செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 14 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 6

1➤ நீரற வரியா கரகத்து-இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறநானூறு

2➤ மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கை

=> 11 ஆடல்கள்

3➤ கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடுவது

=> மயிலாட்டம்

4➤ காவடி ஆட்டத்தில் கா என்ற எழுத்திற்கு அர்த்தம்

=> பாரம் தாங்கும் கோல் என்று பொருள்

5➤ இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் காணப்படும்ஆட்டம்

=> காவடியாட்டம்

6➤ வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என்று குறிப்பிடப்படுவது

=> தேவராட்டம்

7➤ தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி

=> தேவதூந்துபி உறுமி

8➤ தேவராட்டத்தில் ஆடுபவர்களின் எண்ணிக்கை

=> 8 முதல் 13 கலைஞர்கள்

9➤ தேவராட்டம்போன்று ஆடுப்படும் ஆட்டம்

=> சேர்வை ஆட்டம்

10➤ போலச் செய்தல் பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலை

=> பொய்க்கால் குதிரை ஆட்டம்

11➤ பொய்க்கால் குதிரை ஆட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> கச்சிகொடி

12➤ பொய்க்கால் குதிரை ஆட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> குதிரைக் களி

13➤ தகக.தகதகக தந்தத்த...என்ற திருப்புகழ் நூலில்அருணகிரிநாதரால் குறிப்பிடப்படும் இசைக்கருவி

=> தப்பாட்ட இசைக்கருவி (பறை என்றும் அழைப்பர்)

14➤ அருணகிரிநாதரின் திருப்புகழ் தொல்காப்பியரின் தொல்காப்பியம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் இசைக்கருவி

=> தப்பாற்ற இசை கருவி அல்லது பறை இசைக்கருவி

15➤ தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாகியவர்

=> ந.முத்துசாமி

16➤ கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

=> ந.முத்துசாமி

17➤ தெருக்கூத்துக் கலைக்காக தாமரைத் திரு விருதைப் பெற்றவர்

=> ந. முத்துசாமி

18➤ திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கலை

=> தெருக்கூத்து

19➤ இசை ,ஓவியம், நடனம் |நாடகம் ,பல குரல் ஆகியவை இணைந்து

=> தோற்ப்பாவை கூத்து

20➤ திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் சுட்டப்படும் கலை

=> தோற்பாவைக் கூத்து

21➤ ராசராச சோழன் தெரு எங்கே உள்ளது

=> மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்

22➤ பூத்தொடுத்தல் கவிதையின் ஆசிரியர்

=> உமா மகேஸ்வரி

23➤ நட்சத்திரங்களின் நடுவே, பெரும்பொழுது, கற்பவை ஆகிய கவிதை தொகுதிகளைப் படைத்தவர்

=> கவிஞர் உமா மகேஸ்வரி

24➤ முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்

=> குமரகுருபரர்

25➤ பிள்ளைத்தமிழின் பருவங்கள்

=> 10 பருவங்கள்

26➤ பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

=> 100

27➤ குமரகுருபரின் காலம்

=> 17ஆம் நூற்றாண்டு

28➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள்

=> கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை. நீதி நெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக் கோவை

29➤ இரு பாலாருக்கும் பொதுவான பருவங்கள்

=> 7

30➤ ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கு மட்டும் உரிய பருவங்கள்

=> சிற்றில் சிறுபறை. சிறுதேர்

31➤ பெண்பாற்பிள்ளைத் தமிழின் கடைசி மூன்று பருவங்கள்

=> கழங்கு அம்மானை ஊசல்

32➤ காலில் அணியும் அணிகலன்

=> சிலம்பு ,கிண்கிணி

33➤ இடையில் அணிவது

=> அரை நாண்

34➤ நெற்றியில் அணிவது

=> சுட்டி

35➤ காதில் அணிவது

=> குண்டலம் , குழை

36➤ தலையில் அணிவது

=> சூழி

37➤ கம்பர் எழுதிய ராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்

=> ராமாவதாரம்

38➤ கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

=> 6

39➤ கம்பரை ஆதரித்த வள்ளல்

=> சடையப்ப வள்ளல்

40➤ கம்பராமாயணம் எவ்வகை பாக்களால் ஆனது

=> விருத்தப்பா

41➤ கம்பர் எழுதிய நூல்கள்

=> சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி .திருக்கை வழக்கம். ஏர் எழுபது, சிலை எழுபது

