செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 31 March 2017

சாலைப் பாதுகாப்பு - வகுப்பு 8

வகுப்பு   8சமூகவியல்சாலை பாதுகாப்பும்சட்டமுறைகளும்

ஒரு வகுப்பறையில்  
ஒரு பாடவேளையில் 45 நிமிடத்தினை
மாணவர்களின்   விழிப்புணர்வுக்காகவும்
விதிகளை அறிந்து கொள்வதற்காகவும்
இந்தக் காணொலிக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது
காணொலிக்காட்சி நேரம் 31 நிமிடம் ஆகும்





பாரதிதாசன்
 வாழ்க்கை வரலாறு


Thursday 30 March 2017


வென்றது பக்தி  (நம்பிக்கை)                                             புராணக்கதையில் மட்டும்... 



வன உயிர் வேட்டைக்கு
வந்திட்ட வேட னவன்
இடப்பாகம் பிரித்தளித்த
ஈசன் சிலை கண் டானாம்


சிந்தையதை சிறை கொண்ட
சிவன் மீது அருள் கொண்டு
மனக் குறை வீழ்ந்திடவே                                          
மண்டியிட்டு நின்றானாம்


அமுது பொருள் யிவை யென்று
தான றியா நிலை கொண்டு
வேட்டை தந்த பொருளை யெலாம்
வேட்கையுடன் படைத் தானாம்


ஈசன வன் அமு துண்ண
வேடன்
ஈந்திட்ட  பொருளெல்லாம்
ஆகம விதிக் கிங்கே
ஆகாம போனதாம்


ஆகம விதிக் கிங்கே
இடர் வந்து நின்றாலும்
இறங்கியே ஈசன வன்
இன் முகம் கொண்டானாம்

வேடன வன் வேட்கை தனை
சோதித் தறிய யெண்ணி
தன் விழிக் குருதியினை
பெருக் கெடுத் தந்தானாம்


கலங்கிய வேட னவன்
கண்டிட்ட  இமை நொடி
தன் விழி  ஈந்திட்டே
இறையின் துயர் துடைத்தானாம்


”தின்னன்” எனும் நாமம் இங்கே
கண்ணிடந் தப்பியதால்
”கண்ணப்ப நாயன் ” என்று
கண்டோர் இங்கே தெளிந்தனராம்!


பக்தியின் மாண்பதைக்கு
பாதை எங்கும் வகுத்ததில்லை
இன்ன பொருள் இது வென்று
இறைவனும் மறுப்பதில்லை


பக்தி உணர்த்திய நீதி
  • இப்படித்தான் வழி பட வேண்டும் என்று இறைவன் வகுப்பதில்லை
  • ஏழை பணக்காரர் ஆகமவிதி பாகுபாடு இறைவன் முன் இல்லை
  • நம்பிக்கையுடன் வழிபட்டால்  இறையின் அருள் நிச்சயம் கிட்டும்.

                               --------------------------------------------------------------
                                               

                   பூசலார் புராணம்



காடவர் கோமான் அங்கே
கட்டிய கோயி லது
கவின் மிகு நயத் தோடு
காட்சி தந்த வேளையிலே..
குட முழுக்கு தானெ டுக்க
நாளிட்டான் மன்ன னவன்

அன்பின் வேட்கை மிகு
அடியாருள் தானொ ருவன்
மனதினுள் தான மைத்த
திருக் கோயில் உரு தனுக்கு
குட முழுக்கு செய எண்ணி
மன்னன் வகுத்த நாளில்
தானும் நாள் குறித் தான்

உள் ளன்பு ஓங்கிய தால்
ஈச னவனும் மன மிறங்கி
மனக் கோவில் ஈந்தவனுக்கு
மகிழ் வுடன் காட்சி தந்து
அடியாருள் ஒருவனாய்
அன்பு செய்ய ஏற்றாராம்.






பக்தி உணர்த்திய நீதி

பக்திக்கு ஆடம்பரம் தேவையில்லை
இறைவன் ஆடம்பரத்தை விரும்புவதில்லை
வழிபாடு உண்மையெனின் இறைவன் அருள் உடன் கிட்டும்


-------------------------------------------------------------------------------------------------------------







இராம அவ தாரத்தில்...
கீர்த்தி மிகு தந்தைய வர்
உரைத்த மொழி தான் கேட்டே
சித்தி ரத்தில் அலர்ந்திட்ட
செந்தா மரை முகம் ஒத்து
தம்பி நா டாள
கான கம் தான் சென்றானாம்
கான கத்தில் காட்சி தந்த
தூயோனை தரி சிக்க
வந்திட்ட வேட னவன்
”தேனும் மீனும் ” தான்
கொண்டு சென்றானாம்...

