செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 8 January 2021

வகுப்பு10- புறத்திணை இலக்கணம்- வினாவிடைகள்.

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்……………………..
அ) நாட்டைக் கைப்பற்றல்
ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
Answer:
இ) வலிமையை நிலைநாட்டல்


குறுவினா

Question 1.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் - 1

சிறுவினா

Question 1.
அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
Answer:

  • இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை வஞ்சித்திணை’ ஆகும்.
  • மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.
  • அவந்தி நாட்டுமன்னன், மருத நாட்டு மன்னனுடன் பகைகொண்டு போர் புரிந்து மருத நாட்டைக் கைப்பற்ற நினைப்பதால் இந்நிகழ்வு வஞ்சித்திணைக்குப் பொருந்தி வருகிறது.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது …………………….
அ) புறத்திணை
ஆ) புறநானூறு
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறத்திணை

Question 2.
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) ஒன்பது
ஆ) பதினொன்று
இ) பன்னிரண்டு
ஈ) பதிமூன்று
Answer:
இ) பன்னிரண்டு

Question 3.

வெட்சிப் பூ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) மல்லிகைப்பூ
ஆ) இட்லிப்பூ
இ) சங்குப்பூ
ஈ) உன்னிப்பூ
Answer:
ஆ) இட்லிப்பூ


Question 4.
ஒரு தலைக்காமத்தைக் குறிக்கும் திணை …………………….
அ) பெருந்திணை
ஆ) பொதுவியல்
இ) கைக்கிளை
ஈ) கொடையை
Answer:
இ) கைக்கிளை

Question 5.
‘வாகை’ என்பது எதனைக் குறிக்கும்?
அ) போர்
ஆ) வெற்றி
இ) ஆநிரைமீட்டல்
ஈ) மதில் வளைத்தல்
Answer:
ஆ) வெற்றி

Question 6.
‘நொச்சி’ எந்நிலத்துக்கு உரியது …………………….
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) முல்லை
ஈ) பாலை
Answer:
ஆ) மருதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 7.
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது …………………….
அ) கோட்டையைக் காக்க
ஆ) மன்னனைக் காக்க
இ) ஆநிரைக் கவர
ஈ) வலிமையை நிலைநாட்ட
Answer:
அ) கோட்டையைக் காக்க

Question 8.
பாடாண் திணை பிரித்து எழுதுக.
அ) பாடாண் + திணை
ஆ) பாடாண் + ஆண் + திணை
இ) பாடு + ஆண் + திணை
ஈ) பாட + ஆண் + திணை
Answer:
இ)பாடு+ஆண்+திணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 9.
காஞ்சி என்பது ஒரு வகை …………………….
அ) நெடுமரம்
ஆ) குறுமரம்
இ) குறுஞ்செடி
ஈ) புதர்ச்செடி
Answer:
ஆ) குறுமரம்

Question 10.
போரைத் தொடங்கும் நிகழ்வாகக் கருதப்படுவது …………………….
அ) கோட்டை வளைத்தல்
ஆ) போரிடல்
இ) ஆநிரை கவர்தல்
ஈ) கோட்டை காத்தல்
Answer:
இ) ஆநிரை கவர்தல்

Question 11.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த போது ……………………. சொத்தாகக் கருதினர்.
அ) கோட்டையை
ஆ) ஆநிரைகளை
இ) நிலத்தை
ஈ) வீரத்தை
Answer:
ஆ) ஆநிரைகளை


Question 12.
மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை …………………….
அ) பாடாண் திணை
ஆ) பொதுவியல் திணை
இ) வாகைத் திணை
ஈ) நொச்சித் திணை
Answer:
அ) பாடாண் திணை

Question 13.
அன்பின் ஐந்திணை பற்றியது ……………………. ஆகும்.
அ) அகப்பொருள்
ஆ) புறப்பொருள்
இ) நுண்பொருள்
ஈ) ஐவகைநிலம்
Answer:
அ) அகப்பொருள்