42➤ பாய்ச்சல் சிறுகதையின் ஆசிரியர்

=> சா. கந்தசாமி

43➤ ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ -ஏழ்மை வேடன் எனக் குறிக்கப்படுபவர்

=> குகன்

44➤ தோழமை என்ற வர் சொல்லிய சொல் அன்றோ- யார் கூறியது

=>குகன் (ராமனை நினைத்து)

45➤ பாலகண்டத்தில் குவளை மலர்கள் எதற்கு உவமையாக குறிப்பிடப்படுகிறது

=> கண்கள்

46➤ பால காண்டத்தில் நீர்நிலைகள் எழுப்பும் அலைகள் எதற்கு உவமையாகக் குறிப்பிடப்படுகிறது

=> திரைச்சீலை

47➤ விசாரணைக் கமிசன் என்னும் புதினத்தை எழுதியவர் யார்

=> சா.கந்தசாமி

48➤ தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர்

=> சா.கந்தசாமி

49➤ சார் கந்தசாமி எழுதிய எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது

=> விசாரணைக் கமிஷன்

50➤ நான் கந்தசாமி எழுதிய எந்த குறும்படத்திற்கு அனைத்து உலக விருது வழங்கப்பட்டது

=> சுடுமண் சிலைகள்

தமிழ் திறனறித் தேர்வு இயல் 5

1➤ ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்

=> மணவை முஸ்தபா

2➤ உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர்

=> மு. கு ஜெகந்நாதர்

3➤ மொழிபெயர்த்தல் என்ற தொடர் தொல்காப்பியரால் குறிப்பிடப்பட்ட அதிகாரம்

=> மரபியல்

4➤ மாபாரதம் தமிழ் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் என்னும் சொல் காணப்படும் செப்பேடு

=> சின்னமனூர் செப்பேடு

5➤ வடமொழிக் கதைகளை தழுவி படைக்கப்பட்ட நூல்கள்

=> பெருங்கதை ,சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் .வில்லிபாரதம்

6➤ ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் தேசிய உணர்வினை ஊட்டுவதற்கும் .... - அவசியம்.

=> மொழிபெயர்ப்பு

7➤ இந்திய அளவில் மொழிபெயர்ப்பினை செய்து வரும் நிறுவனங்கள்

=> சாகித்திய அகாதமி, தேசிய புத்தக நிறுவனம். தென்னிந்தியப் புத்தக நிறுவனம்

8➤ அமெரிக்கா ஜப்பான் போருக்கு முக்கிய காரணமாக இருந்த சொல்

=> மொகு சாஸ்ட்டு

9➤ கீதாஞ்சலியை எழுதியவர் யார்

=> ரவீந்திரநாத் தாகூர் (வங்காள மொழியில்)

10➤ ஒரு நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடும் அளவுகோலாக பயன்படுத்தப்படுவது

=> மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை

11➤ ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல்

=> எவ்வளவு மின் ஆற்றலை பயன்படுத்துகிறார்கள் என்பதனைப் பொருத்தது

12➤ Underground drainage என்பதின் சரியான தமிழாக்கம்

=> புதை சாக்கடை

13➤ வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இந்தியில் எழுதியவர்

=> ராகுல் சாங் கிருத்யாயன்

14➤ வால்காவிலிருந்து கங்கை வரை -என்ற நூலை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர்

