செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 20 November 2022

கோலாட்டம்


 கோலாட்டம் பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையான கோலாட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. கோலாட்டத்தில் ஆடுவோரின் எண்ணிக்கை வரையறை எதுவுமில்லை ஆயினும் எட்டு முதல் பன்னிரண்டு பேர் ஆடுவது சிறப்பாக இருக்கும். ஆடுவோரைத் தவிர, பாடுபவர், இசைக்கலைஞர்கள் என எண்ணிக்கை நிகழ்வு இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

கோலாட்டத்தில் ஈடுபடுவோர் பெரிய அளவில் ஒப்பனை எதுவும் செய்து கொள்வதில்லை. ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும், தலையில் ரிப்பன் கட்டியும் ஆடுகின்றனர். பெண்களும் வழக்கமான உடையுடன் கோலாட்டம் ஆடுகின்றனர். ஆனால், தொழிற்முறைக் கலைஞர்கள் குழு ஆட்டம் ஆடும் போது ஒரே நிறத்தில் உடையைத் தேர்வு செய்து அணிந்து கோலாட்டம் நிகழ்த்துகின்றனர்.

கோலாட்டம் நிகழ்த்துவதற்கான கோல் அளவாலும், உருவாக்கப்படும் முறையாலும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. தச்சு வேலைப்பாடு உடைய வண்ணம் தீட்டப்பட்ட பித்தளை பூண் மாட்டி மணிகள் கோர்த்து அலங்கரிக்கப்பட்ட கம்புகளுடன் ஆடிய கோலாட்டம் இன்று கிடைக்கும் கம்புகளைக் கொண்டு ஆடப்படுகிறது. சில இடங்களில் இரு கோல்களுக்கும் பதிலாக ஒரு கையில் மட்டும் கோலைக் கொண்டு ஆடும் ஆட்டமும் நிகழ்கின்றது.

No comments:

Post a Comment