இராம னவன் அமு துக்கு
ஒவ்வாத பொரு ளெனினும்”
உள்ளத்தின் அன்பினால்
வந்தவை யிவை யென்றால்..
அமிழ் துக்கு மேல் யென்று
அன்பு மொழி பகர்ந்தானாம்..!

பிறப்பால் நான் கெனினும்
குக னோடு ஐ வெரென்று
குசல மொழி உரைத் தானாம்

உண்மைப் பொருள் இங்கே
உள்ளத்தில் நிறைந் திருந்தால்
உல கேத்தும் உத் தமனும்
அண்டி யோருக் கருளிடுவான்..

புராணங்கள் உரைத்த கதை
புத்துலகு ஏத்திடுமோ?!


பக்தி உணர்த்திய நீதி

அன்பினால் இறைவனையும் ஈர்க்கலாம்
தனக்கு ஒவ்வாத பொருள் என்று இறைவன் நினைத்தாலும்.. அன்பின் மிகுதியால்.. என்று உணரும் போது இறைவனும் மகிழ்கிறான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------



நம்பிக்கைக்காக தன் நிலை இறங்கிய இறைவன்




                      மகாபாரத போர்க்களத்திலே... பீஷ்மர் அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறார். அவரினைப் பார்ப்பதற்கு பாண்டவர்களும், கிருஷ்ணபரமாத்வாவும் செல்கின்றனர். 


                      அப்போது கிருஷ்ணபரமாத்வாவிடம் பீஷ்மர் கேட்டாராம்.   கிருஷ்ணா நீ வாக்கு தவறி விட்டாய்..    ஒரு நாள், பாரதப் போர் நடைபெறுவதற்கு முன்பு, உன் ஆதரவு வேண்டி, துரியோதனனும், அர்ஜீனனும் உன்னிடம் வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் நீ, என் படைவீரர்கள் வேண்டுமா? அல்லது ஆயுதமே எடுக்காத நான் வேண்டுமா? என்று கேட்டாய் அல்லவா? 

                    துரியோதனன் , உன் படை போதும் என்று கூறி உன் படை ஆதரவினைப் பெற்றுக் கொண்டான். அர்ஜீனனோ ” நீ இருந்தால் போதும் என்று கூறிவிட்டான். இங்கே தான் உன் வாக்கு தவறி விட்டது.


                    ஆயுதமே எடுக்க மாட்டேன் என்று வாக்கு கூறிய  நீ.... போர்க்களத்திலே, அர்ஜீனன் , என்னை எதிர்த்துப் போர் செய்ய தயங்கிய போது ... நீ உன் சக்ராயுதத்தினை எடுத்து என் மீது பயன்படுத்த பார்த்தாயே... இது ஏற்கெனவே துரியோதனுக்கு கொடுத்த வாக்கினை மீறும் செயல் அல்லவா? ..  

                   இறை நிலைக்குட்பட்ட நீ ... இந்தச் செயலை செய்யலாமா? என்று கேட்டார் பீஷ்மா்




                 பரமாத்மா கிருஷ்ணண் சிரித்துக்கொண்டே பீஷ்மரிடம் சொன்னாராம்... நான் அவ்வாறு கூறியது உண்மைதான்!. 


       துரியோதனன் என்னிடம் என் படை பரிவாரங்களின் ஆதரவினைப் பெற்றுவிட்டோம் .. இனி ஜெயித்து விடலாம் என்ற நினைப்போடு அவனுடைய அரண்மனைக்கு வந்து .. இந்தக் கருத்தினை தங்களிடம் கூறினான்.. 


    அப்போது தாங்கள், என்ன கூறினீர்கள் , என்று ஞாபகப்படுத்தி பாருங்கள்...!   


                துரியோதனா?  நீ தவறான முடிவினை எடுத்துவிட்டாய்..  படை பரிவாரங்களை விட  கிருஷ்ணனின் ஆதரவினை நீ பெற்றிருக்க வேண்டும் என்று கூறினீர்கள்  .. 


