செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 13 December 2022

வகுப்பு எட்டு கட்டுரை கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

 கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

முன்னுரை :
பெற்ற பிள்ளை உன்னைக் கைவிட்டாலும், கற்ற கல்வி உன்னை கைவிட்டாலும், நீ பழகிய கைத்தொழில் உன்னைக் கைவிடாமல் காப்பாற்றும் என்பது ஆன்றோர் வாக்கு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தி நிற்கிறது.


கைத்தொழிலின் அவசியம் :
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். புள்ளிக் கணக்கு வாழ்க்கைக்கு உதவாது என்பார்கள். அது உண்மையே நாம் கற்கும் கல்வியும் நம் எதிர்காலத்திற்கு ஒரு தொழில் கற்றுக் கொடுக்கிறதா என்றால் இல்லை. படித்து முடித்து பட்டம் பெற்று பின்னர் வேலை தேடும் போது தான் தெரியும். ஏதாவது ஒரு கைத்தொழிலாவது கற்று இருக்கலாமே என்று யோசிப்போம்.

கைத்தொழில் வகைகள் :
பாய் பின்னுதல், கூடை பின்னுதல், அலங்கார பொம்மைகள் செய்தல், கைவினைப் பொருட்கள் செய்தல், மின்னணு சாதனங்கள் பழுதுபார்த்தல், கைபேசி பழுது பார்த்தல் என பலவகைத் தொழில்கள் கைத்தொழிலில் உள்ளன.

கைத்தொழிலின் பயன்கள் :
கைத்தொழில் கற்றால் படித்து வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. கைத்தொழில் கற்ற உடன் வேலை தரும். வீட்டில் உள்ள பொருட்களை நாமே சரி செய்யலாம். கைத்தொழில்களை நாம் கற்றும் அதன் மூலம் பிறருக்கு அதனைக் கற்றுக் கொடுத்தும் பொருள் ஈட்டலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.

கைத்தொழிலால் தோன்றிய கல்வி :
தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறுதொழில் கல்வி ஆகியவை எல்லாம் கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதொழில் பயிற்சி குறுந்தொழில் பயிற்சிக்காகக் கைத்தொழில்கள் பலவற்றை இன்று தொழிற்கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கின்றனர்.

முடிவுரை :
வறுமையினால் பசி என்று வரக்கூடிய ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, ஒரு தூண்டிலை வாங்கிக் கொடுக்கலாம். அதுதான் அவருடைய வறுமையை நீண்டகாலம் போக்கும். இதுதான் கைத்தொழிலின் சிறப்பாகும்.


கைத்தொழில் கற்போம்!

கவலை இல்லாமல் வாழ்வோம்

வகுப்பு 8 - கட்டுரை -நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பண்பு

 முன்னுரை :

‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.

தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.

இளைஞர்களின் பங்கு :
வறுமை, கல்வியின்மை , அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.

பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக.

Wednesday 7 December 2022

வகுப்பு. 7. எங்கள் ஊர் கட்டுரை

 எங்கள் ஊர்

(முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை )

முன்னுரை :
எங்கள் ஊர் காஞ்சிபுரம். இது இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகும். பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரிய ஊராகும்.

அமைவிடம் :
காஞ்சிபுரம், தமிழ்நாட்டு மாவட்டங்களில் சிறப்புப் பெற்ற மாவட்டமாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.

பெயர்க் காரணம் :
இங்குக் காஞ்சி மரங்கள் நிறைந்திருந்ததால் காஞ்சியூர் என்றழைக்கப்பட்டுப் பிறகு காஞ்சிபுரம் எனக் காலப்போக்கில் மாறியிருக்கலாம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூசித்தல், புரம் என்றால் நகரம் என்பது பொருள். பிரம்மன் பூசித்த நகரம் ஆதலால் காஞ்சிபுரம் ஆயிற்று என்று பலவாறு பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.


தொழில்கள் :
காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முதன்மைத் தொழிலாகப் பட்டு நெசவு நடைபெறுகிறது. காஞ்சிப்பட்டு உலகப் புகழ் பெற்றதாகும். பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். வேளாண்மையில் நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள் நவதானியங்கள் பயிரிடப்படுகின்றன.

சிறப்புமிகு இடங்கள் :
காஞ்சிபுரம் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகும். இங்குப் பல கோயில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் முக்கியமானவை.