=> கணமுத்தையா 1949 ல்

15➤ உலக அளவில் அதிகமான மொழிபெயர்ப்பு நூல்களை கொண்ட நாடு

=> ஜெர்மனி வருடத்திற்கு 5000 நூல்கள்

16➤ அதிகமான தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன அதன் வரிசை

=> முதலிடம் ஆங்கிலம்,இரண்டாம் இடம் மலையாளம்

17➤ கருத்துப் பகிர்வை தருவதால் மொழிபெயர்ப்பு ........ என்று அழைக்கப்படுகிறது

=> பயன் கலை

18➤ தமிழிலிருந்து அதிகம் மொழிபெயர்க்கப்பட்டவை

=> செய்யுள்கள்

19➤ காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்-இவ்வடிகளை எழுதியவர்

=> குலோத்துங்கன்

20➤ சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து - இவ் அடிகளை எழுதியவர்

=> பாரதியார்

21➤ தர்மதுரை தமிழ் ஓசை உலகமெல்லாம் பருவ பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியவர்

=> பாரதியார்

22➤ நீதி வெண்பாவினை எழுதியவர்

=> கா ப.செய்குதம்பிப் பாவலர்

23➤ கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் நூல்

=> சங்க இலக்கியங்கள்

24➤ தோண்டும் அளவு ஊரும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று குறிப்பிடும் நூல்

=> திருக்குறள்

25➤ ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் 100 செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல்

=> சதாவதானம்

26➤ சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்

=> செய்கு தம்பிப் பாவலர்

27➤ செய்கு தம்பி பாவலர் சதாவதானி என்ற பட்டத்தை பெற்ற ஆண்டு

=> 1907 மார்ச் 10. (சென்னை விக்டோரியா அரங்கம்)

28➤ அருளைப் பெருக்கி அறிவை திருத்துவது எது

=> கல்வி

29➤ திருவிளையாடல் புராணம் எழுதியவர்

=> பரஞ்சோதி முனிவர்

30➤ கபிலரின் நண்பர்

=> இடைக்காடனார்

31➤ கழிந்த பெரும் கேள்வியினான் எனத் தொடங்கும் பாடலில் கேள்வியினான் என்னும் சொல்லால் குறிக்கப்படுபவர் மற்றும் நூல்

=> இடைக்காடனார் (திருவிளையாடற் புராணம்)

32➤ மாசற விசித்த வார் குரு வாழ்கின்-இடம்பெறும் நூல்

=> புறநானூறு (மோசிகீரனாருக்கு தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரு முறை கவரி வீசியபோது விழித்தெழுந்த புலவரால் பாடப்பட்ட நூல்)

33➤ திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் காண்டங்களின் எண்ணிக்கை

=> 3 காண்டம் (மதுரை காண்டம்,கூடர் காண்டம் கூடர் காண்டம்,கூடற் காண்டம்,திருவாலவாய்காண்டம்

34➤ திருவிளையாடல் புராணத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை

=> 64 படலங்கள்

35➤ பரஞ்ஜோதி முனிவர் பிறந்த இடம்

=> திருமறைக்காட்டில் (வேதாரண்யம்)

36➤ பரஞ்ஜோதி முனிவர்கள் எழுதப்பட்ட நூல்கள்

=> வேதாரண்யப்புராணம்,திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா,மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

37➤ புதிய நம்பிக்கை சிறுகதையின் ஆசிரியர்

=> கமலாலயன்

38➤ உனக்குப் படிக்கத் தெரியாது என்ற சொல்லால் தூண்டப்பட்டவர்

=> மேரி மெக்லியோட் பெத்யூன்

39➤ உனக்குப்படிக்கத் தெரியாது என்ற நூலினை எழுதியவர்

=> கமலாலயன் (குணசேகரன்,)

40➤ கொற்கைக்கோமான் கொற்கையும் பெருந்துறை -வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> ஐங்குறுநூறு

41➤ வினா எத்தனை வகைப்படும்

=> 6

42➤ விடை எத்தனை வகைப்படும்

=> 8

43➤ அறிவு அறியாமை ஐயுரல்கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்- இவ்வடிகள் இடம் பெ றும் நூல்

=> நன்னூல்

44➤ வெளிப்படை விடைகள் என்று குறிப்பிடப்படுவது

=> சுட்டுவிடை மறைவிடை நேர் விடை

45➤ செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை

=> பொருள்கோள் என்று பெயர்

46➤ பொருள்கோள் எத்தனை வகைப்படும்

=> 8 வகைப்படும்

47➤ சொல்லரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்-வடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்

=> ஆற்று நீர்ப்பொருள்கள்

48➤ செய்யுளில் சொற்கள் முறை மாறாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது

=> நிரல்நிறைப்பொருள்கள்

49➤ நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்

=> 2 வகைப்படும்.

