செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 7 December 2023

வகுப்பு 8 -தமிழ்-மீட்டுணர் வினாக்கள் - இயல் 6-9 செய்யுள் பகுதி மட்டும்

1➤ பெருநீரால் வாரி சிறக்க - பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

=> தகடூர் யாத்திரை

2➤ தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

=> தர்மபுரி

3➤ மறலி சொல் குறிக்கும் பொருள்

=> காலன்

4➤ கலிங்கத்துப்பரணியை எழுதியவர் யார்?

=> செயங் கொண்டார்

5➤ ஜெயம்கொண்டார் எந்த மன்னனின் அவைக்களப் புலவராக இருந்தார் ?

=> முதலாம் குலோத்துங்கங்கச் சோழன்

6➤ பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் பாராட்டப்படுபவர் யார்? பாராட்டியவர் யார் ?

=> ஜெயங்கொண்டார். பாராட்டியவர் :பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்

7➤ தமிழில் முதன் முதலில் எழுதப்பட்ட பரணி நூல் எது ?

=> கலிங்கத்துப்பரணி

8➤ கலிங்கத்துப்பரணி யார் யாருடைய வெற்றியைப் பற்றி பேசுகிறது ? து

=> முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்

9➤ தென்தமிழ்த்தெய்வப்பரணி - எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார் ?

=> ஒட்டக்கூத்தர்

10➤ கலிங்கத்துப்பரணி எந்த வகைப் பாவால் பாடப்பட்டுள்ளது

=> கலித்தாழிசையால் பாடப்பட்டுள்ளது

11➤ கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை என்ன ?.

=> 599

12➤ போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் ....... ஆகும்

=> பரணி

13➤ முழை, பிலம் / கரி - சொற்கள் குறிக்கும் பொருள் யாது ?

=> மலைக்குகை, மலைக்குகை, யானை

14➤ கவிஞர். மீரா வின் இயற்பெயர் என்ன?

=> மீ.இராசேந்திரன்

15➤ கவிஞர் மீரா நடத்திய இதழின் பெயர் என்ன ?

=> அன்னம் விடு தூது

16➤ கவிஞர் மீரா எழுதிய நூல்கள் யாவை ?

=> குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம்

17➤ ஒன்றே குலமும் ஒருவனே தேவன்- பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

=> திருமந்திரம்
எழுதியவர் திருமூலர்

18➤ படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

=> திருமந்திரம்
எழுதியவர் திருமூலர்

19➤ நமன் என்னும் சொல் குறிக்கும் பொருள் யாது ?

=> எமன்

20➤ திருமந்திரத்தை எழுதியவர் யார் ?

=> திருமூலர்

21➤ திருமந்திரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை......

=> 3000
ஆதலால் தமிழ் மூவாயிரம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

22➤ பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக இடம் பெற்றுள்ளது ?

=> பத்தாம் திருமுறை

23➤ குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன ?

=> சுல்தான் அப்துல் காதர்

24➤ குணங்குடி மஸ்தான் எழுதிய நூற்கள் யாவை ?

=> எக்காளக்கன்னி, மனோன்மணிக் கண்ணி, நந்தீஸ்வரக் கன்னி

25➤ கான முயல் எய்து அம்பினில்....குறளில் இடம்பெற்றுள்ள அணி வகை யாது ?

=> பிறிது மொழிதல் அணி

26➤ நவில் தோறும் நூல் நயம் போலும் - குறளில் இடம்பெற்றுள்ள அணிவகை யாது ?

=> உவமையணி

27➤ பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் - குறளில் இடம் பெற்றுள்ள அணி வகை யாது ?

=> உவமையணி

28➤ மையல், பொறை என்னும் சொற்கள் குறிக்கும் பொருள் யாது ?

=> விருப்பம், பொறுமை

29➤ மார்கழி திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் ஆற்றில் நீராடுவது .....

=> பாவை நோன்பு

30➤ திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல்......

=> திருப்பாவை

31➤ சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்

=> திருவெம்பாவை
இயற்றியவர் மாணிக்கவாசகர்

32➤ கவிஞர் இறையரசனின் இயற்பெயர் என்ன ?

=> சே. சேசுராசா

33➤ ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி எழுதப்பட்ட நூல் எது ? யாரால் எழுதப்பட்டது ?

=> கன்னிப்பாவை
இயற்றியவர் இறையரசன் என அழைக்கப்படும் சேசு ராஜா

34➤ இளைய தோழனுக்கு எனக் கவிதை எழுதியவர்.....

=> மு.மேத்தா

35➤ வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் ஒருவர் ......

=> மு.மேத்தா

36➤ புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளில் ஒருவர்

=> மு.மேத்தா

37➤ மு மேத்தா எழுதிய நூற்கள் யாவை ?

=> கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா

38➤ மு மேத்தா எழுதிய எந்த நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது

=> ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதைக்கு

39➤ இன்னும் நீ உறங்குதியோ, பூத்தேலோ ரெம்பாவாய்- வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> கன்னிப் பாவை
எழுதியவர் இறையரசன்

40➤ பகைவருக்கு துன்பம் வரும்போது உதவி செய்வதை ...... என்கிறார் வள்ளுவர்

=> ஆண்மையின் கூர்மை

41➤ பழகப் பழக இன்பம் தருவது..... என வள்ளுவர் கூறுகிறார்

=> பண்புடையவர் நட்பு
உவமையணி

42➤ சாகும் அளவுக்கு துன்பம் தருவது..... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

=> ஆராய்ந்து வராமல் கொள்ளும் நட்பு

43➤ நண்பர்களின் இயல்பினை அளந்து காட்டும் அளவுகோல் ..... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

=> ஒருவன் பெறுகின்ற துன்பம்

44➤ மலையளவு பெருமை உடையவரை அழிப்பது.... என வள்ளுவர் குறிப்பிடுகிறார்

=> குன்றிமணி அளவு செய்யும் தவறு

45➤ தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் என்ற உவமையால் வள்ளுவர் குறிப்பிடுவது......

=> பண்பிலார் பெற்ற பெருஞ்செல்வம்

46➤ கள்ளக் கருத்துக்களை கட்டோடு அறுத்தவற்கு...... மெய்ஞான ஒளியே பராபரமே- பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> மெய்ஞ்ஞான ஒளி
குணங்குடி மஸ்தான்

47➤ வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி- பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> கலிங்கத்துப்பரணி

48➤ கலிங்கத்துப்பரணி எந்த மன்னனின் படைச் சிறப்பை விளக்குகிறது

=> சோழ மன்னனின்
முதலாம் குலோத்துங்கன் சோழன்

49➤ கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு நூலின் பதிப்பு ஆசிரியர்.......

=> அ.கௌரன்

50➤ வாரி,யாணர் , ஓதை-ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் முறையே......

=> வருவாய் . புது வருவாய் , ஓசை

No comments:

Post a Comment