இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 31 December 2020

வகுப்பு 9 புணர்ச்சி இலக்கணம் - வினா விடைப்பகுதி - நாள் 31-12-2020

 Question 1.

எழுத்து வகை அறிந்து பொருத்துக.
1. இயல் – அ) உயிர் முதல் உயிரீறு
2. புதிது – ஆ) உயிர் முதல் மெய்யீறு
3. ஆணி – இ) மெய்ம்முதல் மெய்யீறு
4. வரம் – ஈ) மெய்ம் முதல் உயிரீறு
Answer:
1) ஆ, 2) ஈ, 3) அ, 4) இ

Question 2.
புணர்ச்சிகளை “முதல், ஈற்றுச்” சொல் வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் – அ) மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை – ஆ) மெய்யீறு + உயிர் முதல்
3. கோல் + ஆட்டம் – இ) உயீரிறு + உயிர் முதல்
4. மண் + சரிந்தது – ஈ) உயிரீறு + மெய்ம் முதல்
Answer:
1) இ, 2) ஈ, 3) ஆ, 4) அ

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 3.
சேர்த்து எழுதுக:
அ) தமிழ் + பேசு = ………………….
ஆ) தமிழ் + பேச்சு = ………………….
இ) கை + கள் = ………………….
ஈ) பூ + கள் = ………………….
Answer:
அ) தமிழ் + பேசு – தமிழ் பேசு
ஆ) தமிழ் + பேச்சு – தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் = கைகள்
ஈ) பூ + கள் = பூக்கள்

Question 4.
பொருத்தமான உடம்படு மெய்யுடன் இணைக்க.
அ) பூ + இனம் = ………………….
ஆ) இசை + இனிக்கிறது = ………………….
இ) திரு + அருட்பா = ………………….
ஈ) சே + அடி = ………………….
Asnwer:
அ) பூ + இனம் – பூவினம் (வகர உடம்படு மெய்)
ஆ) இசை + இனிக்கிறது – இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
இ) திரு + அருட்பா – திருவருட்பா (வகர உடம்படு மெய்)
ஈ) சே + அடி – சேவடி(வகர உடம்படுமெய்)

சிந்தனை கிளர் வினாக்கள்:

அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.
Answer:

  • குற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
  • முற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தன் ஒரு மாத்திரை அளவில் குறையாது ஒலிக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதுவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.
Answer:
ஒரு சொல்லைப் பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி – எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும் போது ஏற்படும் ஒலி நிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும். வல்லினம், மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொற்சேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றைத் தெறிவாகத் தருவது புணர்ச்சி இலக்கணம் எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.

இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் ‘தொன்மை + ஆன’ இலக்கண ‘நூல் + ஆகிய’ ‘தொல்காப்பியம் + இல்’ ‘சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ‘அ + கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ‘தமிழக + சிற்பம் + கலை’ யின் தோற்றத்திற்கான சான்றாக ‘இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத்தில் ‘கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ‘சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் அறிய + முடிகிறது’.

No comments:

Post a Comment