50➤ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை-இப்பாடலில் இடம்பெறும் பொருள்கோள்

=> முறை நிரல்நிறைப்பொருள்கோள்

51➤ விலங்கோடு மக்கள் அணையர் -இப்பாடலில் இடம்பெறும் பொருள்கோள்

=> எதிர் நிரல்நிறை பொருள்கோள்

52➤ ஆலத்து மேல குவளை குளத்துளநெடிய குரங்கு - இப்பாடலில் இடம்பெறும் பொருள்கோள்

=> கொண்டு கூட்டுப் பொருள்கள்

தமிழ் திறனறித் தேர்வு இயல் 4

1➤ இன்றைய மின்னணு ப்புரட்சிக்கு காரணம்

=> தனிநபர் கணினி மற்றும் இணைய பயன்பாடுகள்

2➤ இதழியலில் பயன்படுத்தப்படும் மென்பொருள்

=> வேர்ட்டஸ்மித் (எழுத்தாளி)

3➤ நோயாளி ஒருவரின் புற்று நோயைக்கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு கணினி

=> வாட்சன் (2016இல் ஐபிஎம் நிறுவனம்)

4➤ செயற்கை நுண்ணறிவு என்பது

=> ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல்திட்ட வரைவு

5➤ திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள்

=> மெய் நிகர் உதவியாளர்

6➤ கண்ணுக்கு புலப்படாத மனிதன் போல் நம்முடன் உரையாடு மென்பொருள்

=> மெய் நிகர் உதவியாளர்

7➤ பாரத ஸ்டேட் வங்கி .......என்னும் உரையாடும் மென்பொருளை உருவாக்கி இருக்கிறது

=> இலா (electronic live assistant)

8➤ வாடிக்கையாளருக்கு கிடைக்கும் சேவைகளை இணைய மூலம் அளிப்பது

=> இலா

9➤ பெப்பர் என்பது

=> ஜப்பானில் சவுத் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்

10➤ மனிதரின் முகபாவனையில் இருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய இயந்திர மனிதன்

=> பெப்பர் (ஜப்பான்)

11➤ பெப்பரின் செயல்பாடுகள்

=> வீட்டுக்கு வணிகத்துக்கு படிப்புக்கு

12➤ தமிழ்நாட்டு வணிகர்கள் அதிகமாக சென்று வந்த சீனதுறைமுக நகர்

=> சூவன்சௌ

13➤ சீனாவில் கட்டப்பட்ட சிவன் கோவில் கட்டுவதற்கு ஆணை இட்ட மன்னன் பெயர்

=> குப்லாய்க்கான்

14➤ பெருமாள் திருமொழி எழுதியவர்

=> குலசேகர ஆழ்வார்

15➤ வாளால் அறுத்துச் சுடினும் -வரிகள் இடம்பெறும் நூல்

=> பெருமாள் திருமொழி

16➤ பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது பெருமொழியாக உள்ளது

=> ஐந்தாம் திருமொழி

17➤ பெருமாள் திருமொழி உள்ள பாடல்களின் எண்ணிக்கை

=> 105

18➤ குலசேகர ஆழ்வார் அன்னையாக உருவகப்படுத்தி பாடும் இறைவன்

=> உய்ய வந்த பெருமாள்

19➤ திராவிட வேதம் திராவிட பிரபந்தம் ஐந்தாவது வேதம் ஆன்ற தமிழ்மறை என்று அழைக்கப்படும் நூல்

