செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday, 14 September 2025

வகுப்பு 9 - இயல் 3 மீட்டறி வினாக்கள்

1➤ ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் நூல் எது
=> கலித்தொகை
,
2➤ காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு எது ?
=> ஸ்பெயின்
,
3➤ கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்
=> சங்கன்
,
4➤ ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடும் நூல் எது ?
=> புறப்பொருள் வெண்பாமாலை
,
5➤ எருது பொருதார் கல் உள்ள மாவட்டம் எது?
=> சேலம்
,
6➤ தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்று
=> ஏறு தழுவுதல்
,
7➤ ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சிற்றிலக்கியம் எது ?
=> பள்ளு
,
8➤ சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ....... குறிக்கும்
=> வளையத்தினை
,
9➤ ஏறுதழுவுதல்..... வருடம் தொன்மையானது
=> 2000 ஆண்டுகள்....
,
10➤ சிந்துவெளி கல் முத்திரை ஏறுதழுவுதல் குறிப்பதாக தெரிவித்தவர்
=> ஐராவதம் மகாதேவன்
,
11➤ தமிழக மாட்டினங்களின் தாய் இனம் ......
=> காங்கேயம்
,
12➤ மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
=> 30
,
13➤ இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன ?
=> 28 நாட்கள்
,
14➤ மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் கொடி ....
=> காமூன்று கொடி
,
15➤ மணிமேகலையின் ஆசிரியர் யார்! ?
=> சீத்தலைச் சாத்தனார்
,
16➤ மணிமேகலை __ சமய சார்புடையக் காப்பியம்.
=> பெளத்தம்
,
17➤ கூலம் என்பதன் பொருள் ........
=> தானியம்
,
18➤ ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு ..... என்று அழைக்கப்படுகிறது.
=> துருத்தி
,
19➤ பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
=> மணிமேகலை
,
20➤ விழவுமலி மூதூர் ....... எனக் குறிக்கப்படும் ஊர் .....
=> புகார்.
,
21➤ பட்டிமன்றம் என்பதன் இலக்கிய வழக்கு......
=> பட்டி மண்டபம்
,
22➤ இளங்கோவடிகள் சாத்தனாரை .... ..... .... என பாராட்டியுள்ள
=> தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன்
சாத்தனாரின் வேறு பெயர்கள் என்பதற்கும் மேலே உள்ளதை கொள்க
,
23➤ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் யார்
=> ஆண்டாள்
,
24➤ திருப்பாவையை இயற்றியவர் யார் ?
=> ஆண்டாள்
,
25➤ திருப்பாவையில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
=> முப்பது (30)
,
26➤ சைவ சமய குறவர்கள் எத்தனை பேர் ?
=> 4 பேர்
,
27➤ திருவெம்பாவையின் ஆசிரியர் யார் ?
=> மாணிக்கவாசகர்
,
28➤ திருவம்பாவை உள்ள பாடல்களின் எண்ணிக்கை ......
=> 20
,
29➤ திருப்பாவை எச் சமய இலக்கியம்
=> வைணவ சமய இலக்கியம் (30 பதிகங்களைக் கொண்டது)
,
30➤ திருவம்பாவை எந்த சமயத்தைச் சார்ந்தது
=> சைவ சமயம் (20 பாடல்களைக் கொண்டது)
,
31➤ வினைப் பயனிலைக்கு அடையாக வருவது .....
=> வினையடை
,
32➤ பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது.....
=> பெயரடை
,
33➤ சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் .......... எனப்படும்
=> எழுவாய்
,
34➤ ஒரு தொடரில் பயன் நிலைத்து நிற்கும் இடத்தை ...... என்கிறோம்
=> பயனிலை
,
35➤ பயனிலை வெளிப்படையாக வந்து எழுவாய் மறைந்து வருவது ......
=> தோன்றா எழுவாய் எனப்படும்.
எ.கா. படித்தாய். இச்சொல்லில் நீ என்ற வார்த்தை மறைந்து வருகிறது
,
36➤ பெயர்ப் பயனிலைக்கு எடுத்துக்காட்டு.....
=> சொன்னவள் கலா
,
37➤ வினைப் பயனிலைக்கு எடுத்துக்காட்டு ?
=> நான் வந்தேன்.
,
38➤ ஆகுபெயர் எத்தனை வகைப்படும் ?
=> பதினாறு வகைப்படும்
,
39➤ மரிக்கொழுந்து நட்டான் - எவ்வகை ஆகு பெயர்
=> சினையாகு பெயர்
,
40➤ வானொலி கேட்டு மகிழ்ந்தான் - எவ்வகை ஆகு பெயர் ?
=> கருவி ஆகு பெயர்
,
41➤ அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் - எவ்வகை ஆகுபெயர்?
=> கருத்தாவாகுபெயர்
,
42➤ முல்லையைத் தொடுத்தால் - எவ்வகை ஆகுபெயர்?
=> பொருளாகு பெயர்
,
43➤ வகுப்பறை சிரித்தது -எவ்வகை ஆகுபெயர்
=> இடவாகு பெயர்
,
44➤ கார் அறுத்தான் - எவ்வகை ஆகுபெயர் ?
=> காலவாகு பெயர்
,
45➤ பைங்கூழ் வளர்ந்தது - எவ்வகை ஆகுபெய
=> காரியவாகு பெயர்.
,
46➤ அன்பரசன் நல்ல பையன் - இதில் நல்ல என்பது
=> பேயரடை
,
47➤ மகிழன் மெல்ல வந்தார் - இச்சொல்லில் மெல்ல என்பது
=> வினையடை
,
48➤ பறிக்காதீர் - இதில் உள்ள எதிர் முறை இடைநிலை
=> ஆ
,
49➤ பசியும் பிணியும் பகையும் நீங்கி ....வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> மணிமேகலை
,
50➤ செற்றம் - சொல் குறிக்கும் பொருள்
=> சினம்

No comments:

Post a Comment