செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 7 October 2020

இயல் 5 பாடறிந்து ஒழுகுதல்

 இயல் 5

பாடறிந்து ஒழுகுதல்


                                                         ஒலிப்பேழை

மனப்பாடப் பாடலை முறையாக மனப்பாடம் செய்யவும்.


                     1.ஆற்றுதல் என்பது யாது?

விடை-
ஆற்றுதல் என்பது வறுமையில் வாடியவர்களுக்கு பொருளினைக் கொடுத்து உதவுதல் மற்றும் இல்வாழ்க்கை நடத்துதல் ஆகும்.

விளக்கம்:
மக்களின் அனுபவத்தால், நெறிமுறையால் விளைந்த கருத்துக்களின் தொகுதி அறமாகும். அறக்கருத்துக்கள் மக்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து வாழ்வை செம்மையுறச் செய்கின்றன. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
இப்பேர்ப்பட்ட கருத்துக்களை கலித்தொகை பாடல்கள் எடுத்துக் காட்டுகிறது. ஆற்றுதல் என்று சொல்லப்படுவது, இல்வாழ்க்கை நடத்துதல் என்றும் வறுமையுற்று இருப்பவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து உதவுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.


2. கேள்விக்கான விடையை தேடி, கண்டுபிடிக்கவும்

கேட்கப்பட்ட வினாக்களுக்கு தகுந்த பதிலினை அளிக்கவும்

வினா1.1. பண்பு. அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

                 2. முறை,பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
                                                                                         
             வெளியீடு-                                                             தமிழ்துறை,
                                                                               அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
                                                                                          கடையநல்லூர்


No comments:

Post a Comment