=> நாலாயிர திவ்ய பிரபந்தம்

20➤ பிரபந்தம் என்ற சொல் குறிக்கும் பொருள்

=> பாடலின் தொகுப்பு

21➤ குலசேகர ஆழ்வாரின் காலம்

=> எட்டாம் நூற்றாண்டு

22➤ ஆழ்வார்களின் எண்ணிக்கை

=> 12 (பன்னிரு ஆழ்வார்கள்)

23➤ சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் என குறிக்கப்படும் நூல்

=> பரிபாடல்

24➤ பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கப்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

=> 70. கிடைக்கப்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 24

25➤ வான் வெளியில் பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்தவர்

=> எட்வின் ஹப்பிள் 1924

26➤ அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கம் -என்ற சொல் இடம் பெறும் நூல் மற்றும் ஆசிரியர்

=> திரு அண்டப் பகுதி-மாணிக்கவாசகர்

27➤ விசும்பு என்ற சொல்லின் பொருள்

=> வானம்

28➤ ஊழி என்னும் சொல் குறிக்கும் பொருள்

=> யுகம்

29➤ பெரியார் அறிவியல் தொழில்நுட்ப க் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது

=> 1988

30➤ பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள இடம்

=> கோட்டூர்புரம் சென்னை

31➤ இந்தியாவிலே முதன் முதலாக 360 பாகை அரை வட்ட வானத்திரை உள்ள கோளரங்கம் உள்ள இடம்

=> கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம்

32➤ தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர்

=> ஸ்டீபன் ஹாக்கிங்

33➤ கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று நிறுவியவர்

=> ஸ்டீபன் ஹாக்கிங்

34➤ கருந்துளை பற்றிய கூற்றுகள்

=> கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது,கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன,கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை

35➤ ஸ்டீபன் ஹாக்கிங் முன்னோடிகள்

=> ஐன்ஸ்டைன் , நியூட்டன்

36➤ ' லூகாசியன் பேராசிரியர் 'என்ற பதவி உள்ள பல்கலைக்கழகம்

=> கேம்பிரிட்ஜ்

37➤ ஈர்ப்பொலைகள் குறித்த முடிவுகளை கணிதச் சமன்பாடுகளாக சொன்னவர்

=> ஐன்ஸ்டைன் ( E = MC2

38➤ கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை கோட்பாடுகளாக சொன்னவர்

=> ஐன்ஸ்டைன்

39➤ கருந்துளை குறித்த தன்னுடையஆய்வை கோட்பாடுகளாக சொல்லாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டவர்

=> ஸ்டீபன் ஹாக்கிங்

40➤ ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள்

=> அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது

41➤ ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள்

=> ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப விருது, காப்ளி பதக்கம்,அடிப்படை இயற்பியல் பரிசு

42➤ பேரண்டத்தைப் பற்றி இருந்த புரிதலை வளர்த்தவர்கள்

=> கலிலியோ, ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாக்கிங்

43➤ கலிலியோவின் நினைவு நாளில் பிறந்து ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர்

=> ஸ்டீபன் ஹாக்கிங்

44➤ எங்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பு ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு வழங்கப்பட்டது

=> 2012 பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி

45➤ ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்

=> காலத்தின் சுருக்கமான வரலாறு

46➤ காலத்தின் சுருக்கமான வரலாறு எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது

=> 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது

47➤ காலத்தின் சுருக்கமானவரலாறு என்ற நூலில் வெளிவந்த முக்கியமான கருத்துக்கள்

=> பெரு வெடிப்பு, கருதுளை ஆகியவை பற்றி

48➤ வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது எனக் குறிப்பிட்டவர்

=> ஸ்டீபன் ஹாக்கிங்

49➤ கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்

=> அமெரிக்க அறிவியல்ல ஜான் வீலர்

50➤ உள்ளே இருக்கப்படும் உள் சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்று கூறலாம் என்று கூறியவர்

