செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday, 30 June 2025

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு - 2025- மீட்டறி வினாக்கள் - இயல் 2 புதிய பாடத்திட்டம்

1➤ உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்றவர்
=> தொல்காப்பியர்
,
2➤ உலக உயிர்களின் இயக்கத்தை தீர்மானிப்பது......
=> காற்று
,
3➤ மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறியவர்
=> திருமூலர்
,
4➤ மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்
=> திருமந்திரம்
,
5➤ திருமந்திரத்தை எழுதியவர் யார்
=> திருமூலர்
,
6➤ உலகம் உருவானது எடுத்து சொல்லும் அறிவியல் கொள்கை.....
=> பெருவெடிப்பு கொள்கை
,
7➤ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல.... பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
=> பரிபாடல்
,
8➤ பரிபாடலை எழுதியவர் .....
=> கீரந்தையார்
,
9➤ ஐம்பூதங்களில் முதலில் தோன்றியது
=> காற்று
,
10➤ விசும்பு என்ற சொல்லின் பொருள்
=> வானம்
,
11➤ வளர் வானம் - என்ற சொல்லின் இலக்கண குறிப்பு
=> வினைத்தொகை
,
12➤ ஊழ் ஊழ் -இலக்கணக் குறிப்புத் தருக
=> அடுக்குத்தொடர்
,
13➤ அண்ட வெளியில் கோடிக்கணக்கான பால்வீதிகள் உள்ளன எனக் கூறியவர்
=> எட்வின் ஹப்பிள் 1924 ஆம் ஆண்டு நிரூபித்தார்
,
14➤ அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> திருவாசகம்
,
15➤ திருவாசகத்தை எழுதியவர் யார்?
=> மாணிக்கவாசகர்
,
16➤ பரிபாடல் எத் தொகை நூல்களில் ஒன்று?
=> எட்டுத்தொகை
,
17➤ ஓங்கு பரிபாடல் எனக் குறிக்கப்படும் நூல் எது ?
=> பரிபாடல்
,
18➤ பண்ணோடு பாடப்பட்ட நூல் எனக் குறிக்கப்படும் நூல் எது ?
=> பரிபாடல்
,
19➤ பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளதாக கருதப்படுகிறது
=> 70 பாடல்கள்
,
20➤ பரிபாடலில் தற்போது கிடைக்கப்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
=> 24 பாடல்கள்
,
21➤ பண்டைக்கால மக்களின் வாழ்க்கை முறை சமூக உறவு அறிவாற்றல் போன்றவற்றை புரிந்து கொள்ள பயன்படும் இலக்கியம் எது ?
=> சங்க இலக்கியம்
,
22➤ நாகூர் ரூமி - இவர்களின் இயற்பெயர் என்ன?
=> முகமது ரஃபி
,
23➤ நாகூர் ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்
=> கணையாழி
,
24➤ நாகூர் ரூமி எந்தெந்த துறைகளில் தனது பணியைத் தொடர்ந்தார்
=> குறு நாவல்,சிறுகதை,மொழிபெயர்ப்பு
,
25➤ நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள் யாவை?
=> நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்
,
26➤ நாகூர் ரூமி எழுதிய நாவலின் பெயர் என்ன?
=> கப்பலுக்குப் போன மச்சான்
,
27➤ பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
=> வைத்தியலிங்கம்
,
28➤ பிரபஞ்சன் பிறந்த ஊர் எது ?
=> புதுச்சேரி
,
29➤ பிரபஞ்சன் எழுதிய பிரம்மம் என்ற நூல் ......வகையைச் சார்ந்தது
=> சிறுகதை
,
30➤ வானம் வசப்படும் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
=> பிரபஞ்சன்
,
31➤ பிரபஞ்சனுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைக்கப்பெற்றது
=> 1995
,
32➤ பிரபஞ்சனுக்கு எந்த நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது?
=> வானம் வசப்படும்
,
33➤ பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும் என்ற நூல் ..... வகையைச் சார்ந்தது
=> வரலாற்றுப் புதினம்
,
34➤ பிரபஞ்சனின் படைப்புகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?
=> தெலுங்கு, கன்னடம் ,இந்தி, பிரஞ்சு ,ஆங்கிலம், ஜெர்மன்
,
35➤ பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி - பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
=> அகநானூறு.
,
36➤ பல் பழப் பலவின் பயன் கெழு கொல்லி - பாடல் வரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது ?
=> கொல்லிமலை
,
37➤ சொற்கள் தொடர்வதைத் ...... எனலாம்
=> தொடர்
,
38➤ தொடர் முடிவு தராவிட்டால் ..........எனப்படும்
=> முடியாத் தொடர் எனப்படும்
,
39➤ ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது ......
