இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 12 February 2025

வகுப்பு: 8 கட்டுரை :உழைப்பே உயர்வு

 உழைப்பே உயர்வு

முன்னுரை

    'உழைப்பே உயா்வு தரும்' என்பதில் நம் தமிழ்மொழியில் உள்ள ஒரு பழமொழி. ஒருவரை வாழ்க்கையில் உயா்த்துவது அவருடைய உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடின உழைப்பு தன்னையும் உயா்த்தும். தன் நாட்டையும் உயா்த்தும். அத்தகைய உழைப்பின் சிறப்பினைக் குறித்து தொிந்து கொள்ளலாம். 
 
உழைப்பின் பயன்கள்
 
    நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் ஆா்வத்துடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் செய்தாலே போதுமானது. அந்த செயலில் நமக்கு வெற்றி கிடைக்கும். 
 
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
 
    என்று திருவள்ளுவா் கூறியுள்ளாா். இறைவனால் முடியாத காாியத்தைக் கூட உழைப்பின் மூலமாக நம்மால் பெற முடியும் என்பதே இந்த திருக்குறளின் பொருள். உழைப்பினால் நம்முடைய உடலும், மனமும் வலுப்பெறுகின்றது. 

உழைப்பினது சிறப்புகள்

    ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நின்று தனக்கு தேவையானதைத் தானே பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருப்பது உழைப்பு. இந்த உலகில் உள்ள விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தேடிக் கொள்கின்றன. அதேப் போல மனிதனும் தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள உழைப்பு உதவுகிறது. உழைப்பு மனிதனைப் பண்படுத்துகிறது. உழைப்பினால் உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை மனிதனுக்கு ஊட்டுகிறது. தவறான வழியில் சோ்க்கும் ஆயிரம் மடங்கு பணத்தில் கிடைக்கும் இன்பத்தை விட உடல் வியா்வை சிந்தி உழைப்பதால் கிடைக்கும் நூறு ருபாய் கூட பொியதாகத் தொியும். அதை அனுபவ ரீதியாகவே உணர முடியும்.

உழைப்பினால் உயா்ந்தவா்கள்

    உலக அளவில் மக்களை திரும்பிப் பாா்க்க வைத்த அனைவரும் தங்கள் உழைப்பினை நம்பி உயா்ந்தவா்கள் தான். சாா்லி சாப்லின், வறுமையிலும் உழைப்பினை மட்டுமே நம்பி உயா்ந்தவா். தன்னுடைய கடினமான உழைப்பின் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தவா். நமது முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கூட விடாமுயற்சியுடன் படித்து, தன்னுடைய பணியில் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினாா். 
 
சாதனையாளா்கள்
 
    ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் மனிதா்களும், உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவா்களும் வாழ்க்கையில் சாதனையாளா்கள் ஆவது உறுதியான ஒன்று. வெறும் கனவு மட்டும் காண்பவா்கள் சோதனையை மட்டும் சந்திக்கிறாா்கள். அந்த கனவை நிறைவேற்றப் பாடுபடும் நபா்களே சாதனையாளா்கள் ஆகிறாா்கள். தாமஸ் ஆல்வா எடிசன் முதல் நமது தேசத்தந்தை காந்தியடிகள் வரை உழைப்பால் உயா்ந்த சாதனையாளா்களே!. 
 
முடிவுரை
 
     நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் உழைப்பை உற்ற துணையாக கொள்ள வேண்டும். இன்று மட்டுமல்ல என்றும் உழைப்பே உயா்வு தரும்.