இலக்கிய உலா
- Home
- இலக்கிய உலா
- மாணவர் உலா
- ஆசிரியர் உலா
- kalvisolai
- tamilnadu government website
- கல்விசெய்தி.நெட்
- பாடசாலை.நெட்
- தமிழகஆசிரியர்.காம்
- கல்வி சிறகுகள்.காம்
- டி.என்.கல்வி.காம்
- தமிழ் இணையக்கல்விக்கழகம்
- தமிழ் எழுத்தாளர்களின் கட்டுரைகள்
- வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் கட்டுரைகள்
- தமிழ் இனம், பண்பாடு, வரலாற்று செய்திகள்
- தமிழ் கவிதைகள் எழுத்து.காம்
- தமிழ்நாடு பாடநூல் கழகம் - வகுப்பு 1 முதல் 12 வரை பாடப்புத்தகம் பதிவிறக்கம்
- மின்ன
- மின்னணு வடிவில் இலக்கிய நூற்களை பதிவிறக்கம் செய்திட
- சென்னை நூலகம்
- தமிழ் மின்நூற்கள் பதிவிறக்கம்
- தமிழில் மொழி பெயர்க்க
- திருக்குறள் MP3 டவுண்லோடு செய்வதற்கு
- திருக்குறள் MP3 டவுண்லோடு செய்வதற்கு
தமிழுக்கு அமுதென்று பெயர்
Wednesday, 21 October 2020
கல்வியில் சிறந்த பெண்கள் ஆன்லைன் தேர்வு
Friday, 16 October 2020
தேர்வு அறிவிப்பு
Tuesday, 13 October 2020
சிலேடை அணி வகுப்பு 8 முதல் 12 வரை உள்ள மாணவர்களுக்கானது.
ஒரு சொல், அல்லது சொற்றொடர் பல பொருள்படி அமைவது சிலேடை எனப்படும்.
2.சிலேடை அணியின் வகைகள் யாவை?
1.செம்மொழிச் சிலேடை
2.பிரிமொழிச் சிலேடை என இரு வகைப்படும்.
வினாக்களுக்கு விடையளி
1.செம்மொழிச் சிலேடை என்றால் என்ன?
2.பிரிமொழிச் சிலேடை என்றால் என்ன?
3. தாமரை - என்ற சொல் எவ்வகைச் சிலேடை
4. படி என்ற சொல், எவ்வவைச் சிலேடை என்பதனைக் குறிப்பிடுக.
5. நீங்கள் படித்து இரசித்த, சிலேடை நயங்களைக் குறிப்பிடுக
Saturday, 10 October 2020
அணிகள் சம்பந்தமான பாடப்பகுதியில் சிறு தேர்வு ( ஆன்லைன் வழியாக). மொத்த மதிப்பெண் 4
Friday, 9 October 2020
வஞ்சப்புகழ்ச்சி அணி
அணி இலக்கணம்
வஞ்சப்புகழ்ச்சி அணி
அணி விளக்கம்-
ஒருவரைப் புகழ்வது போலப் இகழ்வதும், இகழ்வதினைப்போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சியணி எனப்படும்.
வஞ்சப்புகழ்ச்சியணியினை விளக்கும் காணொலி
வகுப்பு( 6-முதல் 12 வகுப்புக்களுக்கானது)
வினா
1.வஞ்சப்புகழ்ச்சியணி என்றால் என்ன?
2.
Thursday, 8 October 2020
தற்குறிப்பேற்ற அணி (வகுப்பு 8,9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்காக)...
தற்குறிப்பேற்ற அணி
இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
வினா1.
தற்குறிப்பேற்ற அணி விளக்குக
Wednesday, 7 October 2020
இயல் 5 பாடறிந்து ஒழுகுதல்
இயல் 5
பாடறிந்து ஒழுகுதல்
ஒலிப்பேழை
மனப்பாடப் பாடலை முறையாக மனப்பாடம் செய்யவும்.1.ஆற்றுதல் என்பது யாது?
2. கேள்விக்கான விடையை தேடி, கண்டுபிடிக்கவும்
Saturday, 9 September 2017
தமிழால் சிறப்போம், - ” நீரோட்டகம் ” அறிவோம் !
சித்திரக் கவி வகைல இருபதுக்கு மேல இருக்கு.
மேலதிகத் தகவல்:
மதுரகவி -
வித்தாரக்கவி -
Tuesday, 5 September 2017
அட்டநாகபந்தம்
சித்திரக்கவியின் வகைகள்
1.அட்டநாக பந்தம்
- தமிழழகன் கவிதை
- பாரதிக் கெல்லை
- பாருக்குளே இல்லை
- 15 எழுத்தில் ஈரடிக் கவிதை அமையவேண்டும்
- 4ஆவது எழுத்தும், 10ஆவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நாரணனை நாடு
- பூரணனைக் கொண்டாடு
Friday, 1 September 2017
Wednesday, 30 August 2017
சித்திரக்கவி - விளக்கம்

