இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 29 August 2024

கட்டுரை - வகுப்பு. 10 அரசு பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வுகள்


உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக .

முன்னுரை

கண்ணால் காண்பவை மனத்தில் ஆழமாகப் பதிந்து, நெடுங்காலம் நிலைத்திருக்கும். அதனால்தான், பள்ளிகளில் சில இடங்களைக் குறிப்பிட்டுச் சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வகையில் பொருட்காட்சிகள்கூட மக்கள் அறிவை வளர்க்கப் பெருந்துணை புரிகின்றன. நான் அண்மையில் என் நண்பர்களுடன் மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அது குறித்துச் சில செய்திகளைக் கூறுகிறேன், கேளுங்கள்.

தமுக்கம் மைதானம்

தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மைதானமாக பதினான்காம் நூற்றாண்டில் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டு, மதுரை நாயக்கர் வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டு சண்டைகள் போன்ற விளையாட்டுகளும் சிலம்பு சண்டை, கத்திச் சண்டை போன்ற கலைகளும் இங்கு நடத்தப்பட்டன.

அரசுப் பொருட்காட்சி

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரைத் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெறும். மாலை வேளையில் பல வண்ண விளக்குகளால் மைதானமே ஜொலிக்கும். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும்

 குடிப்பதற்குப் பல்வேறு வகையான சாறுகள் வழங்கப்பட்டன. பனிக்கூழ் வகைகள் எல்லோரையும் கவர்ந்தன. ‘ஆவின்’ பால் நிறுவனம் அமைத்திருந்த அரங்கில் எண்ணற்ற மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையுடைய பண்டங்களை வாங்கிச் சுவைத்தனர்.

பல்துறை அரங்குகள்

அரசு ஏற்பாடு செய்திருந்த பொருட்காட்சியாதலால், உள்ளே நுழைந்ததும் அரசு சார்புடைய காவல்துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, அற நிலையத் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, விளம்பரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்துறை, அறிவியல் துறை எனப் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயம், கைத்தறி, மீன் வளர்ப்பு முதலான துறை சார்ந்த அரங்குகளும் இருந்தன. அவற்றில் நமக்குத் தேவையான விளக்கமளிக்கப் பொறுப்புடைய பலர் காத்திருந்தது சிறப்பாக இருந்தது. நான் பல வினாக்களை வினவி, என் ஐயங்களைப் போக்கிக் கொண்டேன்.

பல்வேறு கடைகள்

சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்கும் கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல்வேறு கடைகள் அங்கே காணப்பட்டன.

கேளிக்கை அரங்குகள்

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன. மீன் கண்காட்சிக் கூடம் கண்களைக் கவர்வதாக இருந்தது. பல்வேறு வகையான இராட்டினங்களில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என அனைவரும் சுற்றி மகிழ்ந்தனர்.

உணவு அரங்குகள்

குடும்பம் குடும்பமாக வந்திருந்த சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு உணவு அரங்கங்களில் கூடிநின்று, பல்வேறு வகையான தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அங்குக் குடிப்பதற்குப் பல்வேறு வகையான சாறுகள் வழங்கப்பட்டன. பனிக்கூழ் வகைகள் எல்லோரையும் கவர்ந்தன. ‘ஆவின்’ பால் நிறுவனம் அமைத்திருந்த அரங்கில் எண்ணற்ற மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையுடைய பண்டங்களை வாங்கிச் சுவைத்தனர்

முடிவுரை

பொருட்காட்சி என்பது வெறும் பொருள்களை மட்டும் காண உதவவில்லை. அது பல்வேறு துறை அறிவையும் பெற உதவுவதாக அமைந்துள்ளது. எனவே, அடுத்த முறை நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.

Sunday 18 August 2024

இயல் 2. நயம் பாராட்டுக. ( கட்டுரை )

 நயம் பாராட்டுக

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்;

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

                                                    கவிமணி

ஆசிரியர் குறிப்பு : 

         இப்பாடலை இயற்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவர் எளிய, இனிய சொற்களால் குழந்தைகளின், இளைஞர்களின் மனத்தில் பதியும் வண்ணம், பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம் எனப்பல நூல்களையும் இயற்றியுள்ளார்.