Question 14.
கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்பது …………………….
அ) வெட்சி
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) உழிஞை
Answer:
இ) கரந்தை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 15.
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நொச்சித்திணை – அ) கோட்டையைக் கவர கோட்டையைச் சுற்றி வளைத்தல்
2. உழிஞைத்திணை – ஆ) கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
3. தும்பைத்திணை – இ) இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
4. வாகைத்திணை – ஈ) போரில் வெற்றி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 17.
பொருத்துக.
1. பாடாண்திணை – அ) வெட்சி முதல் பாடாண் வரை கூறப்படாத செய்திகள்
2. பொதுவியல் திணை – ஆ) ஆளுமையாளரின் கல்வி முதலானவற்றைப் புகழ்ந்து பாடல்
3. கைக்கிளை – இ) பொருந்தாக் காமம்
4. பெருந்திணை – ஈ) ஒருதலைக்காமம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 18.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
அ) 8


Question 19.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் …………………….
அ) 8
ஆ) 12
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

Question 20.
அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள்
அ) கைக்கிளை, பெருந்திணை
ஆ) பொதுவியல், பாடாண்
இ) வெட்சி, கரந்தை
ஈ) நொச்சி, உழிஞை
Answer:
அ) கைக்கிளை, பெருந்திணை

Question 21.
முடக்கத்தான் (முடக்கொற்றான்) என்பது …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப் பூ
இ) வெட்சிப் பூ
ஈ) நொச்சிப் பூ
Answer:
அ) உழிஞைப் பூ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Question 22.
மருத நிலத்திற்குரியப்பூ …………………….
அ) உழிஞைப் பூ
ஆ) தும்பைப்பூ
இ) வெட்சிப்பூ
ஈ) நொச்சிப்பூ
Answer:
ஈ) நொச்சிப்பூ

Question 23.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) வெட்சித்திணை – ஆநிரை கவர்தல்
ஆ) கரந்தைத்திணை – ஆநிரை மீட்டல்
இ) வஞ்சித்திணை – மண்ணாசை காரணமாக போர்
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்
Answer:
ஈ) காஞ்சித்திணை – கோட்டையைக் காத்தல்

Question 24.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) காஞ்சித்திணை – எதிர்த்துப் போரிடல்
ஆ)நொச்சித்திணை – கோட்டை காத்தல்
இ) உழிஞைத்திணை – மதில் வளைத்தல்
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி
Answer:
ஈ) தும்பைத்திணை – போரில் வெற்றி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

குறுவினா

Question 1.
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சி
  • கரந்தை
  • வஞ்சி
  • காஞ்சி
  • நொச்சி
  • உழிஞை
  • தும்பை
  • வாகை
  • பாடாண்
  • பொதுவியல்
  • கைக்கிளை
  • பெருந்திணை


Question 2.
நொச்சிப் பூக்களின் வகைகளைக் குறிப்பிடுக.
Answer:
மணிநொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெண் நொச்சி – போன்றவையாகும்.

Question 3.
தும்பைத் திணையை விளக்குக.
Answer:
பகை கொண்ட வேந்தர்கள் இருவரும் ‘தம் வலிமையே பெரிது’ என்பதை நிலை நாட்டும் பொருட்டு தம் வீரர்களுடன் தும்பைப் பூச்சூடி களம் குறித்துப் போரிடுதல் ஆகும்.

Question 4.
பாடாண் திணையை விளக்குக.
Answer:

  • பாடு + ஆண் + திணை எனப் பிரிக்கப்படும்.
  • பாடப்படும் ஆண்மகனது, கல்வி, வீரம், செல்வம், புகழ், ஈகை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது.
  • போரை மட்டும் சொல்லாது ஒருவரின் பிற மாண்புகளையும் குறிப்பிடுவதே பாடாண்திணையாகும்.


Question 5.
பொதுவியல் திணையை விளக்குக.
Answer:
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

Question 6.
புறத்திணை என்பது யாது?
Answer:
புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணையாகும்.

Question 7.
ஆநிரை கவர்தல் நடைபெறக் காரணம் யாது?
Answer:

  • மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளை (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
  • ஒரு குழுவினர் மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாயிற்று.
  • போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

Question 8.
போரிடும் அரசர்கள் இருவரும் ஒரே வகைப் பூவைச் சூடுவர் – எப்போது? எவ்வகைப்பூ?
Answer:
பகை மன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவர்.


