செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 29 September 2022

பள்ளி மேலாண்மைக் குழு பல்வேறு மாவட்ட காணொளிகள்



 

பள்ளி மேலாண்மைக்குழு 3 SDP3

_

 

பள்ளி மேலாண்மைக்குழு SDP 2


 

பள்ளி மேலாண்மைக்குழு SDPI


 

SMC கூட்டம் சார்ந்த 30.09 -22 காணொலி


 

Thursday 22 September 2022

நிலம்- பொது

சிந்தனை வினா

நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
(i) துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர், போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மக்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை.

(ii) மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்க்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்தல்.

(iii) நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(iv) கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நிலமாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நிலவளத்தைக் காப்பாற்றலாம்.

‘வெட்டுக்கிளியும் சருகுமானும்

 பாடநூல் வினாக்கள்


‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை:
காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்று தான் வெட்டுக்கிளியும் சருகுமானும்’ ஆகும். வெட்டுக்கிளியும்

சருகுமானும் :
குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.

ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. ‘என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?’ அதற்கு சருகுமான், ‘காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது.’


விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும் :
கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கண்ணும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. ‘கூரன் இங்கு வந்தாளா?’ என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.

உயிர்பிழைத்த கூரன் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. ‘இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்’ என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.


முடிவுரை :
அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தான் இன்றும்கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன

Monday 19 September 2022

பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் - இயங்கலை வழித் தேர்வு (online) இயல் 1 முதல் 6 வரை 50 மதிப்பெண்

பத்தாம் வகுப்பு இலக்கணம் இயல் 1முதல் 6 வரை

Please fill the above data!

Generated By Html Quiz Generator

ஸ்கோர் :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

Thursday 15 September 2022

 

https://quizzory.in/id/632412576a662607642f0a5c

ஒலி

https://quizzory.in/id/632412576a662607642f0a5c

வகுப்பு 7, 8, 9, 10, 11, 12 க்கு பொதுவானது. பிழையின்றி எழுதுதல் (விலங்குகளின்/ பறவைகளின் ஒலி மரபு- மீட்டுணர் பயிற்சி

1➤ ஆடு

=> கத்தும்

2➤ எருது

=> எக்காளமிடும்

3➤ குதிரை

=> கனைக்கும்

4➤ குரங்கு

=> .அலப்பும்

5➤ நரி

=> ஊளையிடும்

6➤ புலி

=> உறுமும்

7➤ பூனை

=> சீறும்

8➤ யானை

=> பிளிறும்

9➤ கழுதை

=> கத்தும்

10➤ பன்றி

=> உறுமும்

11➤ வண்டு

=> முரலும்

12➤ வானம்பாடி

=> பாடும்

13➤ சிங்கம்

=> முழங்கும்

14➤ காகம்

=> கரையும்

15➤ கிளி

=> கொஞ்சும்

16➤ குயில்

=> கூவும்

17➤ கோழி

=> கொக்கரிக்கும்

18➤ சேவல்

=> கூவும்

19➤ புறா

=> குணுகும்

20➤ மயில்

=> அகவும்

21➤ எலி

=> கீச்சிடும்

22➤ கூகை

=> குழறும்

23➤ ஆந்தை

=> அலறும்

24➤ நாய்

=> குரைக்கும்

25➤ பசு

=> கதறும்

Wednesday 14 September 2022

வகுப்பு-9, 10- (மீட்டுணர் பயிற்சி ) - தொகைச் சொற்களை விரித்து எழுதுக

1➤ இருவினை

=> நல்வினை , தீவினை/, தன் வினை,பிறவினை /செய்வினை, செயப்பாட்டுவினை

2➤ முத்தமிழ்

=> இயற்றமிழ் ,இசைத்தமிழ், நாடகத்தமிழ்

3➤ முப்பால்

=> அறத்துப்பால் , பொருட்ப்பால் இன்பத்துப்பால்

4➤ மூவிடம்

=> தன்மை, முன்னிலை, படர்க்கை

5➤ முக்கனி

=> மா, பலா , வாழை

6➤ மூவேந்தர்

=> சேரர், சோழர் , பாண்டியர்

7➤ முப்படை

=> தரைப்படை, கப்பல் படை, விமானப்படை

8➤ நாற்றிசை

=> வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு

9➤ நானிலம்

=> குறிஞ்சி, முல்லை .மருதம், நெய்தல்

10➤ நாற்படை

=> தேர்ப்படை ,யானைப் படை, குதிரைப் படை காலாட்ப் படை

11➤ நாற்பொருள்

=> அறம்' பொருள். இன்பம், வீடு

12➤ ஐம்பொறி

=> மெய், வாய், கண், மூக்கு, செவி

13➤ ஐம்புலன்

=> சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

14➤ ஐந்திணை

=> குறிஞ்சி,முல்லை ,மருதம் ,நெய்தல் ,பாலை

15➤ ஐம்பால்

=> ஆண்பால், பெண்பால். பலர்பால் ,ஒன்றன்பால் , பலவின்பால்