இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday, 20 November 2022

பாவனை நடிப்பு

 நாம் தேர்ந்தெடுக்கும் கருத்தினை முகபாவைனை மற்றும் செயல் மூலமாக விளக்க வேண்டும்






தெருக்கூத்து




கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குத் தாளம் அல்லது மிருதங்கம் தட்டப்படுகிறது. இது பார்வையாளர்களுக்குக் கூத்தின் தொடக்கத்தை அறிவிப்பதாக இருக்கிறது. பார்வையாளர்களை மனரீதியாகக் கூத்தை ரசிக்கத் தயார்படுத்துவதாகவும் இருக்கிறது. இதற்குக் களரி கட்டுதல் என்றும் மேளக் கட்டு என்றும் பெயர்கள் உண்டு.

கூத்து அரங்கில் முன்திரை அமைப்பது பெரும்பாலும் இல்லை. இருவர் துணியைத் திரையாகப் பிடித்துக் கொள்வர். முதலில் அரங்கில் நுழைகிற பாத்திரம் கட்டியங்காரன். அவன் ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு அவைக்கு வணக்கம் சொல்வான். 

தங்கள் நாடகக்குழு பற்றியும் ஊர்ப் பெயர், ஆசிரியர் பெயர், நடக்க இருக்கும் கூத்தின் பெயர் முதலானவற்றையும் உரக்கக் கூறுவான். இதை ஆடுகளத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் சென்று கூறுவான்.

 பின்னர் அவையடக்கம் கூறுவான். தங்கள் கூத்தில் சொற்குற்றம், இசைக்குற்றம், பொருள் குற்றம் இருப்பின் பிள்ளைகளைப் போலப் பாவித்துப் பொறுத்து நாடகத்தினைக் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்வான்.

பாரதக் கதைகள் மட்டுமன்றி இராமாயணக் கதைகள், பெரியபுராணக் கதைகள் ஆகியவையும் கூத்துகளாக நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கூத்து கோயில் சடங்காக இருக்கிறது

கோலாட்டம்


 கோலாட்டம் பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையான கோலாட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. கோலாட்டத்தில் ஆடுவோரின் எண்ணிக்கை வரையறை எதுவுமில்லை ஆயினும் எட்டு முதல் பன்னிரண்டு பேர் ஆடுவது சிறப்பாக இருக்கும். ஆடுவோரைத் தவிர, பாடுபவர், இசைக்கலைஞர்கள் என எண்ணிக்கை நிகழ்வு இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

கோலாட்டத்தில் ஈடுபடுவோர் பெரிய அளவில் ஒப்பனை எதுவும் செய்து கொள்வதில்லை. ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும், தலையில் ரிப்பன் கட்டியும் ஆடுகின்றனர். பெண்களும் வழக்கமான உடையுடன் கோலாட்டம் ஆடுகின்றனர். ஆனால், தொழிற்முறைக் கலைஞர்கள் குழு ஆட்டம் ஆடும் போது ஒரே நிறத்தில் உடையைத் தேர்வு செய்து அணிந்து கோலாட்டம் நிகழ்த்துகின்றனர்.

கோலாட்டம் நிகழ்த்துவதற்கான கோல் அளவாலும், உருவாக்கப்படும் முறையாலும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. தச்சு வேலைப்பாடு உடைய வண்ணம் தீட்டப்பட்ட பித்தளை பூண் மாட்டி மணிகள் கோர்த்து அலங்கரிக்கப்பட்ட கம்புகளுடன் ஆடிய கோலாட்டம் இன்று கிடைக்கும் கம்புகளைக் கொண்டு ஆடப்படுகிறது. சில இடங்களில் இரு கோல்களுக்கும் பதிலாக ஒரு கையில் மட்டும் கோலைக் கொண்டு ஆடும் ஆட்டமும் நிகழ்கின்றது.

தேவராட்டம்










தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை. அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்குக் காணப்படுகிறது.

இடையில் சாதாரணமாக உடுத்தும் வேட்டி, கைகளில் சிறிய துணி, கால்களில் சலங்கை, தலையில் தலைப்பாகை, சலங்கை மணிகளை நீளமாக நூலில் கோத்துக் காலில் கட்டிக் கொள்கின்றனர்.

இவ்வாட்டத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை. இசைக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஆட்டமாக உள்ளது. உறுமி என்னும் இசைக் கருவி இந்த ஆட்டத்தின் போது இசைக்கப்படுகிறது.

இவ்வாட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடலசைவுகளைக் கவனித்து அவனைப் பின்பற்றி ஆடுவார்கள். தேவராட்டத்தில் இருபத்தி மூன்று ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுவர்

ஒயிலாட்டம்

 




ஒயிலாட்டம் ஆடுபவர்கள் வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்து இரண்டு அல்லது மூன்று வண்ணங்களாலமைந்த துணியால் தலைப் பாகைக் கட்டி வலக்கையில் வண்ணக் கைக் குட்டையைப் பிடித்திருப்பார்கள்

. கோயில் சடங்குகளில் ஆடும் ஆட்டக்காரர்கள் சட்டை அணியாமல் விபூதி, சந்தனம் பூசி மாலை அணிந்திருப்பார்கள்.    