திரண்ட கருத்து : 

            இப்பாடலில் மழையின் சிறப்பைக் கூறியுள்ளார். மலையில் பெய்த மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, இயற்கையின் சிறப்பைப் பாடி உள்ளார்.

மையக்கருத்து : 

      காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.

தொடைநயம் : 

         " தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும் ", எனவே, தொடைநயம் பொருந்த இனிதாகப் பாடப்பட்டுள்ளது.

மோனைத்தொடை : சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.

சீர்மோனை : கல்லும் - கடந்து, எல்லை - எங்கும், ஏறாத - ஏரி, ஊராத - ஊற்றிலும்

.எதுகைத்தொடை : அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

அடிஎதுகைத்தொடை : கல்லும் - எல்லை, ஏறாத - ஊறாத

இயைபுத் தொடை : இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.

கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன், நிரப்பி வந்தேன், ஓடி வந்தேன்.

அணிநயம் : மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது. குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள், ஏரி, குளங்கள் நிரம்பி எனக் கூறுதல், உயர்வு நவிற்சி அணியாகும். வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.

சொல்நயம் : குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, இடத்திற்கு ஏற்ப ஓடிவரும் மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Monday 12 August 2024

வகுப்பு 10 . திருவிளையாடற் புராணம்

 திருவிளையாடற் புராணம்

திரு ஆலவாய்க் காண்டம்

 இடைக்காடனர் பிணக்குத் தீர்த்தப்படலம்


Wednesday 7 August 2024

வகுப்பு. 10.விண்ணைத் தாண்டிய நம்பிக்கை.



"மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை"

. "அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல.அது அறிவின் மாயையே ... "

. - ஸ்டீபன் ஹாக்கிங் ......





 

கருந்துளை என்றால் என்ன?

ஒரு மரக்கட்டை எரியும் பொழுது வெப்பத்தையும், ஒளியையும் கொடுத்து, எரிந்து முடிந்த பிறகு கரித்துண்டுகளாக மாறுவது போல, நட்சத்திரங்கள் தன்னுள் எரிபொருள் இருக்கும்வரை அணுக்கரு இணைவு (Nuclear Fusion) செயல்முறையின் காரணமாக, வெப்பத்தையும், ஒளியையும், தொடர்ந்து கொடுத்து, எரிபொருள் முடிந்தபிறகு தன்னுடைய மொத்த தொகுதியும் சுருங்கி அடர்த்தி அதிகரித்து கருந்துளைகளாக மாறுகிறது. இந்நிலையில், கருந்துளைகள் அருகில் செல்லும் எந்த ஒன்றையும் அது இழுத்துக் கொள்ளும். ஒளியை கூட! ஒரு புதைகுழியில் காலை வைத்தால் என்னாகும்? அப்படியே நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும்தானே. அதுபோலதான் கருந்துளைகளும். அதற்குக் காரணம், அபரிமிதமான ஈர்ப்பு விசை.

சூரியனும் பிற்காலத்தில் கருந்துளையாக மாறலாமா?

அப்பொழுது சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே, அதுவும் ஒருநாள் கருந்துளையாக மாறி பூமியையும், மற்றக்கோள்களையும் உள்ளே இழுத்துக்குக்கொள்ளுமா என்றால், அதுதான் இல்லை. சூரியனின் நிறையைக் காட்டிலும் 1.44 மடங்கு (Chandrasekhar Limit) பெரிதாக உள்ள நட்சத்திரங்களே கருந்துளையாக மாறும் என்று தமிழ்நாட்டில் பிறந்த வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் நிரூபித்து, 1983ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.