           ” ஆயுதமே எடுக்காத கிருஷ்ணனால் எனக்கு என்ன   பலம் வந்து விடும் ... !  வெற்றி எனக்கே என்று துரியோதனன் தங்களிடம் கூறிய போது,  அதனை மறுத்து, இல்லை துரியோதனா.. கிருஷ்ணன்  ஆயுதமே எடுக்க மாட்டேன் என்று உன்னிடம் வாக்கு கூறினாலும் .. நிச்சயமாக ஆயுதம் எடுத்தே தீருவான் என்று , நீங்கள்.. துரியோதனிடம் கூறினீர்கள். அல்லவா!


           பீஷ்மச்சாரியாராகிய   நீங்கள் அன்று துரியோதனிடம்..  ”கிருஷ்ணன் ஆயுதம் எடுத்தே தீருவான்...”  என்று நீங்கள் கூறிய நம்பிக்கை தோற்று விடக்கூடாது...


              தெய்வத்தின் வாக்குப் பொய்க்கலாம்.. ஆனால், என்னை நம்பிய பிரமச்சாரிய விரதம் பூண்ட தங்களின் வாக்கு என்றும் பொய்த்து விடக்கூடாதே....! என்பதற்காகத்தான்.. என் நிலை இறங்கி.. கொடுத்த வாக்கினை மீறினேன்.. என்னை மன்னித்து அருளுங்கள் என்று  கிருஷ்ணன் பீஷ்மரிடம் கூறினாராம்.


      தெய்வ வாக்குப் பொய்க்கலாம்  ஆனால் தன்னை நம்பியவரின் வாக்கு பொய்க்கக் கூடாது  என்ற தெய்வத்தின் நிலை.. நம்பிக்கையுடன் வழிபட்டால்  தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதனை உணர்த்துகிறது.


கதை உணர்த்தும் நீதி

  •    தன்னை நம்பியோன் தன் மீது கொண்ட நம்பிக்கை எந்தளவும் 
  • பொய்த்து    விடக்கூடாது என்பதற்காக இறைவன் தன் நிலை இறங்குகிறான்
  •   நம்பிக்கை உண்மையெனில் இறைவன் அருள் நிச்சயம் கிட்டும். 




Saturday 25 March 2017

முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி
அடக்கம் செய்யும் முறை



Friday 24 March 2017

Saturday 18 March 2017

முந்தைய பணியை இராஜினாமா செய்தாலும் முந்தைய பணிக்கால ஈட்டியவிடுப்புக்களை பிந்தைய பணியிடத்தில் அனுபவித்துக்கொள்ளலாம் அரசுவிதிகள்


ஒரு பணியை இராஜினாமா செய்துவிட்டு பிற பணியில் சேர்ந்தாலும் முந்தைய பணிக்கால ஈட்டியவிடுப்புகளை பிந்தைய பணியில் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதற்கான அரசுவிதிகள்

ஒரு பணியிலிருந்து பிறபணியில் சேரும்பொருட்டு முந்தைய பணியை இராஜினாமா செய்தாலும் தொடர் பணியாகவே கருதப்படும் என்பதற்கான விளக்கம் வரிசை எண் 5ல்

மெட்ராஸ் பென்சன் கோடு விதி418
சேமிப்புக்கணக்கில் உள்ள ஈட்டியவிடுப்பினை புதிய பணியிடத்தில் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதற்கான  ஆர்.டி.ஐ தகவல்

ஒரு பணியிலிருந்து பிறிதோர் பணிக்கு செல்வதற்காக முந்தைய பணியை இராஜினாமா செய்ய வேண்டாம் என்பதற்கான அரசாணை


Saturday 11 March 2017

இலக்கிய நயம்- வைரமுத்துவின் கவிதைகள்

தாயைப் பற்றி 
கவிப்பேரரசுவின் கவிதை
கவிப்பேரரசுவின் கவிதை

Tuesday 7 March 2017

மகளிர்தின வாழ்த்து கவிதை

மகளிர் தின வாழ்த்து



தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்தில
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்

Add caption
உன் விழிப்பு அவசியமானதொன்றே !


