கூலம் என்பதன் பொருள் …………
Asnwer:
தானியம்

8. இளங்கோவடிகள் சாத்தனாரை எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
Asnwer:
தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற் புலவன்

சிறுவினா

Question 1.
‘மணிமேகலை’ – நூல் குறிப்புத் தருக.
Answer:
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்த மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் மணிமேகலைத் துறவு என்ற பெயரும் மணிமேகலை நூலுக்கு உண்டு. பௌத்த சமயச் சார்புடையது. கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர். முப்பது காதைகளைக் கொண்ட நூல்.


Question 2.
‘சீத்தலைச் சாத்தனார்’ – குறிப்புத் தருக.
Answer:

  • மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் திருச்சியைச் சேர்ந்த சீத்தலை
  • என்ற ஊரில் பிறந்தவர் என்பர்.
  • கூலம் எனப்படும் தானிய வணிகம் செய்தவர்.
  • தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் என்ற பெயர்களும் உண்டு.
  • சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும், சாத்தனாரும் சமகாலத்தவர்.
    Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.2 மணிமேகலை - 2

Question 3.
ஐம்பெருங்குழு, எண்பேராயத்தை விவரி.

ஐம்பெருங்குழு

  • அமைச்சர்
  • தூதர்
  • சடங்கு செய்விப்போர்
  • சாரணர் (ஒற்றர்)
  • படைத்தலைவர்

எண்பேராயம்

  • கரணத்தியலவர்
  • நகரமாந்தர்
  • கரும விதிகள்
  • படைத்தலைவர்
  • கனகச்சுற்றம்
  • யானை வீரர்
  • கடைக்காப்பாளர்
  • இவுளி மறவர்



















































































































































































































No comments:

Post a Comment