கருந்துடை பற்றிய காணொளி




Monday 15 July 2024

பத்தாம் வகுப்பு. தமிழ்-செயற்கை நுண்ணறிவு

வகுப்பு 10
பாடம். தமிழ்


செயற்கை நுண்ணறிவு எளிய விளக்கம்






செயற்கை நுண்ணறிவு சிறு விளக்கம்





   பெப்பர் ரோபட்



கூடுதல் தகவல்கள் (பாடப்பொருள் சார்ந்து) :




மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பல்வேறு நிறுவனங்களும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான நவீன ஆயுதங்களையும் தளவாட பொருட்களையும் தயாரித்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜென் டெக்னாலஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய அதிநவீன ரோபோட் ஒன்றை தயாரித்துள்ளது.

LiDAR (light detection and ranging) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் நான்கு கால்கள் கொண்ட இந்த ரோபோவுக்கு பிரஹஸ்தா (Prahasta) என பெயரிட்டுள்ளனர். இந்த மனிதர்களால் எளிதில் சென்றுவர முடியாத இடங்களுக்கு கூட சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என ஜென் டெக்னாலஜிஸ் தெரிவிக்கிறது. இந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலனாக இந்த பிரஹஸ்தா செயல்படும் என்றும் குறிப்பாக இது எளிதாக மாடிப்படிகளை ஏறும் என்றும் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது இதனை எளிதாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும் என தெரிவிக்கிறது. சிறிய துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்ஸ் ஆகியவற்றை எடுத்து கொண்டு செல்லும் திறன் கொண்டது என தெரிவ்க்கப்பட்டுள்ளது. 80 கிலோ எடை கொண்ட ஒரு ராணுவ வீரரை கூட தூக்கிக்கொண்டு இதனால் செல்ல முடியும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

பிரஹஸ்தாவின் செயல்பாடுகளை விளக்கி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் சிறிய துப்பாக்கியை ஏந்தி கொண்டு இலகுவாக மாடிப்படி ஏறி செல்வது மற்றும் தாவி செல்வது உள்ளிட்டவற்றை இந்த ரோபோ செய்கிறது. கீழே விழுந்தாலும் இதுவே தானாக மீண்டு வந்து தன்னுடைய வேலைகளை செய்யும் என்று ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 



Wednesday 3 July 2024

வகுப்பு: 9. தண்ணீர் (விரிவானம்)

 

தண்ணீர்

     தண்ணீரின் இன்றியமையாமையையும் தேவையையும் பண்டைய காலத்தில் இருந்து இலக்கியங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தில் இருக்கிறது.குறிப்பாக சிற்றூர்களில் இந்த நெருக்கடி வாழ்க்கை சிக்கலாகவே மாறி வருகிறது இதை உணர்த்துகிறது இச்சிறுகதை.



Monday 1 July 2024

Wednesday 14 February 2024

வகுப்பு - 9. கட்டுரை - மதிப்புரை எழுதுதல்.

 நூல் மதிப்புரை:

நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக

மதிப்புரை:
சமீபத்தில் நான் விரும்பிப் படித்த நூல் கவிதாசன் அவர்கள் எழுதிய “சிகரங்களைத் தொடுவோம்” என்னும் நூல் ஆகும்.

இந்நூல் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மட்டுமல்ல, உழைத்து களைத்து சோர்ந்து போய் என்ன சமுதாயம் இது! என்று சலிப்புறும் மனங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கின்ற நூலாகத் திகழ்கிறது எனில் மிகையாகாது. “மனிதனின் மனம் ஆற்றலின் அட்சயபாத்திரம்”

“இனிய சொற்கள் இதயங்களின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்”
“சாமானியனும் சாதனையாளனாகலாம்”

“காலையில் எழுந்ததும் உங்கள் திறமையைக் காட்ட புதிதாய் ஒருநாள் பிறந்தது என்று எண்ணுங்கள்” என்பன போன்ற சிந்தனைத் துளிகள் நிறைந்துள்ள இந்நூலைப் படிப்போர் நிச்சயமாய்ச் சிகரங்களைத் தொடுவர்.

படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் தூண்டுகோலாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும்.
படியுங்கள். உங்கள் வாழ்வில் உயருங்கள். சிகரங்களைத் தொட்டுச் சிறப்படையுங்கள்

Monday 12 February 2024

வகுப்பு 8- கட்டுரை - புத்தகம் அனுப்புமாறு வேண்டுகோள் கடிதம்

 புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

25, பெரிய,
கடையநல்லூர் ,
12.02.240

அன்புள்ள மாமாவுக்கு ,
சண்முகப்பிரியா எழுதும் கடிதம், நான் இங்கு நலமாக இருக்கிறேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் அண்ணன் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு நீங்களும் அத்தையும் நலமாக இருக்கிறீர்களா?

நீங்கள் எப்பொழுது ஊருக்கு வருவீர்கள்? உங்களைப் பார்த்து நீண்ட நாட்களாயிற்று. பார்க்க வேண்டும் போல் உள்ளது. நான் இந்த ஆண்டு நடந்த எல்லாத் தேர்வுகளிலும் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளேன். என்னை என் பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எனக்கு நான்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் கிடைக்கவில்லை. பொதுக்கட்டுரை புத்தகம், திருக்குறள் புத்தகம் (எளிமையான உரையுடன்), ஐம்பெருங்காப்பியங்கள் (கதைச் சுருக்கம்) கணினி தொடர்பான ஒரு புத்தகம் ஆகிய நூல்களை வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
சண்முகப்பிரியா.

உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
திரு. கா.மாறன்,
எண்.65, சன்னதி தெரு,
மதுரை.

வகுப்பு 8- கட்டுரை -நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு


நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு:

முன்னுரை :
‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.

தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.

 சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.

பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக..

Monday 5 February 2024

வகுப்பு 8 - அயோத்திதாசர் சிந்தனைகள் - மீட்டுணர் வினாக்கள்

1➤ அயோத்திதாசர் வாழ்ந்த காலம்

=> 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும்

2➤ தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார் ?

=> அயோத்திதாசப் பண்டிதர்

3➤ அயோத்திதாசர் எந்த ஆண்டு பிறந்தார் ?

=> 1845 மே 20

4➤ அயோத்திதாசப் பண்டிதரின் இயற்பெயர் என்ன ?

=> காத்தவராயன்

5➤ அயோத்திதாசப் பண்டிதர் என பெயர் வரக் காரணம்

=> தனது ஆசிரியர் அயோத்திதாசர் மீது கொண்ட பற்றுதலால்

6➤ அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய இதழின் பெயர் என்ன ?

=> ஒரு பைசாத் தமிழன் (1907- காலணா விலை )

7➤ அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் யாவை ?

=> போகர் எழுநூறு,அகத்தியர் இருநூறு,சிமிட்டு ரத்தினச் சுருக்கம், பால வாகடம்

8➤ "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் அயோத்திதாசரும் தங்க வயல் அப்பாதுரையும் எனக் கூறியவர்

=> தந்தை பெரியார்

9➤ அயோத்திதாசர் எழுதிய நூல்கள்

=> புத்தரது ஆதி வேதம், இந்திரர் தேச சரித்திரம்,விவாக விளக்கம்,புத்தர் சரித்திரப்பா

10➤ திருவள்ளுவர். ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கம் எழுதியவர்

=> அயோத்திதாசர்

11➤ திராவிட மகாஜன சங்கம் ஆரம்பித்தவர் யார்? எப்போது?

=> அயோத்திதாசர் 1892
ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் கொள்கைகளை வலியுறுத்தவும்

12➤ விடுதலை என்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் எனக் கூறியவர்

=> அயோத்திதாசர்

13➤ அயோத்திதாசரை முன்னோடிகளாக ஏற்றுக் கொண்டவர்கள் யார் ?

=> தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்

14➤ அயோத்திதாசர் அறிந்திருந்த மொழிகள் யாவை ?

=> பாலி, வடமொழி, ஆங்கிலம்

15➤ ஒரு மனிதன் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமானால் கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்

=> அயோத்திதாசர்

வகுப்பு 10 - அணி, பா. வகை |- தானே மதிப்பிடும் மீட்டுணர் வகை வினாக்கள்

1➤ இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

=> தற்குறிப்பேற்ற அணி எனப்படும்

2➤ போருழந் தெ டுத்த ஆரெயில் - இடம்பெற்றுள்ள அணிவகை

=> தற்குறிப்பேற்ற அணி

3➤ தீவகம் என்ற சொல்லுக்கு .......என்று பொருள்

=> விளக்கு

4➤ செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்திளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி வருவது...... அணி எனப்படும்

=> தீவக அணி

5➤ தீவக அணி எத்தனை வகைப்படும் ?