=> தொகாநிலைத் தொடர் எனப்படும்.
,
40➤ தொகாநிலைத் தொடர் .........வகைப்படும்
=> 9 வகைப்படும்
,
41➤ எழுவாயுடன் பெயர் வினை, வினா ஆகிய பயனிலை கள் தொடர்வது ..... ஆகும்
=> எழுவாய்த் தொடர்
,
42➤ விளியைத் தொடர்ந்து வினை அமைவது ...... ஆகும்
=> விளித் தொடர் எனப்படும்
,
43➤ நண்பா எழுது! - எவ்வகைத்தொடர்
=> விளித் தொடர்
,
44➤ தொடரின் இறுதியில் இடம் பெற வேண்டிய வினைமுற்று,தொடரின் முதலில் அமைந்து பெயரைக் கொண்டு முடிவது ---... தொடர்
=> வினைமுற்று தொடர் ஆகும்
,
45➤ பாடினாள் கண்ணகி- இது எவ்வகை தொடர்
=> வினைமுற்று தொடர்
,
46➤ முற்றுப்பெறாத வினை,பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது
=> பெயரெச்சத் தொடர் எனப்படும்
,
47➤ முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லை கொண்டு முடிவது ..........தொடராகும்
=> வினையெச்சத் தொடராகும்
,
48➤ பாடி மகிழ்ந்தனர் - எவ்வகைத் தொடர்
=> வினையெச்சத் தொடர் ஆகும்
,
49➤ கேட்ட பாடல் - எவ்வகைத் தொடர்
=> பெயரெச்சத் தொடர் ஆகும்.
,
50➤ வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் ......
=> வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்
,
51➤ கட்டுரையை படித்தால் - எவ்வகைத் தொடர்
=> வேற்றுமைத் தொகநிலை தொடர்கள்
,
52➤ அன்பால் கட்டினார் - எவ்வகைத் தொடர்
=> மூன்றாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
,
53➤ அறிஞருக்குப் பொன்னாடை - எவ்வகைத் தொடர்
=> நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
,
54➤ நிலை மொழியில் பெயர் வினைச்சொல்லின் முன்போ பின்போ இடைச்சொல் சேர்ந்துவரின் அது..........தொடராகும்
=> இடைச்சொல் தொடர் ஆகும்
,
55➤ மற்றொன்று கிடைத்தது - எவ்வகைத் தொடர்
=> இடைச்சொல் தொடர்
,
56➤ அவரே சொன்னார் - எவ்வகைத் தொடர்
=> இடைச்சொல் தொடர்
,
57➤ உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது ........ தொடராகும்.
=> உரிச்சொல் தொடர்
,
58➤ சாலச் சிறந்தது - எவ்வகைத் தொடர் ...
=> உரிச்சொல் தொடர்
,
59➤ ஒரு சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கித் தொடர்வது ...... தொடராகும்
=> அடுக்குத் தொடராகும்
,
60➤ ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது ...........
=> கூட்டு நிலைப் பெயரெச்சம் எனப்படும்
,
61➤ கூட்டு நிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு......
=> வேண்டிய, கூடிய, தக்க | வல்ல முதலான பெயரெச்சங்கள்
,
62➤ வேண்டிய கூடிய தக்க வல்ல முதலான பெயரெச்சங்களை செய்ய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் ...........உருவாகின்றன.
=> கூட்டு நிலைப் பெயரெச்சங்கள் எனப்படும்
,
63➤ கேட்க வேண்டிய பாடல் - இதில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம்......
=> கூட்டு நிலைப் பெயரெச்சம்
,
64➤ சொல்லத்தக்க செய்தி - இதில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம்
=> கூட்டு நிலைப் பெயரெச்சம்
,
65➤ Strom - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல் .....
=> புயல்
,
66➤ Tornado - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> சூறாவளி
,
67➤ Tempest - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> வன் புயல்
,
68➤ Land Breeze - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> நிலக்காற்று
,
69➤ Sea Breeze - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> கடற் காற்று
,
70➤ whirlwind - - ஆங்கில மொழிக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> சுழல் காற்று
,
71➤ குயில் பாட்டினை எழுதியவர் .......
=> பாரதியார்
,
72➤ அதோ அந்தப் பறவை போல > நூலினை எழுதியவர் ......
=> ச முகமது அலி
,
73➤ உலகின் மிகச் சிறிய தவளை ---- நூலினை எழுதியவர்
=> எஸ் ராமகிருஷ்ணன்
,
74➤ அகன் சுடர் - என்பதன் பொருள் யாது?
=> பெரிய தீபம், அகன்ற ஒளி
,
75➤ ஆர்கலி - சொல்லின் பொருள் யாது?
=> ஆர்ப்பரிக்கும் கடல், கடல்

No comments:

Post a Comment