செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 30 July 2021

வாராந்திர தேர்வு- வகுப்பு 9- ( திராவிட மொழிக்குடும்பம், திருக்குறள், இயந்திரங்களும் இணையவழிப்பயண்பாடுகளும்)

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்.

வாராந்திர தேர்வு

ஒன்பதாம் வகுப்பு (தமிழ்)

நாள்-02-08-21                    நேரம்- 3-00 மணி முதல் 4-00 மணிவரை

                                   மொத்த மதிப்பெண் 20

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் 10 க்கு விடையளி (20 மதிப்பெண்)

1.   தீயைவிடக் கொடியது எது? என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

2.   சிறந்த செல்வமாக எதனை வள்ளுவர் குறிப்பிடுகின்றார்

3.   தீராத துன்பம் தருவன எது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

4.   வாழ்வில் உயர நினைப்பவர் எதனை புறந்தள்ளுதல் வேண்டும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

5.   பசுமண் கலத்துநீர்- உவமையால் விளக்கப்படும் கருத்து யாது?

6.   கனவிலும் இனிமை நட்பு – என வள்ளுவர் குறிப்பிடுவது யாது?

7.   பேதையின் பேதையார் இல்- பாடல் மூலம் வள்ளுவர் குறிப்பிடுவது யாது?

8.   திருவள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

9.   திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் பெயரினைக்குறிப்பிடுக.

10. ஆளறி சோதனைக் கருவியின் பயன் யாது?

11. இணையவழிப் பதிவு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

12. பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வுகள் யாவை?

13. மொழிகளின் காட்சிசாலை என குறிப்பிடுபவர் யார்?ஏன்?

14. தென்திராவிட மொழிகள் யாவை?

15. திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் யாவை?

16. தமிழ்மொழியின் பழமையான இலக்கியம் எது?

17. தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

18. ஐந்து என்ற சொல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

19. தமிழின் தனித்தன்மைகள் ஏதாவது இரண்டினைக் குறிப்பிடுக.

20. வடதிராவிட மொழிகள் யாவை?


No comments:

Post a Comment