ஒயிலாட்டம் ஆடுபவர்கள் வேட்டியைக் கீழ்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்து இரண்டு அல்லது மூன்று வண்ணங்களாலமைந்த துணியால் தலைப் பாகைக் கட்டி வலக்கையில் வண்ணக் கைக் குட்டையைப் பிடித்திருப்பார்கள்.

 கோயில் சடங்குகளில் ஆடும் ஆட்டக்காரர்கள் சட்டை அணியாமல் விபூதி, சந்தனம் பூசி மாலை அணிந்திருப்பார்கள்.

இராமாயணம் போன்ற குறிப்பிட்ட கதைப் பாடல்களைப் பாடி ஆடுகின்றவர்கள். அக்கதையின் முக்கிய பாத்திரங்களாக ஆட்டக்காரர்களுள் சிலர் வேடம் புனைந்து கொள்வர். பெண் வேடம் போடுபவர் புடவை கட்டியிருப்பார்.

இவ்வாட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கச்சம் அல்லது மணிச் சலங்கையை அணிந்திருக்க வேண்டும். கூடுதலான மணிகளைக் கொண்ட கச்சத்தைக் கட்டிக் கொண்டு நீண்ட நேரம் ஆடுபவர் சிறப்பு மிக்க ஆட்டக்காரராகக் கருதப்படுவார்.

இம்முறையில் அமைந்த ஒப்பனைகளுடன் ஆடுபவர்கள் ஒரு வரிசையாகவோ, இரு வரிசையாகவோ நிற்பர். அண்ணாவி அல்லது வாத்தியார் வரிசைக்கு முன்னால் நின்று ஆட அவருடைய வழிகாட்டுதலுடன் ஏனையோர் ஆடுவர். ஒன்றுக்கு மேற்பட்டோரும் முன்னால் நின்று ஆடுவதுண்டு.

இவ்வாட்டத்தில் பாடல் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றது. அண்ணாவி முன் பாட்டைப் பாட ஏனைய ஆட்டக்காரர்கள் குழுவாகப் பின்பாட்டுப்பாடுவர். இந்தப் பாடல்கள் மந்த கதியில் தொடங்கப் பெற்றுத் துரித கதியில் சென்று அதி துரித கதியில் முடியும்.

கணியன் கூத்து- சிறு விளக்கம்


 கணியான் கூத்து என்னும்

 கதைப்பாடல்

ஒரு கதையை எளிய பாடல் வடிவில் வெளிப்படுத்துவதே கதைப்பாடல்.

கணியான் கூத்தில் முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். ஆசிரியர் பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப்பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வருவதுண்டு.

ஒப்பனை

இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். நீளமான கூந்தல் கொண்டையும் விளங்கும். கழுத்தில் ஆபரணமும், கைக்கடிகாரமும் கூட கட்டப்பட்டிருக்கும்.

கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் ‘அண்ணாவி’ எனப்படுவார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர்.

கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு.

கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொணடு தோற்றமளிப்பார்கள்.

‘அண்ணாவி’ முதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படுகிறது. பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. தங்களது கால் சதங்கையை மட்டும் தட்டி ஒலி எழுப்புவர்.


Thursday, 17 November 2022

வகுப்பு 7.நூலகம் வேண்டி நூலக இயக்குநக்குக் கடிதம்

 உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர் :


ஊர்ப் பொதுமக்கள்,
மறைமலை நகர்,
காஞ்சிபுரம் மாவட்டம்


பெறுநர் :


நூலக ஆணையர்,
பொதுநூலகத் துறை,
சென்னை – 600 002.


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல் தொடர்பாக


நன்றி!
இடம் : மறைமலை நகர்,
தேதி : 5-2-2020

இப்படிக்கு ,
தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப் பொதுமக்கள்


உறைமேல் முகவரி


நூலக ஆணையர்,

பொது நூலகத்துறை,

தென்காசி.


Saturday, 12 November 2022

Tuesday, 8 November 2022

வகுப்பு எட்டு-கொங்கு நாட்டு வணிகம் இயங்கலைத தேர்வு

 

Computer Science Quiz

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

Friday, 14 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 6

1➤ நீரற வரியா கரகத்து-இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறநானூறு

2➤ மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கை

=> 11 ஆடல்கள்

3➤ கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடுவது

=> மயிலாட்டம்

4➤ காவடி ஆட்டத்தில் கா என்ற எழுத்திற்கு அர்த்தம்

=> பாரம் தாங்கும் கோல் என்று பொருள்

5➤ இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் காணப்படும்ஆட்டம்

=> காவடியாட்டம்

6➤ வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என்று குறிப்பிடப்படுவது

=> தேவராட்டம்

7➤ தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி

=> தேவதூந்துபி உறுமி

8➤ தேவராட்டத்தில் ஆடுபவர்களின் எண்ணிக்கை

=> 8 முதல் 13 கலைஞர்கள்

9➤ தேவராட்டம்போன்று ஆடுப்படும் ஆட்டம்

=> சேர்வை ஆட்டம்

10➤ போலச் செய்தல் பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலை

=> பொய்க்கால் குதிரை ஆட்டம்

11➤ பொய்க்கால் குதிரை ஆட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> கச்சிகொடி