பெண்ணென்பார் ... பாவியர் அவரே உன்னைப்
பேதையென்றும் பழிப்பார்

பூவென்பார் பெண்ணே பின்னர்
பூவுக்குள் புகுந்த நாகம் என்றும்
புண்ணாக்கும் வகையில் பேசிடுவார்

தாயாகச், சேயாக, தங்கையாக, தாரமாக‌
தரைமீது பொறுமை மிக்க பூவையாக‌
பெண்ணே நீ படைக்கும் பாத்திரங்கள்
பாரினில் பரிசுத்தம் ஆனவை


அன்றொரு நாள் முப்பாட்டன் பாரதி
அடுக்களையில் பால்காய்ச்ச முடியாமல்
அண்ணந்து படுத்தபடியே சிந்தித்தான்
அருமையான் பெண்களின் அற்புத சேவைகளை
விடிந்ததும், வானம் வெளுத்ததும்
பிறந்தது அவ்னது பெண்ணடிமை ஒழிக்கும்
பொன்னான கவிதைகள்

சிங்கார வனிதையரின் கால்களில்
சமுதாய வரம்புகள் எனும்
சிறைபிடிக்கும் விலங்குகளை பிணைத்து
சிறுமதிபடைத்தோரே ஏன் கேட்கிறீர் உமக்கோர் விடிதலி ?
சீறினான் எமது சிங்கக் கவிஞன் பாரதி


பாரெங்கும் புகழ் பறக்க எம் தமிழ்ப் பெண்களே !
தேரோடி படைத்திடுவீர் புதுச் சாதனைகள்
பெண்புத்தி பின்புத்தி என்றெல்லாம்
பொய்வார்த்தை சொல்லி உமை ஏய்த்திடும்
புல்லுருவிக் கூட்டத்தின்
முகத்திரையைக் கிழித்திடுவீர்

அரைகுறை ஆடையணிந்து
அவமானச் சின்னங்களாய்
ஆடித் திரியும் சில பெண்களால்
எம் பாரதி சொன்ன புதுமைப் பெண்களின்
எழுச்சியைத் தடுத்து விட முடியாது
எனும் உண்மையை சமுதாய வரம்புகளின்
நியாயமான வரையறையை வகுத்து
முன்னேறி நிரூபிக்கும் திறமை ! தோழியரே,
சோதரியரே உங்கள் கைகளில் தான் உள்ளது
உங்களால் முடியும் ............

படையுங்கள் புது இலக்கியங்களை ......
நிகழ்த்துங்கள் புதிய கண்டு பிடிப்புகளை ........
வாழுங்கள் விஞ்ஞானத் தாய்களாய் .......
வளருங்கள் புதியதோர் எழுச்சி மிக்க‌
தமிழர் சமுதாயத்தை ........

ஆம் நீங்கள் விழித்துக் கொண்டு விட்டீர்கள்
இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது


                                                                                                        நன்றி ..
                                                                               ஜியோதமிழ்.
மகளிர் தின சிறப்புக் கவிதை


தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்தில
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்

Add caption
உன் விழிப்பு அவசியமானதொன்றே !


பெண்ணென்பார் ... பாவியர் அவரே உன்னைப்
பேதையென்றும் பழிப்பார்

பூவென்பார் பெண்ணே பின்னர்
பூவுக்குள் புகுந்த நாகம் என்றும்
புண்ணாக்கும் வகையில் பேசிடுவார்

தாயாகச், சேயாக, தங்கையாக, தாரமாக‌
தரைமீது பொறுமை மிக்க பூவையாக‌
பெண்ணே நீ படைக்கும் பாத்திரங்கள்
பாரினில் பரிசுத்தம் ஆனவை


அன்றொரு நாள் முப்பாட்டன் பாரதி
அடுக்களையில் பால்காய்ச்ச முடியாமல்
அண்ணந்து படுத்தபடியே சிந்தித்தான்
அருமையான் பெண்களின் அற்புத சேவைகளை
விடிந்ததும், வானம் வெளுத்ததும்
பிறந்தது அவ்னது பெண்ணடிமை ஒழிக்கும்
பொன்னான கவிதைகள்

சிங்கார வனிதையரின் கால்களில்
சமுதாய வரம்புகள் எனும்
சிறைபிடிக்கும் விலங்குகளை பிணைத்து
சிறுமதிபடைத்தோரே ஏன் கேட்கிறீர் உமக்கோர் விடிதலி ?
சீறினான் எமது சிங்கக் கவிஞன் பாரதி


பாரெங்கும் புகழ் பறக்க எம் தமிழ்ப் பெண்களே !
தேரோடி படைத்திடுவீர் புதுச் சாதனைகள்
பெண்புத்தி பின்புத்தி என்றெல்லாம்
பொய்வார்த்தை சொல்லி உமை ஏய்த்திடும்
புல்லுருவிக் கூட்டத்தின்
முகத்திரையைக் கிழித்திடுவீர்

அரைகுறை ஆடையணிந்து
அவமானச் சின்னங்களாய்
ஆடித் திரியும் சில பெண்களால்
எம் பாரதி சொன்ன புதுமைப் பெண்களின்
எழுச்சியைத் தடுத்து விட முடியாது
எனும் உண்மையை சமுதாய வரம்புகளின்
நியாயமான வரையறையை வகுத்து
முன்னேறி நிரூபிக்கும் திறமை ! தோழியரே,
சோதரியரே உங்கள் கைகளில் தான் உள்ளது
உங்களால் முடியும் ............

