செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 19 November 2025

வகுப்பு 7- இயல் 2. மீட்டறி வினாக்கள்

1➤ குறில் எழுத்துக்கான சாரியை
=> கரம்
அகரம், இகரம், உகரம்
,
2➤ நெடில் எழுத்துக்கான சாரியை
=> கான்
ஐகான், ஒளகான்
,
3➤ குறில், நெடில் எழுத்துகளின் சாரியை
=> காரம்
மகாரம், ஏகாரம், ஐகாரம்
,
4➤ ஆய்த எழுத்துகளின் சாரியை
=> கேனம்
அஃகேனம்
,
5➤ ஒன்று - எண்ணுப் பெயரின் மாத்திரை
=> 1 + 1/2 + 1/2 = 2
று என்பது குற்றியலுகரம் எனவே 1/2 மாத்திரை நினைவில் கொள்க
,
6➤ குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும் ?
=> 2 இடங்களில் வரும். (நாடு + யாது = நாடியாது, கொக்கு + யாது = கொக்கியது.
கொக்கு + யாது = கொக்கியது. அதாவது நிலை மொழியின் இறுதி எழுத்து உகரமாக இருந்து வருமொழியின் முதல் எழுத்து யா வில் இருந்தால் உகரம் இகரமாக மாறும்.
,
7➤ எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
=> இரண்டு வகைப்படும். 1.முதல் எழுத்து 2.சார்பெழுத்து
,
8➤ முதல் எழுத்துக்கள் எனப்படுபவை யாவை?
=> உயிர் 12, மெய் 18 ஆக 30
,
9➤ தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் எழுத்துச் சாரிகைகள் யாவை?
=> எழுத்துசாரிகைகள் 4. ( கரம், கான், காரம், கேனம்)
,
10➤ தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்........
=> நெடில் தொடர்க் குற்றியலுகரம்
எ.கா... பாகு, மாசு, பாடு, காது, ஆறு
,
11➤ ஆயுத எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்......
=> ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
எங்கு, அஃது , இஃது
,
12➤ தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்.......
=> உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எ.கா அரசு, கயிறு , ஒன்பது, வரலாறு
,
13➤ சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
=> 10
,
14➤ ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் குற்றியலுகரம்
=> முற்றியலுகரம் எனப்படும்.
எகா. பசு, விடு, அது
,
15➤ திணை எத்தனை வகைப்படும்?
=> 2 வகைப்படும்
உயர்திணை , அஃறிணை
,
16➤ தொகைச் சொற்களை விரித்து எழுது? முக்கனி
=> மா, பலா, வாழை
,
17➤ காட்டுப் பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
=> கார்த்திகை விளக்குகளை
,
18➤ காடு என்ற நூலை எழுதியவர்
=> சுரதா
,
19➤ காட்டை இயற்கை விடுதி எனக் கூறியவர் யார்?
=> கவிஞர் சுரதா
,
20➤ நச்சரவம் - என்ற சொல் குறிக்கும் பொருள்
=> விடமுள்ள பாம்பு. (விசமுள்ள)
,
21➤ கிளிக்கண்ணி என்றால் என்ன?
=> கிளியே என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி,இரண்டு இரண்டு அடிகள் அடிகளாக பாடப்படுவது
,
22➤ சுரதாவின் இயற்பெயர் .......
=> இராசகோபாலன்
,
23➤ சுரதா என்பதன் விரிவாக்கம் ......
=> சுப்புரத்தினதாசன்
,
24➤ சுரதா என்ற பெயரில் சுப்புரத்தினம் என்பது யாரைக் குறிக்கும் ?
=> பாரதிதாசனாரை. (பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு இரத்தினம்)
,
25➤ கவிஞர் சுரதாவின் படைப்புகள் யாவை?
=> அமுதம் தேனும் , தேன்மழை, துறைமுகம்
,
26➤ உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
=> கவிஞர் சுரதா
(கவிதைகளில் உவமையை அதிகம் பயன்படுத்துவதால்)
,
27➤ ஒரு நாட்டின் வளம் இதனைப் பொறுத்து அளவிடப்படுகிறது?
=> மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொறுத்து
,
28➤ காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் .....
=> கா, அடவி வனம் அரண் கானகம்
,
29➤ அப்படியே நிற்கட்டும் அந்த மரம் - எழுதியவர்
=> ராஜ மார்த்தாண்டன்
,
30➤ நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
=> கோலிக்குண்டு
,
31➤ கொல்லிப் பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் ......
=> ராஜ் மார்த்தாண்டன்
,
32➤ கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் தமிழ் கவிதைகளைத் தொகுத்தவர்
=> ராஜ மார்த்தாண்டன்
,
33➤ நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடமே மரங்கள் எனக் குறிப்பிட்டவர் ?
=> ராஜமார்த்தாண்டன்
,
34➤ தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்......
=> முண்டந்துறை
,
35➤ காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு எது ?
=> புலி
,
36➤ பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படுவது .......
=> புலி
,
37➤ முண்டந்துறை புலிகள் காப்பகம் ......... சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
=> 895
,
38➤ தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப் பெரிய புலிகள் காப்பகம்
=> முண்டந்துறை புலிகள் காப்பகம்
,
39➤ தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்........
=> மேட்டுப்பாளையம்
,
40➤ ஆசியச் சிங்கங்கள் ...... சரணாலயத்தில் மட்டுமே உள்ளன.
=> கிர்
,
41➤ ஆண் யானை பெண் யானை இரண்டுக்குமே கொம்பு உண்டு
=> ஆப்பிரிக்கா யானைக்கு
,
42➤ காட்டுக்கு அரசன் என இயற்கை விஞ்ஞானிகள் கூறும் விலங்கு எது ?
=> புலி
,
43➤ பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் மிகப்பெரிய தீவில் காட்டை உருவாக்கியவர் யார்?
=> ஜாதவ் பயேங்
அஸ்ஸாம் மாநிலம், ஜோர் விராட் மாவட்டம்
,
44➤ இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் ......
=> ஜாதவ் பயேங்
,
45➤ ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறிய வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்
=> ஜாதுநாத்
,
46➤ ஜாதவுக்கு இந்திய வனமகன் பட்டத்தை வழங்கியது யார் ?
=> ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம்
,
47➤ ஜாதவ் விற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
=> 2015
,
48➤ ஜாதவ்விற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் ......
=> கெளகாத்தி பல்கலைக்கழகம்
,
49➤ மண்ணின் தன்மையை மாற்ற உதவுபவை.... ......
=> மண் புழுக்கள் சிவப்பு கட்டெறும்புகள்
,
50➤ ஜாதவ் பயேங்கை பாராட்டிய வன அலுவலர் .........
=> ஜிட்டு கலிட்டா

No comments:

Post a Comment