12➤ பொய்க்கால் குதிரை ஆட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> குதிரைக் களி

13➤ தகக.தகதகக தந்தத்த...என்ற திருப்புகழ் நூலில்அருணகிரிநாதரால் குறிப்பிடப்படும் இசைக்கருவி

=> தப்பாட்ட இசைக்கருவி (பறை என்றும் அழைப்பர்)

14➤ அருணகிரிநாதரின் திருப்புகழ் தொல்காப்பியரின் தொல்காப்பியம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் இசைக்கருவி

=> தப்பாற்ற இசை கருவி அல்லது பறை இசைக்கருவி

15➤ தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாகியவர்

=> ந.முத்துசாமி

16➤ கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

=> ந.முத்துசாமி

17➤ தெருக்கூத்துக் கலைக்காக தாமரைத் திரு விருதைப் பெற்றவர்

=> ந. முத்துசாமி

18➤ திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கலை

=> தெருக்கூத்து

19➤ இசை ,ஓவியம், நடனம் |நாடகம் ,பல குரல் ஆகியவை இணைந்து

=> தோற்ப்பாவை கூத்து

20➤ திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் சுட்டப்படும் கலை

=> தோற்பாவைக் கூத்து

21➤ ராசராச சோழன் தெரு எங்கே உள்ளது

=> மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்

22➤ பூத்தொடுத்தல் கவிதையின் ஆசிரியர்

=> உமா மகேஸ்வரி

23➤ நட்சத்திரங்களின் நடுவே, பெரும்பொழுது, கற்பவை ஆகிய கவிதை தொகுதிகளைப் படைத்தவர்

=> கவிஞர் உமா மகேஸ்வரி

24➤ முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்

=> குமரகுருபரர்

25➤ பிள்ளைத்தமிழின் பருவங்கள்

=> 10 பருவங்கள்

26➤ பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

=> 100

27➤ குமரகுருபரின் காலம்

=> 17ஆம் நூற்றாண்டு

28➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள்

=> கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை. நீதி நெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக் கோவை

29➤ இரு பாலாருக்கும் பொதுவான பருவங்கள்

=> 7

30➤ ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கு மட்டும் உரிய பருவங்கள்

=> சிற்றில் சிறுபறை. சிறுதேர்

31➤ பெண்பாற்பிள்ளைத் தமிழின் கடைசி மூன்று பருவங்கள்

=> கழங்கு அம்மானை ஊசல்

32➤ காலில் அணியும் அணிகலன்

=> சிலம்பு ,கிண்கிணி

33➤ இடையில் அணிவது

=> அரை நாண்

34➤ நெற்றியில் அணிவது

=> சுட்டி

35➤ காதில் அணிவது

=> குண்டலம் , குழை

36➤ தலையில் அணிவது

=> சூழி

37➤ கம்பர் எழுதிய ராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்

=> ராமாவதாரம்

38➤ கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

=> 6

39➤ கம்பரை ஆதரித்த வள்ளல்

=> சடையப்ப வள்ளல்

40➤ கம்பராமாயணம் எவ்வகை பாக்களால் ஆனது

=> விருத்தப்பா

41➤ கம்பர் எழுதிய நூல்கள்

=> சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி .திருக்கை வழக்கம். ஏர் எழுபது, சிலை எழுபது

42➤ பாய்ச்சல் சிறுகதையின் ஆசிரியர்

=> சா. கந்தசாமி

43➤ ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ -ஏழ்மை வேடன் எனக் குறிக்கப்படுபவர்

=> குகன்

44➤ தோழமை என்ற வர் சொல்லிய சொல் அன்றோ- யார் கூறியது

=>குகன் (ராமனை நினைத்து)

45➤ பாலகண்டத்தில் குவளை மலர்கள் எதற்கு உவமையாக குறிப்பிடப்படுகிறது

=> கண்கள்

46➤ பால காண்டத்தில் நீர்நிலைகள் எழுப்பும் அலைகள் எதற்கு உவமையாகக் குறிப்பிடப்படுகிறது

=> திரைச்சீலை

47➤ விசாரணைக் கமிசன் என்னும் புதினத்தை எழுதியவர் யார்

=> சா.கந்தசாமி

48➤ தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர்

=> சா.கந்தசாமி

49➤ சார் கந்தசாமி எழுதிய எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது

=> விசாரணைக் கமிஷன்

50➤ நான் கந்தசாமி எழுதிய எந்த குறும்படத்திற்கு அனைத்து உலக விருது வழங்கப்பட்டது

=> சுடுமண் சிலைகள்