படையுங்கள் புது இலக்கியங்களை ......
நிகழ்த்துங்கள் புதிய கண்டு பிடிப்புகளை ........
வாழுங்கள் விஞ்ஞானத் தாய்களாய் .......
வளருங்கள் புதியதோர் எழுச்சி மிக்க‌
தமிழர் சமுதாயத்தை ........

ஆம் நீங்கள் விழித்துக் கொண்டு விட்டீர்கள்
இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது


                                                                                                        நன்றி ..
                                                                               ஜியோதமிழ்.

Monday 6 March 2017

இல்பொருள் உவமை அணி



இயற்கையில் இல்லாத ஒன்றை (ஒருபொருளை) இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு அக்கற்பனைப் பொருளை உவமையாக்குவதே இல்பொருள் உவமையணியாம்.

அன்பகத் தில்லார் உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று!




பாலையில் நீரின்றிக் காய்ந்து வரண்டுபோன வற்றல் மரம் 


உள்ளத்தில் அன்பற்ற உயிர்வாழ்வுக்கு


பாலையில் நீரின்றிக் காய்ந்து வறண்டுபோன வற்றல் மரம் மீண்டும் தளிர்த்தல் இயற்கையில் நிகழாத ஒன்று. உள்ளத்தில் அன்பற்ற உயிர்வாழ்வுக்கு இதனை உவமையாக்கியமையால் இஃது இல்லை)பொருள் உவமையணியாகும்.


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!




              மழலை தன் சிறுகையால் அளாவிய கூழை அமிழ்தினும் இன்சுவை உடையது என்கிறார் வள்ளுவர். அமிழ்து என்பது கற்பனையான பொருள். அமிழ்தினைக் கண்டவர்யார்?  உண்டவர்யார்? கூழுக்கு உலகில் இல்லாத அமிழ்தை உவமையாக்கியதால் இல்பொருள் உவமையணியாகும்.


ஆக இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணியாம்.

வைரமுத்துவின் கவிதைகள்


கவிப்பேரரசு
வைரமுத்துவின் கவிதைகள்
மரம்

Sunday 5 March 2017

வைரமுத்துவின் கவிதைகள்



கவிப்பேரரசு வைரமுத்துவின் 
கவிதைகள்
உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்


Thursday 2 March 2017

சிலேடை அணி - எளிய பட விளக்கங்களுடன்...

சிலேடை அணி 


கீழே உள்ள படத்தினைப் பாருங்கள்





உங்களுக்கு  படம் ஒன்றாக இருந்தாலும் அதில் இரு  வேறு காட்சிகளை நீங்கள் கண்டு இன்புற்றிருப்பீர்கள் தானே..









உங்களுக்கு  படம் ஒன்றாக இருந்தாலும் அதில் இரு  வேறு காட்சிகளை நீங்கள் கண்டு இன்புற்றிருப்பீர்கள் தானே..

படம்   ”ஒன்று”
காட்சி ” இரண்டு”

சரி...
”ஒடு” என்ற சொல்லை கேட்டவுடன் 
தங்களுக்கு என்ன? செயல்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது....



சரி..
ஆடு என்ற சொல்லைக் கேட்டவுடன்
தங்களுக்கு என்ன? என்ன?
செயல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன?




இங்கு சொல் ஒன்று. பொருள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவைகளாக இருக்கிறன
  
இப்பொழுது கீழே உள்ள பாடலைப் படித்துப்பாருங்கள்...


இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ
இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ

                                             உங்களுக்கு ஏதோ ஒருவிதப் பொருள்  இருவிதப் பொருளைத் தந்திருக்கும் அல்லவா?
                     

ஆம்! நிச்சயம் தங்களுக்கு இரு விதப் பொருட்கள் புலப்பட்டு இருக்கும்.

