செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 11 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 2

1➤ உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர்

=> தொல்காப்பியர்

2➤ மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்

=> திருமூலர் ( திருமந்திரத்தில்)

3➤ " வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் எனக் கூறியவர்

=> அவ்வையார்

4➤ கிழக்கு என்பதற்கு ......என்ற பெயரும் உண்டு

=> குணக்கு

5➤ கிழக்கிலிருந்து வீசப்படும் காற்று

=> கொண்டல் எனப்படும

6➤ மேற்கு என்பதற்கு ..... என்ற பெயரும் உண்டு

=> குடக்கு

7➤ மேற்கிலிருந்து வீசப்படும் காற்று ......எனப்படுகிறது

=> கோடைக்காற்று எனப்படுகிறது

8➤ வறண்ட நிலப் பகுதியிலிருந்து வீசப்படும் காற்று

=> வெப்பக்காற்று என அழைக்கப்படுகிறது

9➤ வடக்கில் இருந்து வீசப்படும் காற்று .......காற்று என அழைக்கப்படுகிறது

=> வாடைக்காற்று அல்லது ஊதைக்காற்று (குளிர்ச்சியான காற்று)

10➤ தெற்கிலிருந்து வீசும் காற்று ......... காற்று என்று அழைக்கப்படுகிறது

=> தென்றல் காற்று

11➤ " வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற அடிகள் இடம் பெறும் நூல்

=> சிலம்பு (சிலப்பதிகாரம்)

12➤ "பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது "- என்னும் சிற்றிலக்கியத்தைத எழுதியவர்

=> பலபட்டாடைச் சொக்கநாதப் புலவர்

13➤ "செந்தமிழின் பின்னுதித்த தென்றலே "- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்

=> பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது - என்ற நூலில் சொக்கநாதப் புலவர்

14➤ நந்தமிழும் தண்பொருனை நன்னதியும் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் மற்றும் ஆசிரியர் பெயர்

=> பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது (சொக்கநாதப்புலவர்)

15➤ நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி... களி இயல் யானைக்கரிகால் வளவ! - அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறம் (புறநானூறு)

16➤ நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி - என்னும் வரிகளில் சிறப்பிக்கப்படும் மன்னன் மற்றும் சிறப்பித்த புலவர் பெயர் குறிப்பிடுக

=> கரிகால் பெருவளத்தான் பாடிய புலவர் வெண்ணிக்குயத்தியார்

17➤ பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர்

=> கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

18➤ தென்மேற்குப் பருவக்காற்று வீசும் மாசம்

=> ஜூன் முதல் செப்டம்பர் வரை

19➤ வடகிழக்குப்பருவக்காற்று வீசும் மாசம்

=> அக்டோபர் முதல் டிசம்பர் வரை

20➤ இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் தொழில்

=> வேளாண்மைத் தொழில்

21➤ இந்தியாவிற்கு அதிகமான அளவு மழையினைக் கொடுக்கும் பருவக்காற்று

=> தென்மேற்குப் பருவக்காற்று (70 விழுக்காடு )

22➤ "வளிமிகின் வலி இல்லை" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் எழுதிய ஆசிரியர் பெயர்

=> புறம் (புறநானூறு) ஆசிரியர் பெயர்ஐயூர் முடவனார்

23➤ கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது - எனக் கூறியவர்

=> இளநாகனார் (புறநானூற்றில்)

24➤ உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெறும் இடம்.....

=> ஐந்தாம் இடம்

25➤ உலகக் காற்றாலை உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை பெரும் மாநிலம்

=> தமிழ்நாடு

26➤ காற்று மாசுபடுத்தும் உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா பெறும் இடம்

=> இரண்டாம் இடம்

27➤ இந்தியாவில் உயிரிழப்பு தரும் காரணிகளில் ஐந்தாம் இடத்தை பெறுவது

=> காற்று மாசுபாடு

28➤ கதிரவனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தடுப்பது

=> ஓசோன் படலாம்

29➤ ஓசோன் படலத்தை பாதிக்கும் வாயு

=> குளோரோ ஃப்ளோரோ கார்பன்

30➤ குளோரோ புளோரோ கார்பனுக்கு பதிலாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வாயு

=> ஹைட்ரோ கார்பன்

31➤ அமில மழை பொழிவதற்கான காரணம்

=> கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு

32➤ உயிர்வளி - என்று அழைக்கப்படும் வாயு

=> ஆக்சிசன்

33➤ உலகக் காற்று நாள்

=> ஜூன் 15

34➤ தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ்ப்பாடல்கள்

=> திருப்பாவை. திருவெம்பாவை

35➤ ஒன்றே உலகம்- என்ற நூலினை எழுதியவர்

=> தனிநாயக அடிகள்

36➤ நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா "என்று பாராட்டப்படுபவர்

=> பாரதியார்

37➤ "சிந்துக்குத் தந்தை " என்று பாராட்டப்படுபவர்

=> பாரதியார்

38➤ பாரதியார் எந்தந்த இதழ்களில் ஆசிரியராகப்பணியாற்றினார்

=> இந்தியா, சுதேசமித்திரன்

39➤ "பாட்டுக்கொரு புலவன் " எனப் பாராட்டப்பட்டவர்

=> பாரதியார்

40➤ உரைநடையும் கவிதையும் இணைந்து உருவாக்கப்படும் கவிதை வடிவம்

=> வசன கவிதை

41➤ புதுக்கவிதை உருவாகக் காரணமாக இருந்தது

=> வசன கவிதை

42➤ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு -இவ்வடிகள் இடம் பெறும் நூல்

=> முல்லைப்பாட்டு (நட்பூதனார்)

43➤ பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> முல்லைப்பாட்டு (நப்பூதனார்)

44➤ விரிச்சி என்பதன் பொருள்

=> நற்சொல்

45➤ துன்பத்தைத் தரும் பொழுதாக முல்லைப்பாட்டு குறிப்பிடுவது

=> மாலைப்பொழுது

46➤ முல்லைப்பாட்டு .......அடிகளைக் கொண்டது

=> 103 அடிகள்

47➤ பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல்

=> முல்லைப்பாட்டு (103 அடிகள்)

48➤ முல்லைப்பாட்டு--- பாக்களால் இயற்றப்பட்டுள்ளது

=> ஆசிரியப்பா

49➤ தடக்கை - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு

=> உரிச்சொல் தொடர்

50➤ உறுதுயர் - என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு

=> வினைத்தொகை

No comments:

Post a Comment