பருவ மாகவி தோகன மாலையே
பொருவிலாவுழை மேவன கானமே - (முதல் அடி)
மருவு மாசைவி டாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே - (இரண்டாம் அடி)
பொருள் :
(1)
முதல் அடி

முதல் அடி

முதல் அடி
இரண்டாம் அடி

2 3 4 5 6 7 8 9 10 11 1
மு க ந க/ ந ட் ப து/ ந ட் பு அ ன் று/ நெ ஞ் ச த் து
அ க ந க/ ந ட் ப து/ ந ட் பு
1 2 3 4 5 6 7 8 9 10 11
இது ஒரு திருக்குறளாகும் . இந்தக் குறளில் கீழடியில் உள்ள 11 எழுத்துகளும் முன்னடியில் இருந்து பெறப்பட்ட எழுத்துகளால் இயற்றப் பட்டதாகும் .
03 மாலைமாற்று :

பூ நீறு நாளைவா பூ
பொருள் :
தேரு வருதே மோரு வருமோமோரு வருமோ தேரு வருதே
பொருள் :
வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.
தமிழரின் பக்தி இலக்கியங்களில் இந்த மாலை மாற்று ஒன்று வருகின்றது . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன. அவற்றில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு சொல்கின்றது ,
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
இதன் பொருள் :
யாம் ஆமா-யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
நீ ஆம் மாமா-நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
யாழ் ஈ காமா-யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
காணாகா-இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
காணாகா-இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று
காழீயா-சீர்காழியானே
மாமாயா நீ-அம்மை அம்மை ஆம் நீ
மாமாயா-(இப்படி) பெரிய மாயமானவனே
04 எழுத்து வருத்தனம் :
வருத்தனம் என்றால் வளருதல் என்று நாங்கள் பொருள் கொள்ளலாம் . ஒரு
கவிதையில் பல கருத்துகள் சொல்லப்பட்டதாகக் கொள்வோம். அதில் முதற்கருத்து ஒரு சொல்லின் அடிப்படையாய் அமைகிறது என்று எடுத்துக் கொண்டால், அந்தச் சொல்லில் சில எழுத்துகளை மேலும் மேலும் சேர்த்துப் பொருள் பெறுவது எழுத்து வருத்தனம் (எழுத்து வளர்த்தல்) என்ற சித்திரகவியாகும். இதை எளிய முறையில் சொலவதானால் ,
மதுரை என்பது ஓர் ஊரின் பெயர். அதில் ரை எழுத்து மறைந்தால் குடிக்கும் கள் கிடைக்கும். அதனோடு ந என்ற எழுத்து சேர்ந்தால் நமது என்ற உடமைச் சொல் கிடைக்கும். இவ்வகையில் கிடைத்த சொற்கள் மதுரை, மது, நமது என்பனவாகும்.
இதோ ஒரு உதாரணம் ,
"ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்
பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த
உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் தாமரையென் றாம்."
பொருள் :
திருமால் சங்கு ஆயுதத்தை உடையவர். அவர் முன்னொரு காலத்தில் கோவராத்தன மலையை கைவிரலால் தூக்கினார். அவர் பொன்னாடை அணிபவர், அவரின் தொப்புழ்க் கொடியில் பிரம்மா இருக்கிறார்.
சொல் வளருதல்:
(1) ஏந்திய வெண்படை
(திருமாலின் வெள்ளை
ஆயுதம்) கம்பு (சங்கு)
(2) (கம்பு என்பதில் ஒரு எழுத்து
நீங்க கம் (தலை) என்பது
கிடைக்கும். கம்
(3) முன்னால் எடுத்தது
(கோவர்த்தன மலையைத்
திருமால் குடையாகப்
பிடித்தார்)
(ந என்ற எழுத்து வர நகம்
(மலை) கிடைத்தது.) (ந) கம் (மலை)
(4) பூந்துகில்
(திருமால் உடுத்தும் ஆடை)
(க என்ற எழுத்து மேலும்
இணைய கநகம் (பொன்)
கிடைத்தது.) கநகம்
(பொன்னாடை)
(5) மால் உந்தி பூத்தது
(திருமால் தொப்பூழ்க்
கொடியில் தாமரை பூக்க
அதில் பிரம்மா இருப்பார்)
(கோ என்ற எழுத்து மேலும்
வர கோகநகம் (தாமரை)
கிடைத்தது.) கோகநகம்
இதில் எழுத்து வளருதலாக வந்த தலை, மலை, பொன், தாமரை ஆகியன செய்யுளின் இறுதியடியில் சொல்லப் பெற்றுள்ளன. இறுதியடியில் சொல்லப் பெற்ற இவற்றை எழுத்தடைவாக - எழுத்துப் பெறுதலாக - எழுத்து வருத்தனமாகக் கொண்டு இங்கு நாங்கள் சித்திரகவியாகக் காண முடிகிறது.
சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திரக் கவிகளின் தோற்றுவாய். [திருமங்கையாழ்வாரால்]] பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரை பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார். இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும் சித்திரக்கவிகள் படைத்துள்ளார்.