இவ்வாறு ஒரு சொல் இருவிதப் பொருட்களை தருவதே ” சிலேடை அல்லது இரட்டுற மொழிதல் என்று நாம் அழைக்கின்றோம்.

மேடைப்பேச்சில் சிலேடை மூலம் மக்களை ஈர்த்தவர்கள்..

1. திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."




பழங்”கள்”


                   பழங்கள்

2. விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும்.
ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது.

அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"


                   அவருடைய காதிலும் கம்மல்

                             ”சாரீரத்திலும் கம்மல்"

3. தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். 



ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'


4. தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
           பூரி ஜகன்னாதர் கோவில்

ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ.


கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ஔவையார்


ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.


அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.


ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.


கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:


" தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே


மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"


தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.


"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.


அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:



"பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்செம்பொற் சிலம்பே சிலம்பு."

என்பதாகும் அவ்வரிகள்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.

”ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ”

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே கேள்வி.
                      நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும். "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

"டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.
இதை கேட்டு மிகுந்த சினமுற்ற ஔவையார்,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா

என்று பதிலளித்தார்.

இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது "8 + 1/4" என்று பிரித்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் "8" என்பதற்கு உரிய தமிழ் எண் " அ" அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " வ ".

(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "வ" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 = அ
(கால் )1/4 = வ

எனவே இப்போது எட்டேகால் = அவ

இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?

எமனேறும் பரியே - எருமைக்கடா

மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே

முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே

குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே

கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.

இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்
.

சிலேடை புதிர்கள்..

ஒரு புலவர் மற்றொரு வைத்தியரிடம் இவ்வாறு கூறினாராம்

”அக்காலை பொழுதினிலே
 முக்காலை ஊன்றி
 மூவிரண்டுபோகையிலே
ஐந்து தலை நாகமொன்று
 ஆழ்ந்து கடித்ததுவே”-.என்று
                                                   வைத்தியரிடம்    கூறினார் புலவர்

வைத்தியரும் தமிழ்ப் புலமையில் இளைத்தவரல்ல இதற்குச் சுய வைத்தியமே சரியானது.
வைத்தியம் யாதெனில்

 ”பத்துரதன் புத்திரனின் மித்திரனின் 
சத்துருவின் பத்தினியின்
கால் வாங்கி தேய்
!
”      என்றாராம்!




மேற்காண் புதிருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?!  ... கீழே விளக்கமாகக் காண்போம்.

அக்காலை = அந்த காலை
முக்கால் = அவருக்கு இரண்டுகால் + ஒரு ஊன்றுகோல்= மூன்றுகால்
மூவிரண்டு = 3×2=6 ஆற்றுக்கு போகும்போது
ஐந்து தலை நாகம் = ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சி முள்
ஆழ்ந்து கடித்ததுவே = ஆழமாக குத்தியது.

புலவர் சொன்னதுக்கு அர்த்தம்: அந்த காலை பொழுதில் கைத்தடி ஊன்றிக்
கொண்டு ஆற்றுக்கு நான் செல்லும்போது ஐந்து முட்களைக்
கொண்ட நெருஞ்சி முள் ஒன்று
குத்தி விட்டது.


வைத்தியர் சொன்ன விளக்கம்     இதோ..
 “சதம் என்பது நூறு; 
தசம் என்பது பத்து;
பத்துரதன் என்றால் தசரதன்; 
தசரதனின் புத்திரன் ராமன்; 
ராமனின்மித்திரன்(ந ண்பன்))சுக்ரீவன்; 
சுக்ரீவனின் சத்ரு(எதிரி) வாலி;
வாலியின்பத்தினி (மனைவி) தாரை; 
தாரையின் காலை வாங்கிவிட்டால் தரை!;
புலவர் தன் காலை தரையில் தேய்த்தார் முள் உதிர்ந்து விழுந்தது.


                    ஆக, புலவர் தன் புலமையால், தன் காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்று கூற, அதனைப் புரிந்து கொண்ட வைத்தியரும், நெருஞ்சி முள் குத்திவிட்டால், முள்ளை எடுத்துவிட்டு தரையில் காலை அழுத்தி தேய்த்தால், சரியாகிவிடும் என்ற விசயத்தினை தமிழ் சொற்களால் விளையாடியது .... நம் மனத்திற்கு இன்பம் பயப்பதாக உள்ளது
                                    
- தொடரும்...
                      ஆக்கம்
                                       இரா.மு
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