இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 26 February 2025

கல்வெட்டுகள் - தமிழ் பிராமி எழுத்து

 தமிழி என்ற சொல் எங்கிருந்து வந்தது ?

முற்காலத் தமிழகத்தில் தமிழ் மொழியினை எவ்வாறு எழுதினார்கள் தெரியுமா? பனைஓலைச் சுவடி, நடுகல், பானை ஓடுகள், பறைகளின்மீது கல்வெட்டுப் பொறிப்பு, செப்பேடு ஆகிய ஊடகங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதினார்கள். ஓலைச் சுவடிகள் காலவெள்ளத்தில் அழிந்து போயின. அகழ்வாய்வுகளில் பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. எழுத்துப் பொறிப்புப் பெற்ற நடுகற்கள், எழுத்துப் பொறிப்புப் பெற்ற பாறைகள், பலகைக் கற்கள், சிற்பங்கள், செப்பேடுகள் ஆகிய ஆவணங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழி (தமிழ் பிராமி), தமிழ், வட்டெழுத்து ஆகிய எழுத்து (வரி) வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர்

.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு

முதலில் குறிப்பிட்ட தமிழி (தமிழ் பிராமி) வரி வடிவத்தில் கல்வெட்டுகள் பண்டைக் காலத்து சமணர் குகைகள், பாளிகள், பாறைகள் ஆகிய ஊடகங்களின் மீது பொறிக்கப்பட்டன. இதுவே காலத்தால் முந்தைய தமிழ் வரிவடிவம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கு முந்தைய வரிவடிவமாகக் தமிழ்க் குறியீடுகள் கருதப்படுகின்றன. இந்தத் தமிழ் வரி வடிவம் தமிழி மற்றும் தமிழ் பிராமி ஆகிய இரு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பெயர்கள் உள்ளது என்றால் இருவேறு சாரார் இருக்கவேண்டும் அல்லவா?ஆமாம் ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகிறார்கள். வேறு சிலரோ தமிழ் பிராமி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். ஏன் இந்தக் கருத்து வேறுபாடு?

மௌரியப் பேரரசன் அசோகனின் காலத்தில் பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டு வலிமை வாய்ந்த பேரரசாக மௌரியப் பேரரசு திகழ்ந்தது. அசோகப் பேரரசர் கலிங்கப் போரினால் தனக்குள் ஏற்பட்ட விரக்தியினை விட்டகலும் நோக்கில் தர்ம நெறிகளைப் பின்பற்றினார். இந்த தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அரும்பணிகளை ஆற்றினார். தன்னுடைய தர்மத்தை மக்களிடையே பரப்பும் நோக்கில் தன்னுடைய செய்தியினை பல கல்வெட்டு சாசனங்களை நாடெங்கும் பொறித்து வைத்தார். அசோகன் காலத்திய அரசியல், இம்மன்னன் கடைப்பிடித்த மத சகிப்புத்தன்மை, நிர்வாக முறைகள், விரும்பி ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவற்றை இக்கல்வெட்டுச் சாசனங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இந்தச் சாசனங்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சாசனங்கள் பிராமி என்னும் வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டிருந்தன.

இதே அசோகனது காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல்வெட்டுகள் தமிழகத்தில் இருந்த இயற்கை குகைத் தளங்களிலும் கண்டறியப்பட்டன. தமிழகத்தின் குகைத்தள கல்வெட்டு வரி வடிவங்களுக்கும் அசோகனது கல்வெட்டு சாசன வரி வடிவங்களுக்கும் சில ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டது. பிராமி எழுத்து வடிவம் வடநாட்டிலேயே தோன்றியது என்றும் இதன் அடிப்படையிலேயே தமிழகத்தின் குகைத்தளங்களில் பிராமி வரி வடிவக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அசோகனது சாசன வரி வடிவத்திற்கு வடபிராமி என்று பெயரிட்டு அழைத்தார்கள். தமிழகத்தின் குகைத்தள கல்வெட்டு வரி வடிவத்திற்கு தென்பிராமி என்று பெயரிட்டு அழைத்தார்கள்.


தமிழகக் குகைக் கல்வெட்டு காட்டும் தென்பிராமி வரி வடிவத்திற்கும் அசோகனது சாசனம் காட்டும் வட பிராமி வரி வடிவத்திற்கும் சிற்சில நிலைகளில் வேறுபாடுகள் இருப்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன் அவர்களும் டாக்டர். இரா. நாகசாமி அவர்களும் கண்டறிந்தனர். புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழகத்தின் குகைக் கல்வெட்டு வரி வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைத்தார்.

டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் தமிழகக் குகைத்தளங்களில் கண்டறியப்பட்டுள்ள பிராமி வரி வடிவத்தில் தமிழ் மொழிக்கான தனித்தன்மைகள் இருப்பதனைக் கண்டறிந்தார். தமிழ்-பிராமி வரி வடிவத்தை வட பிராமி வரி வடிவத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், தமிழ்-பிராமி வரி வடிவத்திற்கு தமிழி என்று பெயரிட்டு அழைப்பதே சிறப்பானது என்ற வாதத்தை முன் மொழிந்தார். தமது வாதத்திற்கு வலு சேர்க்க இரண்டு சான்றுகளையும் எடுத்து வைத்து விளக்கியுள்ளார்.

