இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 8 March 2023

வகுப்பு9- விரிவானம்-தாய்மைக்கு வறட்சி இல்லை

 

தாய்மைக்கு வறட்சி இல்லை

1. கதை ஆசிரியர் : சு.சமுத்திரம்

2. குறிப்புச் சட்டகம்

3.முன்னுரை

தோட்டத்தின் அமைப்பு

சென்னப்பா குடும்பத்தின் வறிய நிலை

அதிகாரியின் மனிதாபிமானம்

முடிவுரை

4. கதை உணர்த்தும் நீதி: எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் கருத வேண்டும்.

 

முன்னுரை

   எது வறண்டாலும் மனிதம் வறண்டு விடக்கூடாது தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை இக்கதை உணர்த்துகிறது.

 

தோட்டத்தின் அமைப்பு

   கர்நாடகா மாநிலத்தின் குல்பர்கா மாவட்டத்தில் காடுகளுக்கு நடுவே அரை கிலோமீட்டர் தொலைவில் முள் வேலி போட்டத் தோட்டம். அத்

தோட்டத்தில் ஒரு கல் மாளிகை, முக்கோண வாசல் கொண்ட குடிசை, அதில் தோட்டத்தைப் பராமரிக்க வேலையாள் குடும்பம்.

 

குடும்பத்தின் வறிய நிலை :

 

தோட்டத்தில் நீர் பற்றாக்குறை அதனால் வேலை இழந்த தோட்டத்து வேலையாள் சென்னப்பா.

பாதி நேரம் உணவின்றி சென்னப்பாவின்

மனைவி, மூன்று வயது பெண் குழந்தை,ஒரு வயது குழந்தை.ஆகியோர் பசியால் வாடுகின்றனர்.

 

அதிகாரியின் மனிதாபிமானம்

    அத்தோட்டத்திற்குள் உணவருந்த வந்த ஓர் அதிகாரி தன்னிடமிருந்த சாப்பாட்டில் ஒரு பகுதியை சென்னப்பாவிடம் கொடுக்கிறார்.

அதிகாரி வழங்கிய உணவினை தன்மான உணர்வு மேலிட ஏற்க மறுத்த தோட்டத்து வேலையாளின் மனைவி, குடும்பத்தின் வறிய நிலையை உணர்ந்தும்,அதிகாரியின் நல்ல உள்ளத்தை உணர்ந்தும் உணவினை பெற்றுக் கொள்கிறார்.

 

தனக்கு வழங்கப்பட்ட உணவில் பெரும் பகுதியை தனது குழந்தைகளுக்கும்  தன்னால் ஆசையாக வளர்க்கப்பட்ட நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டி பசியைப் போக்குகிறார்.

முடிவுரை:

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாக்குக்கு இணங்க உணவுத் தட்டில் இருந்த உணவு குறைய குறைய தாய்மை கூடிக் கொண்டே இருந்தது

No comments:

Post a Comment