செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday, 22 June 2025

தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு-2025 இயல் 1 மீட்டறி வினா

 

1➤ நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
=> தாள்
,
2➤ கீரை வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
=> தண்டு
,
3➤ குத்துச்செடி புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்
=> தூறு
,
4➤ தாள் என்பது எதன் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்
=> நெல்
,
5➤ கால்டுவெல் அவர்கள் எழுதிய நூல்
=> திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
,
6➤ கம்பு சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> தட்டு அல்லது தட்டை
,
7➤ கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> கழி
,
8➤ மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> கழை
,
9➤ புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> அடி
,
10➤ அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> கவை
,
11➤ கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> கொம்பு
,
12➤ கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> சினை
,
13➤ சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> போத்து
,
14➤ போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> குச்சு
,
15➤ இணுக்கு என்பது.......
=> குச்சியின் பிரிவு
,
16➤ புளி வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> இலை
,
17➤ நெல் புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> தாள்
,
18➤ சோளம் கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> தோகை
,
19➤ காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> சண்டு
,
20➤ காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> சருகு
,
21➤ சுள்ளி என்பது.....
=> காய்ந்த குச்சி
,
22➤ நெல் புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> துளிர் அல்லது தளிர்
,
23➤ புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> முறி அல்லது கொழுந்து
,
24➤ சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> குருத்து
,
25➤ கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> கொழுந்தாடை
,
26➤ பூவின் தோற்ற நிலை.....
=> அரும்பு
,
27➤ பூவின் மலர்ந்த நிலை என்பது....
=> மலர்
,
28➤ பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> போது
,
29➤ மரம் செடியினின்று பூ கீழே விழுந்த நிலை எது
=> வீ
,
30➤ பூ வாடின நிலை என்பது எது
=> செம்மல்
,
31➤ உலகப் பெருந்தமிழர் என்று அழைக்கக் கூடியவர் யார்
=> இரா. இளங்குமரனார்
,
32➤ பூவோடு கூடிய இளம் பிஞ்சு
=> பூம்பிஞ்சு
,
33➤ இளம் காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> பிஞ்சு
,
34➤ மூசு என்று அழைக்கப்படுவது எது
=> பலாப்பிஞ்சு
,
35➤ கவ்வை என்று அழைக்கப்படுவது எது
=> எள் பிஞ்சு
,
36➤ தென்னை பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> குரும்பை
,
37➤ நுழாய் என்று அழைக்கப்படுவது எது
=> இளம் பாக்கு
,
38➤ கருக்கல் என்று அழைக்கப்படுவது எது
=> இளநெல்
,
39➤ கச்சல் எனப்படுவது எது
=> வாழைப்பிஞ்சு
,
40➤ அவரை துவரை முதலியவற்றின் குலை எவ்வாறு அழைக்கப்படும்
=> கொத்து
,
41➤ கொடி முந்திரி போன்றவற்றின் குலை
=> குலை
,
42➤ வாழைக்குலை எவ்வாறு அழைக்கப்படும்
=> தாறு
,
43➤ கேழ்வரகு சோளம் முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்
=> கதிர்
,
44➤ நெல் தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்
=> அலகு அல்லது குரல்
,
45➤ வாழைத்தாற்றின் ஒரு பகுதி எவ்வாறு அழைக்கப்படும்
=> சீப்பு
,
46➤ நுனியில் சுருங்கிய காய்.......
=> சூம்பல்
,
47➤ சுருங்கிய பழம்.....
=> சிவியல்
,
48➤ புழு பூச்சி அரித்த காய் அல்லது கனி
=> சொத்தை
,
49➤ குளுகுளுத்த பழம்......
=> அளியல்
,
50➤ குளுகுளுத்து நாறிய பழம்
=> அழுகல்
,
51➤ பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> சொண்டு
,
52➤ தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்....
=> அல்லிக்காய்
,
53➤ தென்னையில் கெட்ட காய்
=> ஒல்லிக்காய்
,
54➤ வரகு கேழ்வரகு முதலியவற்றின் உமி..... எனப்படும்
=> கொம்மை
,
55➤ நெல் கம்பு முதலியவற்றின் தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
=> கூலம்
,
56➤ அவரை உளுந்து முதலியவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன
=> பயறு
,
57➤ கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகின்றன
=> விதை
,
58➤ புளி காஞ்சீரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> காழ்
,
59➤ அவரை துவரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> முதிரை
,
60➤ நெல் கத்திரி முதலியவற்றின் இளநிலை.....
=> நாற்று
,
61➤ மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை.....
=> கன்று
,
62➤ வாழையின் இளநிலை....
=> குருத்து
,
63➤ தென்னையின் இளநிலை....
=> பிள்ளை
,
64➤ நெல் சோளம் முதலியவற்றின் பசும்பயிர் எவ்வளவு அழைக்கப்படும்
=> பைங்கூழ்
,
65➤ வரகு காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய........ தமிழ்நாட்டில் அன்றி வேறெங்கும் விளைவதில்லை
=> சிறு கூலங்கள்
,
66➤ உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே என்று கூறியவர்
=> கா அப்பாத்துரையார்
,
67➤ திருவள்ளுவர் தவச்சாலை என்ற ஒன்றை அமைத்தவர் யார்
=> ரா இளங்குமரனார்
,
68➤ தமிழ்த் தென்றல் திரு வி க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கொண்டவர்......
=> ரா இளங்குமரனார்
,
69➤ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர் யார்
=> தேவநேயப் பாவாணர்
,
70➤ உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்
=> தேவநேயப் பாவாணர்
,
71➤ போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் 1554 கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
👁 Show Answer
=> தமிழ்
,
72➤ இந்திய மொழிகளிலே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது
=> தமிழ்
,
73➤ நிலவகை, நன்செய் வகை வேலி வகை ஆகியவற்றை பற்றி விளக்கியவர்
=> தேவநேயப் பாவாணர்
,
74➤ வடலி என்பது.....
=> பனையின் இளநிலை
,
75➤ பழங்களின் மேற்பகுதி மிக மிக மெல்லியதாக இருந்தால்..... என்பர்
=> தொலி
,
76➤ கச்சல் என்பது....ன் பிஞ்சு வகை
=> வாழை
,
77➤ கார்டிலா என்ற நூல் தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட ஆண்டு எது
=> 1554
,
78➤ முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட தமிழ் நூலின் வண்ணம்
=> கருப்பு மற்றும் சிவப்பு
,
79➤ தமிழகத்தில் விளையும் சம்பா நெல் வகைகள் மொத்தம்
=> 60
,
80➤ முதன் முதலாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்
=> கார்டிகலா

No comments:

Post a Comment