Question 9.
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறும் புறத்திணைகள் : எட்டு

  • வெட்சிப்பூ – வெட்சித்திணை
  • கரந்தைப் பூ – கரந்தைத் திணை
  • வஞ்சிப்பூ – வஞ்சித்திணை
  • காஞ்சிப்பூ – காஞ்சித்திணை
  • நொச்சிப்பூ – நொச்சித்திணை
  • உழிஞைப்பூ – உழிஞைத்திணை
  • தும்பைப்பூ – தும்பைத்திணை
  • வாகைப்பூ – வாகைத்திணை

Question 10.
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பூக்கள் இடம்பெறாத புறத்திணைகள் : நான்கு.
அவை: பாடாண் திணை, பொதுவியல் திணை, கைக்கிளை, பெருந்திணை

Question 11.
தொல்காப்பியர் காலத்தில் அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள் யாவை?
Answer:
கைக்கிளை, பெருந்திணை.


Question 12.
மதில் போர் பற்றிய திணைகள் யாவை?
Answer:
நொச்சித்திணை, உழிஞைத்திணை.

Question 13.
ஆநிரை பற்றிய திணைகள் யாவை?
Answer:
வெட்சித்திணை, கரந்தைத்திணை.

Question 14.
எதிர் எதிர் புறத்திணைகள் யாவை?
Answer:

  • வெட்சித்திணை (கவர்தல்)
  • காஞ்சித்திணை (எதிர்போரிடல்)
  • கரந்தைத்திணை (மீட்டல்)
  • நொச்சித்திணை (கோட்டை காத்தல்)
  • வஞ்சித்திணை (மண்ணாசை கருதிப் போரிடல்)
  • உழிஞைத்திணை (கோட்டை முற்றுகையிடல்)


Question 15.
வெற்றிப்பூ எது?
Answer:
வெற்றிப்பூ : வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு வாகைப்பூ சூடி மகிழ்வர்.

Question 16.
கல்வி, செல்வம், வீரம் முதலியவற்றைப் புகழ்ந்து பாடும் புறத்திணை எது?
Answer:
பாடாண் திணை.

Question 17.
புறப்பொருள் பற்றி உரையாடியவர்கள் யாவர்?
Answer:

  • கிள்ளிவளவன் : முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்
  • சேரலாதன் : பத்தாம் வகுப்பு மாணவர்

Question 18.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெரும்போர் நடக்கின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் :
பகைமன்னர் இருவரும் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவர். இது தும்பைத் திணை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

விளக்கம் :
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் தங்கள் வலிமை பெரிது என்று நிலைநாட்ட, தம் வீரர்களுடன் போரிடுவதால், இதனைத் தும்பைத் திணையாகக் கொள்ளலாம்.

Question 19.
மலைப்பகுதியில் அரியதாகக் கிடைக்கும் நெல்லிக்கனி. அது நீண்ட ஆயுள் தரும். அதியனே நீவிர் உண்ணாது. எம் சாதல் ஒழிய கொடுத்த பெருமகனே என்று வாழ்த்துகிறார் ஔவையார். இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும் இலக்கணம் வழி விளக்குக.
Answer:
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணம் :
பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது பாடாண் திணையாகும்.

விளக்கம் :
அதியமானின் புகழை ஒளவையார் பாடுவதால், இஃது பாடாண் திணையாகும்.

சிறுவினா

Question 1.
புறத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை? விளக்குக.
Answer:
புறத்திணை 12 வகைப்படும். அவை:

  • வெட்சித்திணை – நிரை கவர்தல்
  • கரந்தைத்திணை – நிரை மீட்டல்
  • வஞ்சித்திணை – வஞ்சிப்பூ சூடி போருக்குச் செல்லுதல்
  • காஞ்சித்திணை – காஞ்சிப்பூ சூடி எதிர்த்துப் போரிடல்
  • நொச்சித்திணை – கோட்டையைக் காக்க உள்ளிருந்து போரிடுதல்
  • உழிஞைத்திணை – கோட்டையைக் கைப்பற்ற சுற்றி வளைத்தல்.
  • தும்பைத்திணை – வலிமையை நிலைநாட்ட களம் குறித்துப் போரிடுதல்
  • வாகைத்திணை – போரில் வெற்றி பெற்றவன் வாகை சூடி மகிழ்தல்
  • பாடாண்திணை – போரை மட்டும் சொல்லாது மன்னனின் பேராண்மைகளைப் பாடுவது
  • பொதுவியல் – புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
  • கைக்கிளை பெருந்திணை – ஒருதலைக்காமம்
  • பெருந்திணை – பொருந்தாக்காமம்

No comments:

Post a Comment