இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 21 May 2017

தரம் குறையாத மாற்றமே.. தகுதியான மாற்றம்

தரம் குறையாத மாற்றமே.. தகுதியான மாற்றம்
------------------------------------------------------------------------------------

            ஒரு ஊரில் மிகப்பெரிய நகைக்கடை இருந்தது. அந் நகைக்கடை முழுவதும் பல வண்ண டிசைன்களில் ஆபரணங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. அவற்றினை வாடிக்கையாளர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து பார்த்து மெய் சிலிர்த்தனர். அக் கடையின் ஒரு ஓரத்தில் 24 கேரட் தங்ககட்டி ஒன்று இருந்த்து. அந்த தங்க்கட்டிக்கு ஒரே வருத்தம்… 24 கேரட்டாக நாம் இருந்தும் ஒருவர் கூட நம்மை எட்டிப் பார்க்கவில்லையே…. என்று ஏக்கமுடன் இருந்தது. அதன் கவலைகளை புரிந்து கொண்ட பொற்கொல்லன், 24 கேரட் தங்க கட்டியிடம், உன் வருத்தம் எனக்குப் புரிகிறது. உன்னை அனைவரும் திரும்பி பார்க்க வைக்க என்னால் முடியும் என்றான். உடனே, தங்ககட்டிக்கு ஒரே சந்தோசம். என்னை எப்படியாவது அப்படி மாற்றி விடேன் என்று பொற்கொல்லனிடம் கூறியது. உடனே பொற்கொல்லனும் நீ இப்படி தங்க கட்டியாக இருந்தால் உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். உன்னை ஆபரணமாக செய்து விடுகிறேன் என்று கூறி, தங்க கட்டியை உருக்கி, அழகான செயினாக உருவாக்கி விட்டான். அந்த செயினை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். தங்கட்டியாக இருந்த செயினுக்கு மிக்க சந்தோசமாக இருந்த்து. ஒரு பணக்காரப் பெண் அந்த செயினை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.


         சிறிது காலம் கழிந்தவுடன் அந்தப் பணக்காரப்பெண்ணுக்கு அந்த செயின் மாடல் பிடிக்கவில்லையென்று, வேறொரு பொற்கொல்லனிடம் கொடுத்து, நெக்லஸ் ஆக மாற்றி விட்டாள். சிறிது காலம் கழிந்து அந்த மாடலும் சரியாக இல்லையென்று வேறொரு மாடலாக மாற்றினாள்.. சிறிது காலம் கழித்து, அந்த நகையை விற்றுவிட்டு, புதிய நகை வாங்க அந்தப் பெண்மனி கடைக்குச் சென்றாள். கடைக்காரன் அந்த நகையை உரைத்துப் பார்த்து தங்கத்தின் மச்சம் தரம் குறைவாக உள்ளது அதனால், குறைந்த விலைக்கு கேட்டான். அந்தப் பெண்மணியும் அந்த நகையைக் கடைக்காரனிடம் கொடுத்து விட்டு, புதிதாக நகையை வாங்கி சென்றாள்.இப்பொழுதுதான், அந்த தங்க கட்டிக்கு  புரிந்தது. ஆகா! நாம், தங்க கட்டியாக இருக்கும் போது, 24 கேரட்டுடன் உயர் தங்கமாக இருந்தோம். மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்று ஆசைபட்டதால், நாம் பல்வேறு வடிமாக மற்றவர்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி மாறினோம். இதனால் என் தூய தன்மையுடன் செம்பினை கலந்து தரம் இழந்து போய்விட்டேனே… என்று வருந்தியது.இவ்வாறு மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக்கொண்டதால், இன்று தரம் குறைந்து போனோம் என்று கண்ணீர்விட்டது.                                                                     நீதி- மற்றவர்களின் விருப்பத்திற்காக நம்மை நாம் மாற்றிக்கொண்டால், நமது தனித்தன்மையை இழக்க வேண்டியது வரும்.





உலகில்பிறக்கும் போதும்

தனிமையாய்

இவ் உலகிற்கு வந்தோம்..!

இறக்கும் போதும் 

தனிமையாய்.செல்கிறோம்.

இடையில் …?! (இரா)

No comments:

Post a Comment