=> ஜான் வீலர்

51➤ பேரண்டம் பெரு வெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர்

=> ஸ்டீபன் ஹாக்கிங்

தமிழ் திறனறித் தேர்வு இயல் 9

1➤ ஜெயகாந்தன் எழுதிய எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைக்கப்பெற்றது

2➤ ஜெயகாந்தனின் எந்த நூலுக்கு சோவியத்து நாட்டு விருது கிடைக்கப்பெற்றது

3➤ ஜெயகாந்தன் எழுதிய எந்த திரைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது

4➤ ஒரு பிடி சோறு சிறுகதை தொகுப்பினை எழுதியவர்

5➤ ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்

6➤ ஜெயகாந்தன் எழுதிய குறும்பு புதினங்கள்

7➤ ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்

8➤ ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள்

9➤ மகத்தான சாதனை- பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தது. மிகப்பெரிய சவாலும் அதுவே எனக் குறிப்பிட்டவர்

10➤ தர்க்கத்திற்கு அப்பால் என்ற சிறுகதையின் ஆசிரியர்

11➤ சிறுகதை மன்னன் - என்று அழைக்கப்படுபவர்

12➤ சித்தாளு - என்னும் பாடலை எழுதியவர்

13➤ நாகூர் ரூமி எழுதிய கவிதைத் தொகுதிகள்

14➤ கப்பலுக்கு போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்

15➤ தேம்பாவணி நூலின் ஆசிரியர்

16➤ கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர்

17➤ திரு முழுக்க யோவான் ......... என்றும் குறிப்பிடப்படுவார்

18➤ வீரமாமுனிவரின் காப்பியத்தில் கருணையன் என்று குறிப்பிடப்படுபவர்

19➤ கருணையன் தாயார்

20➤ யாக்கை என்னும் சொல் குறிக்கும் பொருள்

21➤ இஸ்மத் சன்னியாசி என்று அழைக்கப்படுபவர்

22➤ இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தினை வீரமாமுனிவருக்கு அளித்தவர்

23➤ இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு ........என்று பொருள்

24➤ தேம்பாவணி என்னும் நூலின் பாட்டுடைத் தலைவர்

25➤ தேம்பாவணி நூலின் அமைப்பு

26➤ வீரமாமுனிவரின் இயற்பெயர்

27➤ தமிழின் முதல் அகராதி

28➤ தொன்னூல் விளக்கம்- நூலின் ஆசிரியர்

29➤ பரமார்த்தக் குரு கதைகள்-எழுதிய நூலாசிரியர்

30➤ ஒருவன் இருக்கிறான் சிறுகதையின் ஆசிரியர்

31➤ கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர்

32➤ செய்யுளுக்கு அழகு சேர்ப்பது

33➤ இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

34➤ போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி -இப்பாடலில் இடம்பெறும் அணி

35➤ தீவகம் என்னும் சொல்லுக்கு பொருள்

36➤ செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது

37➤ .தீவுக அணி மொத்தம் எத்தனை வகைப்படும்?

38➤ சேர்ந்தனவேந்தன் திருநெடுங்கண்.....மிசை அனைத்தும் புள் குலமும் விழுந்து- பாடலில் இடம்பெற்றுள்ள அணி

39➤ சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது

40➤ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது -பாடலில் இடம்பெற்றுள்ள அணி

41➤ தன்மையணி மொத்தம் எத்தனை வகைப்படும்

உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம்மகிழுமாறு பாடுவது--......

தன்மையணி ....... என்று அழைக்கப்படுகிறது

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்.....உண்டளவே தோற்றான் உயிர். -இப்பாடலில் காணப்படும் அணி

மெய் முறை இலக்கணக் குறிப்பு தருக

அசும்பு என்னும் சொல் குறிக்கும் பொருள்

படலை என்னும் சொல் குறிக்கும் பொருள்

தலைக்கணமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு--இவ்வரிகள் சுட்டும் பாத்திரம்

சாலைகளில் வண்டிகள் எந்த பக்கமாக செல்ல வேண்டும்

ஓரசைச் சீர் எத்தனை வகைப்படும்