சமவயங்க சுத்த என்பது கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்டசமண சமய நூலாகும். இந்த நூலில் 18 வகை வரி வடிவங்கள் (எழுத்துகள்) பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றாக ‘தம்ளி’ என்ற எழுத்து வடிவமும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர்கள் தம்ளி என்றே ஒலித்துள்ளனர்.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் ‘லலித விஸ்தாரம்’ என்ற பௌத்த நூல் இயற்றப்பட்டுள்ளது. பிராகிருத மொழியில் உள்ள இந்நூலில் தமிழ் எழுத்துகள் "தமிழி", "திராவிடி" என்று குறிப்பிடப்படுகின்றன. திராவிடி என்பது பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்த சொல்லாகக் கருதப்படுகிறது.

பொருந்தல் அகழாய்வில் கண்டறியப்பட்ட, முதல் நெல் மாதிரிக்கான காலக்கணிப்பை வெளியிடப்பட்டது. இந்த காலக்கணிப்பின் அடிப்படையில் ஐராவதம் மகாதேவன் மற்றும் டாக்டர். சுப்பராயலு ஆகியோர், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்ற கருத்தை மறுத்துள்ளனர். திரு. கே.வி. இரமேஷ், இயக்குநர், அகழாய்வுத்துறை (ஓய்வு) தமிழ் பிராமி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று சான்றுகளுடன் நிறுவியுள்ளார். மாங்குளம் தமிழ் கல்வெட்டுப்பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்பது இவர் வாதம். பொருந்தல் கண்டுபிடிப்புகள் இவர் கருத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இவர் கூறுகிறார்.

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது.

பார்வை:

  1. தமிழ் எழுத்தின் பழமை. கணியன் பாலன் கீற்று 08 ஜூலை 2012
  2. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள். மா.பவானி. தமிழ் இணையக் கல்விக் கழகம்.
  3. An epigraphic perspective on the antiquity of Tamil.Iravatham Mahadevan The Hindu. June 24, 20

Wednesday, 12 February 2025

வகுப்பு: 8 கட்டுரை :உழைப்பே உயர்வு

 உழைப்பே உயர்வு

முன்னுரை

    'உழைப்பே உயா்வு தரும்' என்பதில் நம் தமிழ்மொழியில் உள்ள ஒரு பழமொழி. ஒருவரை வாழ்க்கையில் உயா்த்துவது அவருடைய உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடின உழைப்பு தன்னையும் உயா்த்தும். தன் நாட்டையும் உயா்த்தும். அத்தகைய உழைப்பின் சிறப்பினைக் குறித்து தொிந்து கொள்ளலாம். 
 
உழைப்பின் பயன்கள்
 
    நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் ஆா்வத்துடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் செய்தாலே போதுமானது. அந்த செயலில் நமக்கு வெற்றி கிடைக்கும். 
 
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”
 
    என்று திருவள்ளுவா் கூறியுள்ளாா். இறைவனால் முடியாத காாியத்தைக் கூட உழைப்பின் மூலமாக நம்மால் பெற முடியும் என்பதே இந்த திருக்குறளின் பொருள். உழைப்பினால் நம்முடைய உடலும், மனமும் வலுப்பெறுகின்றது. 

உழைப்பினது சிறப்புகள்

    ஒவ்வொருவரும் சொந்தக் காலில் நின்று தனக்கு தேவையானதைத் தானே பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருப்பது உழைப்பு. இந்த உலகில் உள்ள விலங்குகளும், பறவைகளும் தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தேடிக் கொள்கின்றன. அதேப் போல மனிதனும் தனக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள உழைப்பு உதவுகிறது. உழைப்பு மனிதனைப் பண்படுத்துகிறது. உழைப்பினால் உயர முடியும் என்ற தன்னம்பிக்கையை மனிதனுக்கு ஊட்டுகிறது. தவறான வழியில் சோ்க்கும் ஆயிரம் மடங்கு பணத்தில் கிடைக்கும் இன்பத்தை விட உடல் வியா்வை சிந்தி உழைப்பதால் கிடைக்கும் நூறு ருபாய் கூட பொியதாகத் தொியும். அதை அனுபவ ரீதியாகவே உணர முடியும்.

உழைப்பினால் உயா்ந்தவா்கள்

    உலக அளவில் மக்களை திரும்பிப் பாா்க்க வைத்த அனைவரும் தங்கள் உழைப்பினை நம்பி உயா்ந்தவா்கள் தான். சாா்லி சாப்லின், வறுமையிலும் உழைப்பினை மட்டுமே நம்பி உயா்ந்தவா். தன்னுடைய கடினமான உழைப்பின் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தவா். நமது முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாம் அய்யா அவா்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கூட விடாமுயற்சியுடன் படித்து, தன்னுடைய பணியில் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினாா். 
 
சாதனையாளா்கள்
 
    ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் மனிதா்களும், உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவா்களும் வாழ்க்கையில் சாதனையாளா்கள் ஆவது உறுதியான ஒன்று. வெறும் கனவு மட்டும் காண்பவா்கள் சோதனையை மட்டும் சந்திக்கிறாா்கள். அந்த கனவை நிறைவேற்றப் பாடுபடும் நபா்களே சாதனையாளா்கள் ஆகிறாா்கள். தாமஸ் ஆல்வா எடிசன் முதல் நமது தேசத்தந்தை காந்தியடிகள் வரை உழைப்பால் உயா்ந்த சாதனையாளா்களே!. 
 
முடிவுரை
 
     நம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் உழைப்பை உற்ற துணையாக கொள்ள வேண்டும். இன்று மட்டுமல்ல என்றும் உழைப்பே உயா்வு தரும்.