இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 14 March 2023

வகுப்பு 8 . யாப்பு இலக்கணம் - அணி இலக்கணம் - வினா விடைகள் (ஆன்லைன் வழி)

 

1➤ உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது
=> பிறிது மொழிதல் அணி
,
2➤ கடலோடா கால்வல் நெடுந்தேர் - பயின்று வரும் அணி யாது?
=> பிறிது மொழிதல் அணி
,
3➤ இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது
=> வேற்றுமை அணி
,
4➤ தீயினால் சுட்ட புண் உள்ளாறும் -பயின்று வரும் அணி யாது ?
=> வேற்றுமையணி
,
5➤ ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது
=> இரட்டுறமொழிதல் அணி
,
6➤ ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்து இருக்கும்- பயின்று வரும் அணியை விளக்கு
=> இரட்டுறமொழிதல் அணி
,
7➤ இரட்டுறமொழிதல் அணியின் மற்றொரு பெயர்
=> சிலேடை அணி
,
8➤ பிரிது மொழிதல் அணியில் ....... மட்டும் இடம்பெறும்
=> உவமை
,
9➤ மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம்
=> யாப்பிலக்கணம்
,
10➤ யாப்பிலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை ?
=> 6
,
11➤ எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது .......எனப்படும்
=> அசை
,
12➤ ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது.....
=> சீர் எனப்படும்.
,
13➤ சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை...... என்பர்
=> தளை
,
14➤ தளைகள் ........ வகைப்படும்
=> 7
,
15➤ இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது.... ஆகும்.
=> அடி ஆகும்
,
16➤ செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமை ....... எனப்படும்
=> தொடை எனப்படும்
,
17➤ தொடை எத்தனை வகைப்படும்
=> 8 வகைப்படும்.
,
18➤ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ...... எனப்படும்
=> மோனை
,
19➤ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
=> எதுகை
,
20➤ இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வரத் தொடுப்பது
=> இயைபு எனப்படும்
,
21➤ ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப் பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது ....... தொடை எனப்படும்
=> அந்தாதித் தொடை
,
22➤ பா எத்தனை வகைப்படும்
=> 4 வகைப்படும்
,
23➤ வெண்பாவின் ஓசை என்ன?
=> செப்பலோசை
,
24➤ ஆசிரியப்பாவின் ஓசை என்ன ?
=> அகவல் ஓசை
,
25➤ கலிப்பாவின் ஓசை என்ன ?
=> துள்ளல் ஓசை
,
26➤ வஞ்சிப்பாவின் ஓசை என்ன ?
=> தூங்கல் ஒசை
,
27➤ கருத்துக்கு முதன்மை கொடுத்து பாடப்படும் கவிதை
=> புதுக்கவிதைகள் எனப்படும்
,
28➤ இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்பட்ட கவிதைகள் ..... கவிதைகள் எனப்படும்
=> மரபுக் கவிதைகள்
,
29➤ யாப்பிலக்கத்தின் படி எழுத்துக்கள் ..... வகைப்படும்
=> 3
,
30➤ ஒற்றெழுத்து என்று குறிப்பிடப்படுவது
=> மெய்யெழுத்தும் ஆயுத எழுத்தும்

No comments:

Post a Comment