=> 3 வகைப்படும் (முதல் நிலைத் தீபகம் இடைநிலைத் தீவகம் கடைநிலைத்தீவகம்

6➤ சேந்தன வேந்தன் திருநெடுங்கன்- இவ் அடிகளில் இடம்பெற்றுள்ள அணி வகை

=> தீவக அணி

7➤ சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அதன்படி பொருள் கொள்வது.... அணி எனப்படும்

=> நிரல்நிறை அணி எனப்படும்

8➤ உண்மையான இயல்புத்தன்மையினை கேட்டவர்களின் மனமகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது ........அணியாகும்

=> தன்மையணி

9➤ தன்மையணி எத்தனை வகைப்படும் ?

=> 4. ( பொருள் தன்மையணி, குணத் தன்மையணி சாதித்தன்மையணி, தொழில் தன்மையணி

10➤ மெய்யிற் பொடியும் விரிந்த கருங்குழலும் - பாடல் அடியில் அமைந்துள்ள அணி

=> தன்மையணி

11➤ தன்மையணி ........ என்றும் அழைக்கப்படும்

=> தன்மை நவிற்சி அணி

12➤ எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும்- எனக் குறிப்பிடும் நூல்

=> தண்டியலங்காரம்

13➤ யாப்பின் உறுப்புகள் எத்தனை ?

=> 6

14➤ பா எத்தனை வகைப்படும் ?

=> 4

15➤ வெண்பாவிற்குரிய ஓசை என்ன ?

=> செப்பல் ஓசை

16➤ ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசை என்ன ?

=> அகவலோசை

17➤ கலிப்பாவுக்கு உரிய ஓசை என்ன ?

=> துள்ளல் ஓசை

18➤ வஞ்சிப்பாவுக்குரிய ஓசை என்ன ?

=> தூங்கல் ஓசை

19➤ வெண்பாக்கள் எத்தனை வகைப்படும் ?

=> 5 (குறள் , சிந்தியில், நேரிசை, இன்னிசை, பஃறொடை )

20➤ ஆசிரியப்பா எத்தனை வகைப்படும் ?

=> 4 (நேரிசை, இணைக்குறள் நிலைமண்டில / அடிமறி மண்டில )

21➤ இருவர் உரையாடுவது போன்ற ஓசை......

=> செப்பல் ஓசை

22➤ ஒருவர் பேசுதல் போன்ற ஓசை (சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை)

=> அகவலோசை

23➤ கன்று துள்ளினாற் போலச் சீர் தோறும் துள்ளி வரும் ஓசை......

=> துள்ளல் ஓசை

24➤ சீர்தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை (தாழ்ந்தே வருவது வருவது

=> தூங்கல் ஓசை

25➤ ஏகாரத்தில் முடியும் பா வகை

=> ஆசிரியப்பா (அகவற்பா )

வகுப்பு - 8.சட்ட மேதை அம்பேத்கர். மீட்டுணர் வினாக்கள் இயங்கலை வடிவில்

 

1➤ இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?

=> அம்பேத்கர்

2➤ அம்பேத்கர் எந்த ஆண்டு பிறந்தார் ?

=> 1891 ஏப்ரல் 14

3➤ அம்பேத்கரின் பெற்றோர் பெயர் யாது ?

=> ராம்ஜிசக்பால் - பீமா பாய்

4➤ அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் யாது ?

=> மகாதேவ் அம்பேத்கர்

5➤ அம்பேத்கர் தனது இளங்கலை பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்

=> மும்பை பல்கலைக்கழகம் 1912 ல்

6➤ அம்பேத்கருக்கு உதவி செய்த பரோடா மன்னர் பெயர் யாது ?