திருவிழாக்கள் :
காஞ்சிபுரத்தில் திருவிழா நடைபெறாத நாட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நாள்தோறும் விழாக்கள் நடைபெறும். வரதராஜர் கோயிலில் வைகாசி மாதம் கருடர் சேவை மற்றும் தேர்த் திருவிழா நடைபெறும். ஏகாம்பரநாதர் கோயிலில் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவாகவும் ஏலவார் குழலி அம்மன் திருமணமும் நடைபெறும். பிரம்மோற்சவம் நடைபெறும். இன்னும் பல விழாக்களும் நடைபெறும். அத்திவரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு நாற்பத்தெட்டு நாள்கள் காட்சியளிப்பார்.

மக்கள் ஒற்றுமை :
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு 2 வாழ்கின்றனர். ஏற்றத்தாழ்வின்றியும் பூசலின்றியும் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றனர்.


முடிவுரை :
எங்கள் கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து இங்குள்ள கடவுளர்களை வழிபட்டு நன்மையடையுங்கள்.


Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.5 தொழிற்பெயர்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள் …

1. நம் நாட்டுத் தொன்மைக் கலைகளை மதிப்பேன்.
2. கலைகளில் ஒன்றையேனும் கற்றுக் 

Friday 2 December 2022

வகுப்பு - 9 .சந்தை- நெடுவினா

நெடுவினா

1

எங்கள் ஊர் சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ் செய்தி ஒன்றை எழுதுக.
Answer:

நாளிதழ் செய்தி

மானூர் சந்தையின் புகழ்:
ஜூன் 16 – நம் மக்களின் வணிக முறைகளில் ஒன்று சந்தை, தினசரி சந்தை, வாரச் சந்தை என இரண்டு உண்டு. எங்கள் ஊரில் வாரச் சந்தைதான் வாரத்தில் ஒரு நாள் (சனிக்கிழமை) மட்டும் கூடும். எங்கள் ஊர் சந்தையில் எம் கிராமத்திலும், பக்கத்து கிராமங்களிலும் விளையும் காய்கறி, கீரை, தானிய வகைகள் விற்பனைக்கு வரும். பக்கத்து மலைப்பகுதியில் இருந்து மிளகு, மல்லி, சீரகம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

காய்கறிகள், தானியவகைகள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் ஈயம், மண், இரும்பு பாத்திரங்கள் தோட்ட வேலை செய்வதற்கு உரிய களைக்கொத்தி, மண்வெட்டி, மேலும் துணி மணி வகைகள் என அனைத்தும் எம் ஊர் சந்தையில் வாங்கலாம்.

நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு நேர்மையான விலையில் அனைத்தும் கிடைக்கும். என் தாத்தா சிறு வயதில் சந்தைக்குச் செல்லும் பொழுது திருவிழாவிற்குப் போவது போல் மகிழ்ச்சியாய்ச் செல்வாராம். ஏனெனில் அக்காலத்தில் கழைக்கூத்து, பொம்மலாட்டம் கூட சந்தைவெளியில் உண்டாம்.

எங்கள் ஊர்சந்தையிலே ஆடு, மாடு வாங்குவதை நினைச்சாலே வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டு கைகளை மறைச்சு விலைபேசுவது ஒரு பக்கம், பல், வால், கொம்பைப் பார்த்து விலை பேசுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாள்வர் சந்தை விற்கும் வாங்கும் வணிகத்தளம் மட்டுமல்ல, உறவுகளுக்கு உயிரூட்டும் இடமாகவும் இருக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.5 சந்தை

வாங்க! வாங்க! என கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பின்புதான் வியாபாரம் தொடங்கும்.

எம் ஊர் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்கும் உறவாக மட்டும் இருப்பதல்ல. சந்தையில் பழகியவர்கள் சம்பந்தியான கதைகளும் உண்டு.

சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு. நேர்மை உண்டு.

நீங்களும் ஒருமுறை எங்கள் சந்தைக்கு வந்துதான் பாருங்களேன்.

1. வகுப்பு - 9 சீவக சிந்தாமணி நெடு வினா

 .நெடுவினா

 1.ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

முன்னுரை:

சீவகசிந்தாமணியில் “நாமகள் இலம்பகத்தில்” நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.

வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்த து.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.

மண்வீசும் வயல்வளம்:
ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.

இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:
கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.

அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

ஆயிரம் விழாக்கள்:
வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.

முடிவுரை:
இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.