செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 5 December 2023

வகுப்பு 8 Book Back வினாக்கள் முதல் 7 இயல்

 

வகுப்பு எட்டு

பாடம் தமிழ்

செய்யுள் வினா விடைப் பகுதி

 

1.       தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?

2.       தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

3.       உலகம் எவற்றால் ஆனது?

4.       செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

5.       ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

6.       ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

7.       கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாக கோணகாத்துப் பாட்டு கூறுவது யாது

8.       புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது ?

9.       கொல்லிமலைப் பற்றி பாடல் கூறும் செய்தி யாது?

10.    சான்றோர்க்கு அழகாவது எது?

11.    பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது ?

12.    புலித்தோல் போர்த்தியபசு என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

13.    நோயின் மூன்று வகைகள் யாவை?

14.    நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை ?

15.    நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

16.    அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

17.    யாருக்குஅழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

18.    யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.?

19.    பகைவர்களிடமும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?

20.    தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகக் சுந்தரர் கூறுவன யாவை ?

21.    பண்பு அன்பு ஆகியவை பற்றி கலித்தொகை கூறுவன யாவை?.

22.    முறை. பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது ?

23.    நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

24.    சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

25.    அரசன் தண்டிக்கும் முறை யாது ?

26.    சிறந்த சொல் ஆற்றலின் இயல்பு என்ன ?

27.    பயிர்கள் வாட்டம் இன்றிக் கிளைத்து வளர தேவையானது யாது?

28.    உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்.

29.    மழைச் சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?

30.    மக்கள் ஊரை விட்டு வெளியேறக் காரணம் என்ன ?

31.    சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர் ?

32.    கலிங்க வீரர்கள் எல்வாறு அஞ்சி ஓடினார் ?

33.    சோழனின் யானை படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை ?

34.    பகத்சிங் கண்ட கனவு யாது?

35.    இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

உரைநடைப் பகுதி வினா விடைகள்.

1.       ஓவிய எழுத்து என்றால் என்ன?

2.       .ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

3.       ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள், ஆகியவற்றை பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

4.       வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்து சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுது.

5.       விலை கொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை ?

6.       நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது ?

7.       எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார் ?

8.       மருத்துவம் எப்போது தொடங்கியது?

9.       நல் வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை ?

10.    தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை ?

11.    யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

12.    இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க கூறுவன யாவை ?

13.    தாய்நாடு என்ன பெயர் எவ்வாறு பிறக்கிறது ?

14.    திரு வி.. சங்கப் புலவர்களாக குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

15.    எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்?

16.    மண்பாண்டம், சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.

17.    பனை ஓலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை ?

18.    மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

19.    கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

20.    தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது ? ஏன் ?

21.    எம்ஜிஆர் நாடகத் துறையில் ஈடுபடக் காரணம் என்ன ?

22.    திரைத் துறையில் எம்ஜிஆரின் பன்முகத் திறமைகள் யாவை ?

23.    எம்ஜிஆரின் சமூக நலத்திட்டங்களில் நான்கினை எழுதுக.

 

பகுதி 3.இலக்கணம் வினா விடைப் பகுதி.

1.       எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன ?

2.       மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன ?

3.       ழகர, லகர ளகர மெய்களின் முயற்சி பிறப்பு பற்றி எழுதுக.

4.       வினைமுற்று என்றால் என்ன ?

5.       தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும் ?

6.       வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை ?

7.       ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

8.       எச்சம் என்றால் என்ன ? அதன் வகைகள் யாவை ?

9.       அழகிய மரம் எச்ச வகையை விளக்குக.

10.    முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

11.    வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

12.    எழுவாய்வேற்றுமையை விளக்குக.

13.    நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை ?

14.    உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன ?

15.    தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை ?

16.    இரவு பகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

17.    அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

18.    இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

19.    மரக்கட்டில் இச்சொல்லைப் பிரித்து எழுதி புணர்ச்சியை விளக்குக.

20.    சந்திப்பிழை என்றால் என்ன ?

21.    வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக

22.    வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தினை எழுதுக.

 

 

No comments:

Post a Comment