=> சாயாஜிராவ்

7➤ அம்பேத்கர் அமெரிக்காவில் எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்

=> கொலம்பியா பல்கலைக்கழகம்

8➤ பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக எந்தப் பட்டத்தை பெற்றார்

=> முதுகலைப் பட்டம் 1915

9➤ அம்பேத்கர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் பெயர்

=> இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் , இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்

10➤ அம்பேத்கரின் எந்த ஆய்வுக் கட்டுரைக்கு முனைவர் பட்டத்தை கொலம்பியா பல்கலைக்கழகம் வழங்கியது

=> இந்தியாவின் தேசிய பங்கு வீதம்

11➤ அம்பேத்கர் லண்டன் சென்றதற்கான காரணம்

=> பொருளாதாரம் படிப்பிற்காக 1920

12➤ எந்த ஆய்வுக் கட்டுரைக்காக இங்கிலாந்து முனைவர் பட்டம் வழங்கியது

=> ரூபாய் பற்றிய பிரச்சனை (1923)

13➤ ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை அம்பேத்கரால் துவங்கப்பட்டது

=> 1924

14➤ அம்பேத்கர் எந்த ஆண்டு வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டார்

=> 1930

15➤ இரட்டை வாக்குரிமை குறித்து எந்த வட்டமேசை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது

=> இரண்டாம் வட்டமேசை மாநாடு

16➤ பூனா ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே ஏற்படுத்தப்பட்டது ?

=> அம்பேத்கர் - காந்தி (1931 SEP 24)

17➤ ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக தனித் தொகுதி என்று எந்த ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது ?

=> பூனா ஒப்பந்தம்

18➤ அம்பேத்கர் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?

=> சுதந்திரத் தொழிலாளர் கட்சி 1935

19➤ அம்பேத்கர் நடத்திய இதழின் பெயர் என்ன ?

=> ஒடுக்கப்பட்ட பாரதம் 1927

20➤ சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கரால் துவங்கப்பட்ட அமைப்பு

=> சமாஜ் சமாத சங்கம்

21➤ நாசிக் கோயில் நுழைவுப் போராட்டம் எந்த ஆண்டு அம்பேத்கரால் துவங்கப்பட்டது

=> 1930

22➤ இந்திய அரசியல் சாசன சபையின் தலைவர் யார் ?

=> அம்பேத்கர்

23➤ இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது ?

=> 7

24➤ இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு எந்த ஆண்டு தனது அறிக்கையினை ஒப்படைத்தது

=> 1948 பிப் 21

25➤ மிகச் சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுவது

=> இந்திய அரசியலமைப்புச் சட்டம்

26➤ அம்பேத்கர் எழுதிய புத்தகம்

=> புத்தரும் அவரின் தம்மமும்

27➤ புத்தரும் அவரின் தம்மமும் வெளிவந்த ஆண்டு

=> 1957

28➤ அம்பேத்கர் எந்த ஆண்டு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்

=> 1956 OCT 14

29➤ அம்பேத்கர் இறந்த ஆண்டு

=> 1956 டிசம்பர் 6

30➤ அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

=> 1990

Sunday 10 December 2023

கதை நூல்களும்- நூலாசிரியர்களும் ( வகுப்பு - 10 தமிழ்)

