செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 1 February 2021

வகுப்பு -9 - இயல் 1. தொடர் இலக்கணம்

 பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
செய்வினையை, செயப்பாட்டுவினையாக மாற்றும் துணை வினைகள் இரண்டினை சான்றுடன் எழுதுக.
Answer:
செய்வினையை, செயப்பாட்டு வினையாக மாற்ற பயன்படும் துணை வினைகள் படு, பெறு ஆகும்.

Question 2.
வீணையோடு வந்தாள், கிளியே பேசு தொடர் வகையைச் சுட்டுக.
Answer:
வீணையோடு வந்தாள் – செய்தித் தொடர்; கிளியே பேசு – கட்டளைத் தொடர்

சிறுவினா

Question 1.
தன்வினை, பிறவினை, காரணவினைகளை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்திக் காட்டுக.
Answer:
தன்வினை : வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா: பந்து உருண்டது.

பிறவினை :
வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான்

காரணவினை :
எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரணவினை
எ.கா. பந்தை உருட்ட வைத்தான்.


No comments:

Post a Comment