செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday, 18 November 2025

வகுப்பு 9 - இயல் 1,2 இலக்கண வினா விடைகள் .. மீட்டறி வினா - விடை

1➤ சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
=> 10
,
2➤ அளபெடுத்தல் என்பது ........ எனப்படும்
=> நீண்டு ஒலித்தல்
,
3➤ உயிரளபெடை எத்தனை வகைப்படும் ?
=> மூன்று
,
4➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட் எழுத்துக்கள் அளபெடுப்பது
=> செய்யுளிசை அளபெடை எனப்படும்.
,
5➤ செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயர் ........
=> இசைநிறை அளபெடை
,
6➤ ஓஒதல் , உறாஅர்க்கு, படாஅ .... பயின்று வரும் அளபெடை
=> செய்யுளிசை அளபெடை
,
7➤ செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளவெடுப்பது
=> இன்னிசை அளபெடையாகும்.
,
8➤ இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?
=> கெடுப்பதூஉம் , எடுப்பதூஉம்
,
9➤ செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாக திரிந்து அளவெடுப்பது
=> சொல்லிசை அளபெடை
,
10➤ சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு .........
=> உரனசை இ, வரனசை இ
,
11➤ நசை - என்ற சொல்லின் பொருள்
=> விருப்பம்
,
12➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய ஒற்றெழுத்துக்கள் அளவு எடுப்பது
=> ஒற்றளபெடை எனப்படும்
,
13➤ ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு
=> எங்ங்கிறைவன், எஃஃ கிலங்கிய
,
14➤ ஓர் எழுத்து தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து வந்து பொருளை உணர்த்துமானால் அது ........ எனப்படும்
=> சொல்
,
15➤ சொல்லின் வேறு பெயர்கள்
=> பதம், மொழி ,கிளவி
,
16➤ பதம் எத்தனை வகைப்படும்?
=> இரண்டு வகைப்படும். (பகு, பகா)
,
17➤ பிரித்தால் பொருள் தராத சொல் .......
=> பகாப்பதம் எனப்படும் ( மரம், உண், பிற , சால)
,
18➤ பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ..........
=> பகுபதம்
,
19➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
=> 2 வகைப்படும். (பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம்)
,
20➤ பெயர் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு....
=> வேலன் (வேல்+ அன் )
,
21➤ வினைப் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு?
=> செய்தான்.. (செய் + த் + ஆன்)
,
22➤ பகுபத உறுப்புக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
=> 6வகைப்படும். (பகுதி, விகுதி ,இடைநிலை, சந்தி,சாரியை ,விகாரம்
,
23➤ பகுதியை .....என்றும் அழைப்பர்
=> முதனிலை, (வினைச்சொல்லில் ஏவலாக அமையும்)
,
24➤ விகுதி என்பது சொல்லின் .........நிற்கும்
=> இறுதியில் (கடைநிலை) ( திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்)
,
25➤ பெயரெச்ச விகுதிகள் எது ?
=> அ, உம்
,
26➤ வினையெச்ச விகுதிகள் எது ?
=> உ , இ
,
27➤ வியங்கோள் வினைமுற்று விகுதி எது ?
=> க, இய, இயர்
,
28➤ தொழிற்பெயர் விகுதி எது ?
=> தல், அல், ஐ, கை, சி, பு
,
29➤ பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ........
=> இடைநிலை ( காலம் காட்டும் இடைநிலை என்று அழைப்பர்)
,
30➤ நிகழ்கால இடைநிலைகள் யாவை?
=> கிறு, கின்று, ஆநின்று
,
31➤ இறந்த கால இடைநிலைகள் யாவை?
=> ர், ட், ற், இன்
,
32➤ எதிர்கால இடைநிலைகள் யாவை?
=> ப், வ்
,
33➤ எதிர்மறை இடைநிலைகள் யாவை ?
=> இல், அல், ஆ
,
34➤ பெயர் இடைநிலைகள் யாவை?
=> ஞ் , ந், வ், ச், த் .
,
35➤ பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது
=> சந்தி
,
36➤ இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ......
=> சாரியை
,
37➤ உடம்படுமெய் ......
=> ய், வ்
,
38➤ பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே.......
=> விகாரம் (இது தனி உறுப்பு அன்று)
,
39➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ....... ஆகும்
=> எழுத்துப் பேறு எனப்படும்
,
40➤ எழுத்துப்பேறில் பெரும்பாலும் வரும் எழுத்து .......
=> த்
,
41➤ சாரியை இடத்தில் (த் ) வந்தால் .....
=> அது எழுத்துப்பேறு எனப்படும்
,
42➤ எழுத்துப் பேறுக்கு எடுத்துக்காட்டு......
=> செய்யாதே... ( செய் + ய் + ஆ + த் + ஏ ) த் என்பது எழுத்துப் பேறு

No comments:

Post a Comment