வ.எகதை நூல்கள்நூலாசிரியர்கள்
1புதிய உரைநடைஇராமலிங்கம் என்னும் (எ)எழில் முதல்வன்
2இனிக்கும் நினைவுகள், எழில் முதல்வன்
3எங்கெங்கு காணினும்எழில் முதல்வன்
4யாதுமாகி நின்றாய்எழில் முதல்வன்
5உரைநடையின் அணிகலன்கள்எழில் முதல்வன்
6புயலிலே ஒரு தோணி (புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்)ப .சிங்காரம்
7கோபல்லபுரத்து மக்கள்கி. ராஜநாராயணன்
8புதிய நம்பிக்கைகமலாலயன்
9உனக்குப் படிக்கத் தெரியாதுகமலாலயன் (குணசேகரன்)
10பாய்ச்சல்சா கந்தசாமி
11தக்கையின் மீது நான்கு கண்கள்சா.கந்தசாமி
12சாயாவனம் (புதினம்)சா கந்தசாமி
13விசாரணைக் கமிஷன் (புதினம்)சா கந்தசாமி
14சுடுமண் சிலைகள் (குறும்படம்)சா.கந்தசாமி
15தொலைந்து போனவர்கள்,சூர்யவம்சம், சாந்தகுமாரிசா. கந்தசாமி
16சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)ஜெயகாந்தன்
17உன்னைப்போல் ஒருவன் (திரைப்படம்)ஜெயகாந்தன்
18குரு பீடம், யுக சந்தி,ஒரு பிடி சோறு ,உண்மை சுடும் , இனிப்பும் கரிப்பும் , தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்
19பிரளயம், கை விலங்கு , ரிஷி மூலம், பிரம்ம உபதேசம் , யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல , சினிமாவுக்குப் போன சித்தாளுஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள்
20பாரிசுக்கு போ, சுந்தர காண்டம் , உன்னைப்போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் , இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்
21தர்க்கத்திற்கு அப்பால்ஜெயகாந்தன்

வகுப்பு - 10 நூல்களும் - நூலாசிரியர்களும்

வரிசை எண்நூல்கள்நூலாசிரியர்கள்
1அன்னை மொழியேபாவலரேறு பெருஞ்சித்திரனார்
2பாவியக் கொத்து, நூறாசிரியம் , கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்
3ஆழிக்கு இணை (இரட்டுறமொழிதல்)சந்தக்கவிமணி தமிழழகனார்
4காற்றே வாபாரதியார்
Sகுயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்பாரதியார்
6முல்லைப்பாட்டுநப்பூதனார்
7காசிக் காண்டம்அதிவீரராம பாண்டியர்
8வெற்றிவேற்கை (நறுந்தொகை)அதிவீர ராம பாண்டியர்
9லிங்க புராணம், வாயு சம்கிதைஅதிவீர ராம பாண்டியர்
10திருக்கருவை அந்தாதி , கூர்ம புராணம்அதிவீரராம பாண்டியர்
11மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)பெருங்கௌசிகனார்
12பெருமாள் திருமொழிகுலசேகர ஆழ்வார்
13பரிபாடல் (விசும்பில் ஊழி)கீரந்தையார்
14நீதி வெண்பாகா ப செய்கு தம்பிப் பாவலர்
15திருவிளையாடற் புராணம்பரஞ்ஜோதி முனிவர்
16வேதாரண்யப் புராணம்பரஞ்சோதி முனிவர்
17மதுரை பதிற்றுப்பத்தந்தாதிபரஞ்சோதி முனிவர்
18பூத்தொடுத்தல்உமா மகேஸ்வரி
19நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது,கற்பாவைஉமா மகேஸ்வரி
20முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
21கந்தர் கலிவெண்பா,நீதி நெறி விளக்கம்குமரகுருபரர்
22மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்
23மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லி மாலைகுமரகுருபரர்
24திருவாரூர் மும்மணிக் கோவைகுமரகுருபரர்
25கம்பராமாயணம்கம்பர்
26சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதிகம்பர்
27திருக்கை வழக்கம்,ஏரெழுபது, சிலை எழுபதுகம்பர்
28ஏர் புதிதா ?கு.ப.ராஜகோபாலன்
29சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்
30ஞானம்தி .சொ.வேணுகோபாலன்
31மீட்சி விண்ணப்பம்தி.சொ.வேணுகோபாலன்
32காலக்கணிதம்கண்ணதாசன்
33சேரமான் காதலி (புதினம்)கண்ணதாசன்
34சித்தாளுநாகூர் ரூமி
35நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்நாகூர் ரூமி (முகம்மது ரஃபி)
36தேம்பாவணிவீரமாமுனிவர்
37சதுரகராதிவீரமாமுனிவர்
38தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்
39பரமார்த்தக் குருகதைகள்வீரமாமுனிவர்
40உலகியல் நூறு,எண் சுவை எண்பதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்
41மகபுகுவஞ்சி,பள்ளிப்பறவைகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்